<$BlogRSDUrl$>

நவரெத்தினங்களின் குணங்கள்

முத்து _ நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் _ கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றர்ல குதிரை தும்மும். பச்சைக்கல் _ குத்து விளக்கு முன்பு (ஒளியின்) காண்பித்தால் சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் _ சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம்: உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் _ பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும் வைடூரியம் _ பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் _ பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

ஈழமும் யசீர் அரபாத்தும்

ஈபலஸ்தீன மக்கள் தம் 'தந்தை" என்று மதித்துப் போற்றும் பலஸ்தீனத்தின் மாபெரும் தலைவன் யசீர் அரபாத் 11.11.2004 அன்று காலையில் தனது 75 ஆவது அகவையில் பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் உயிர் நீத்தது பலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்ல விடுதலை வேட்கையுடைய அனைவருக்கும் ஓர் பேரிழப்பாகும். 1929 இல் எகிப்தில் கெய்ரோ நகரில் பலஸ்தீன பெற்றோருக்கு மகனாக தோன்றிய இவர் 1933 - 49 வரை ஜெருசலேத்தில் தனது மாமனுடன் வாழ்ந்து 1949 இல் குடியியல் பொறியியலாளராக பட்டம் பெற்றார். 1956 இல் எகிப்திய இராணுவத்தில் பணியாற்றிய இவர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பி.எல்.ஓ.) அவ்வாண்டே உருவாக்கினார். பி.எல்.ஓ. அமைப்பை வழி நடத்தி இவர் அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 1971 இல் பலஸ்தீன விடுதலை அமைப்பை ஜோர்தான் புறந்தள்ளியதால் லெபனானில் இவருடைய பணி அமைந்திருந்தது. 1974 இல் ஐ.நா. மன்றத்தில் ஒரு கையில் அமைதியின் சின்னமான ஒலிவ் இலையையும் மற்றைய கையில் துப்பாக்கியையும் ஏந்திய நிலையில் ஐ.நா. மன்றத்தில் இவர் நிகழ்த்திய முதல் உரை வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்.1982 இல் லெபனான் பெய்ரூட்டில் இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் தாக்கியதன் விளைவாக அவர் துனிசியாவுக்குச் சென்றார். 1988 இல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பு என்று கூறி இஸ்ரேல் தடை செய்தது. எம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு அண்மைக் காலம் வரை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்து முறையாக இயங்க முடியாதவாறு தடைசெய்தது. இலங்கையைப் பொறுத்த வரையிலும் இவ்வியக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட போதும் அமெரிக்காஇ இங்கிலாந்து போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் மேல் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது. இந்நிலையிலும் தன் தாயகத்தை மீட்க யசீர் அரபாத் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவருடைய வீரம் செறிந்த வரலாறுக்கு சான்று பகரும்.தம்மை அழிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு நல்குவதை எதிர்த்து வளைகுடா மோதலின் போதுஇ சதாம்சைனுக்கு தார்மீக ஆதரவு இராஜ தந்திர அடிப்படையில் இவர் வழங்கியது இன்று குறிப்பிடத்தக்கது.1993 இல் நோர்வேயின் தலை நகராகிய ஒஸ்லோவில் இஸ்ரேல்- பலஸ்தீன போரை முடிவிற்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக இவருக்கும் அன்றைய இஸ்ரேல் பிரதமர் ராபினுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை எதிர்த்து இஸ்ரேலின் அமைச்சரை யுதர்கள் சுட்டது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இவை அனைத்தையும் கடந்த நிலையில் அமைதிக்காக பாடுபட்டதற்காக அரபாத்திற்கும் இஸ்ரேல் பிரதமர் ராபினுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் வாழ்வின் உச்சக் கட்டமாக 1996 இல் நடைபெற்ற தேர்தலில் பலஸ்தீன மக்கள் இவரை தம் தலைவராக தேர்ந்தெடுத்து நிர்வாகத்தை இவர் கையில் ஒப்படைத்தனர்.இவ்விதம் வாழ்நாள் முழுவதும் பலஸ்தீன மண்ணை மீட்பதற்கு தம் உயிரை துச்சமென மதித்துப் போராடிய யசீர் அரபாத்தின் இறுதிக் கால வாழ்வு துன்பம் தோய்ந்ததாகவே விளங்கியது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக யசீர் அரபாத் ரம்லாவிலுள்ள மாளிகையில் இருந்து வெளியே வரமுடியாதபடி வீட்டுச் சிறையிலே வைத்து அவரை இஸ்ரேலியர் துன்புறுத்தினர்.இவ்வாறு மக்களுக்காக அவர் நடாத்திய போராட்ட வாழ்வு தற்போது நிறைந்துள்ளது.இவ்வேளையில் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் யசீர் அரபாத் நடாத்திய பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டென்பதை நாம் மறக்க முடியாது.இப்போராட்டத்திலுள்ள ஓர் அடிப்படை வேறுபாடு யசீர் அரபாத் இழந்த பலஸ்தீனத்தை மீட்கப் போராடினார். எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனோ இருக்கின்ற தமிழீழ மண்ணை இழக்காதிருக்கப் போராடுகின்றார். ஒன்றுஇ இழந்த மண்ணை மீட்க நடாத்திய போராட்டம் மற்றது இருக்கின்ற மண்ணை இழக்காதிருக்க போராடும் போராட்டம். எனவேஇ தமிழீழப் போராட்டம் வரலாற்று அடிப்படையிலும்இ வாழ்வியல் - அளவியல் அடிப்படையிலும் வலுவுடையது என்பதை நாம் உணர்வோமாக.ழமும் யசீர் அரபாத்தும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

தீபாவளி வந்த காரணம்

* இறைவன் மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுக்க வேண்டி நேர்ந்தது. இதனைத் தசாவதாரம் என்பார்கள். * முதலாவது அவதாரம் மச்சம் எனப்படும் மீனின் அவதாரம். இரண்டாவது அவதாரம் கூர்மம் எனப்படும் ஆமை அவதாரம். மூன்றாவது அவதாரம் வராகம் எனப்படும் பன்றி அவதாரம். * இவரை வராக மூர்த்தி என்றும் பூவராகன் என்றும் அழைத்தனர். அப்போது தன்னைக் காப்பாற்றிய இறைவனான திருமாலின் அருள் பெருக்கை வியந்து அவர் மேல் காதலானாள் பூமாதேவி. வராகரும் பூமாதேவியின் மேல் மையல் கொண்டார். எனவே, இருவரும் மணந்து கொண்டனர். * அவர்களுக்கு அற்புதமான ஒரு குழந்தை பிறந்தது. அவனுடைய பெயர் நரகன். அசுரத் தன்மையுடன் கூடியவனாக நரகன் விளங்கினான். எனவே, பிற உயிர்களைக் கொடுமையிலும் கொடுமை செய்து வந்தான். * நாளாக, ஆக அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போயின. அந்த நேரத்தில் திருமாலின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் தோன்றி இருந்தார். * நரகாசுரனிடம் தாங்கள் படும் கொடுமைகள் குறித்து அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களைத் தாம் காப்பாற்றுவதாக வாக்களித்தார் திருமாலான கிருஷ்ணர். * அந்த நாளில் சத்ராஜித்து என்ற மன்னனுடைய மகளாகப் பூமாதேவி தோன்றி இருந்தாள். அவளுடைய பெயர் சத்யபாமா. * சத்ராஜித்துவிடம் அற்புதமான ஒரு மணி இருந்தது. அது நரியனால் தரப்பட்ட மணி. அதன் பெயர் "ஸ்யமந்தகம்.' ஒருமுறை சத்ராஜித்துவிடம் அந்த மணியைத் தனக்குத் தருமாறு கேட்டார் கிருஷ்ணர். அவன் மறுத்து விட்டான். * பின்னொரு நாளில் சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்கு சென்றபோது அவனை ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கத்தை ராம பக்தரான ஜாம்பவான் கொன்று ஸ்யமந்தக மணியைக் கைப்பற்றி, தன் புத்திரி ஜாம்பவதிக்குப் பரிசாகத் தந்திருந்தார். * தன் தம்பியைத் தேடி காணாத சத்ராஜித்து அவனைத் தேடி காட்டிற்கு சென்ற போது அவனது இறந்த உடலை மட்டுமே காண முடிந்தது. * எனவே, மணியின் மேல் ஆசை கொண்ட கிருஷ்ணரே தன் தம்பியைக் கொன்றார் என்று பழி சுமத்தினான் மன்னன். * கிருஷ்ணர் தம் பழியைப் போக்கிக் கொள்ள மணியைத் தேடிக் காட்டிற்குள் புகுந்து ஜாம்பவதியைக் கண்டார். ஜாம்பவானும் கிருஷ்ணரும் போராடிய பின்னர் கிருஷ்ணரே ராமர். ராமரே கிருஷ்ணர் என்று உணரப்பட்டு ஜாம்பவதியுடன், அந்த மணியையும் ஒப்படைத்தார் ஜாம்பவான். ஜாம்பவதியைத் திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் சத்ராஜித் நாடு சென்று நடந்த விவரங்களைக் கூறி மணியை அவனிடம் ஒப்படைத்தார். * கிருஷ்ணரின் நேர்மையை மெச்சிய மன்னன் தன் புதல்வி சத்யபாமாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். * சத்யபாமா தேரோட்டுவதில் கெட்டிக்காரி. எனவே, நரகாசுரனுடன் போரிடும் போது தனக்கு அற்புதமான ரத சாரதி வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் சத்யபாமாவையே ரத சாரதியாக்கி நரகன் மேல் போர் தொடுத்தார். * இதற்கு இன்னொரு காரணம் இருந்தது. தன்னுடைய தாயாரின் கையினாலேயே தன் மரணம் நிகழவேண்டும் என்று நரகன் வரம் கேட்டிருந்தான். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். * நரகனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் போர் நடைபெற்றது. நரகனின் கூரிய அம்பு ஒன்றினால் மயக்கமடைந்தார் கிருஷ்ணர். தன் கணவர் தாக்கப்பட்டது கண்டு வெகுண்ட சத்யபாமா, கணவருக்கு பதில் தானே நரகனுடன் போரிட்டாள். * போரில் நரகன் படுகாயமடைந்து கீழே விழுந்தான். அவன் உயிர் ஊசலாடியது. இந்த நேரத்தில், வந்திருப்பவள் தன் தாய் என்பதை உணர்ந்து கொண்ட நரகன், தன் பெற்றோரைக் கையெடுத்து வணங்கினான். * கிருஷ்ணரும், சத்யபாமாவும் அவனருகே கருணை பொழிய வந்து நின்றனர். * ""நீங்கள் இருவரும் என் தாய், தந்தையர் என்பதை நான் உணர்ந்தேன். தெரியாமல் நான் அரிய, பெரிய பாவங்களைச் செய்து விட்டேன். என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்!'' என்று வேண்டினான் நரகன். * ""குழந்தாய், உனக்கு வேண்டிய வரம் யாது?'' என்று கேட்டார் கிருஷ்ணர். * ""நான் கொடியவன் ஆகையால் நான் உயிர் விடவே விரும்புகிறேன். நான் உயிர் விடும் இந்நாளை மக்கள் எல்லாரும் விரும்பிக் கொண்டாடி மகிழ்வர். அக்கொண்டாட்டம் இன்றுடன் நின்று விடக் கூடாது. ஒவ்வொர் ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடும்படி தாங்கள் அருளவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான் நரகன். * கிருஷ்ணர் புன்னகை புரிந்தவராக, அன்பனே, இன்று சதுர்த்தசி திதி. உன் நினைவாக இன்று முதல் "நரக சதுர்த்தி' என்று பெயர் உண்டாகட்டும். * இந்த விடியற்காலை வேளையில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் கங்கையில் குளித்த புண்ணியத்தை அடையட்டும்! * மக்கள் புதிய ஆடை, அணிகளை அணிந்து என்னை முறைப்படி பூஜைகள் செய்யட்டும். அப்படிச் செய்பவர்களுக்கு கிருஷ்ணனாகிய என்னுடைய அருளும், சத்யபாமாவின் அருளும் கண்டிப்பாக என்றென்றும் உண்டு. * "இந்த உலகம் உள்ள வரை மக்கள் உன்னை நினைத்து இதனை பெரியதொரு பண்டிகையாகக் கொண்டாடுவார்களாக' என்று அருள்புரிந்தார். * கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நரகாசுரன் அமைதி அடைந்தான். அவன் உயிர் பிரிந்தது. இது தான் நாம் தீபாவளி கொண்டாடுவதன் பின்னணி!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

முடிச்சுகள் அவிழட்டும்

ஒரே வாரத்தில் துக்கத்தையும், மங்களகரத்தையும் சந்தித்த வீடு, ராணி எனது தோழியினுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும். இன்று நினைக்கும் போது அந்த பசுமையான நினைவுகள் என்னில் எழும்புவதை தடுக்க முடியவில்லை. ஆறு குழந்தைகள் அடங்கிய அந்த குடும்பத்தின் முதல் கனியான என் தோழி ராணி, எனக்கு மிகவும் நெருக்கமானவள். அதற்குக் காரணம், அவளது தியாக உணர்வும், தன்னம்பிக்கையான துணிச்சலும்தான். தனது உடன் பிறப்புகளுக்காக தன் வாழ்வை தியாகம் செய்த சேவகி என்றும் சொல்லலாம். ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் தீர்வு காணப் போராடி இறுதியில் தங்கை திருமணம் நடைபெறும் என்ற ஆவலோடு காத்திருந்தவள் ராணி. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு, ராணியின் தந்தை ரத்தினம் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். மனதை தைரியப்படுத்தியவளாய், வீட்டின் கடின சூழலை மாற்ற முயற்சித்தாள் ராணி. விடிந்தால் திருமணம், இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம். மணப்பெண் ஸ்டெல்லாவிற்கு ஒரு புறம் மனதுக்கு உகந்த வாழ்வு, மறுபுறம் துக்கம். அப்போதுதான் அந்நிகழ்வு நடந்தது. ராணியின் அம்மா, தாம்பாளத்தட்டில் நலுங்குப் பொருட்களுடன் ஆரத்தி கரைத்து எடுத்து வர, அங்கு கூட்டத்தில் சலசலப்பு... தாலியிழந்தாச்சு, மூலையில் உக்காராம, இதென்ன கூத்து, என்று சிறுசு முதல் பெரிசு வரை, பேச, ராணியின் தாய் தட்டை வைத்து விட்டு, மூலையில் போய் அமர்ந்து அழுதாள். எத்தனை ஆசையாய்தன் மகளுக்கு, நலுங்குவிட ஆசைப்பட்டிருப்பாள், அத்தனையும் ஒரு வார்த்தையில் போனதே. கூட்டத்தின் சலசலப்பு பார்த்து ஓடிவந்தாள் ராணி. என்னப் பிரச்சனை ஸ்டெல்லா என்றாள் ராணி, அம்மாவ நலுங்குவிடக் கூடாதுன்னு சொல்றாங்க அக்கா. அதான் அம்மா அழறாங்க என்றாள் ஸ்டெல்லா. எங்கிருந்துதான் வந்ததோ அந்த துணிவு! சபை நடுவே ஒலி வாங்கியைப் பிடித்தவள் இடியென முழங்கத் தொடங்கினாள். பெரியோர்களே! நண்பர்களே! எங்களுக்கு எங்களது தாய்தான் முக்கியம். அக்கறையும், கரிசனையும், பாசமும் ஊட்டி வளர்த்தவள் தாய். அவள் மனம் குளிர, அவள் வாழ்த்த, அவள் ஆசிர்வாதத்தோடு நடைபெறும் எல்லாமே நல்லபடிதான் முடியும். நான்கு நாட்களுக்குள் கணவனை இழந்ததால், இத்தனை ஆண்டுகள் அவள் செய்த தியாகம், இழக்கப்படுவதில்லை, எஙëகளுக்கு தாயும், தந்தையுமான அவளே எங்கள் தெய்வம். அவளது ஆசிருடன் இந்த திருமணம் நடந்தால் நடக்கட்டும். இல்லையெனில், நாங்கள் இத்திருமணத்தை நிறுத்தவும் தயங்க மாட்டோம் என்றாள் ராணி. கூட்டமே ஸ்தம்பித்து போனது. மீண்டும் சலசலப்பு... ஆனாலும் இத்தனை துணிச்சல் கூடாது பெண்ணுக்கு என்று பல்வேறு பேச்சுக்கள். இறுதியாக ஒரு பாட்டி எழுந்தாள். அவ அம்மாவையை சடங்கு செய்ய அனுப்பு அவ மக சொல்லுறத போல தாய் ஆசிர்வாதத்த தவிர ஒரு மகளுக்கு வேற ஆசிர்வாதம் பெரிசில்ல. நீ சொல்றது சரிதாண்டி ராணி. உன் மனசு எங்களுக்கு இல்லாமல் போச்சே என்றாள் பாட்டி. கண்கள் பனிக்க திரும்பி தங்கையைப் பார்த்தாள் ராணி. மெல்ல தாயிடம் சென்றாள். அம்மாவின் முகத்தில் சோகத்தை மிஞ்சிய ஒரு சந்தோஷம், தெளிவு, திடம் தெரிந்தது. "இனியொரு விதி செய்வோம் இனி சதியல்ல சகியேசாதனை மட்டும்தான் சரியே"அங்கு ஒரு பெண்மை மேன்மையானது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

புலியா எலியா??

மனைவிக்கு கணவன் பயப்படுவது ஏன், எதற்கு?`வெளியே புலி. வீட்டில் எலி' - என்று சில ஆண்களை குறிப்பிடுவார்கள். வெளியே வீர சாகசம் செய்வார்கள், எதையும் தட்டிக்கேட்கும் ஆற்றலும் கொண்டவர்களாக சில கணவர்கள் இருப்பார்கள். ஆனால் வீட்டில் மனைவி சொல்வதற் கெல்லாம் ``ஆமாம்...'' போடுவார்கள். மனைவி செய்வது தவறு என்று தெரிந் தால் கூட வாயைத் திறக்காமலே இருந்து விடுவார்கள். சிலரோ இதைவிட எல்லாம் பல படி மேலே சென்று, மனைவியைப் பார்த்தாலே பயத்தில் உதறல் எடுக்கத் தொடங்கி விடுவார்கள். யார் யாருக்கெல்லாம் `மனைவி பயம்' ஏற்படும்? பெண் பார்க்கும்போதே, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஜோடி பொருத்தம் பார்ப்பார்கள். ஜோடி பொருத்தத்தில் இருவரது உடல்வாகு மட்டுமின்றி அழகையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சுமாரான அழகு கூட இல்லாத கணவனுக்கு, மிக அழகான மனைவி வாய்த்து விடும்போது அங்கே சிக்கல் தோன்றி விடும் வாய்ப்பு அதிகம். ``தனது அழகான மனைவியை தட்டிக்கேட்டால், அவள் தன் மீது கோபித்துக்கொண்டு தன்னை பிரிந்து சென்று விடுவாள்' என்று பயந்து இப்படிப்பட்ட கணவன்மார், மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டி பொம்மைகளாக இருப்பார்கள். சில நேரங்களில் மனைவி செய்யும் தவறை தட்டிக்கேட்கக்கூட இவர்களுக்கு தைரியம் இருக்காது. இப்படிப் பட்டவர்களில் பலர், திரு மணத்திற்கு முன்பு குடிகாரர்களாய் இருந்து, பின்பு திருந்தி இருக்கிறார்கள். அழகான மனைவி வாய்க்கும் போது, பயந்து காணப்படுவதைப்போல அதிகமான வரதட்சணை வாங்கிக்கொண்டு பயப்படும் கணவன் மார்களும் உண்டு. இவர்களும் மனைவிக்கு அடங்கியே நடப்பார்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்தாலோ, சண்டை போட்டாலோ மனைவி மூலம் கிடைக்கும் சுகபோகமும், செல்வமும் கையை விட்டு போய்விடும் என்று பயம் கொள்வார்கள். சில வகை வெளியே தெரியாத ஊனங்களை கொண்டவர்களும் மனைவிக்கு மனதளவில் பயப்படுவார்கள். மனைவியை பகைத்துக்கொண்டால், தனது பல கீனங்களை எல்லாம் வெளியே சொல்லி விடுவாள் என்று அவர்கள் பயப்படு வார்கள். இந்த பலகீனங்களில் செக்ஸ் பலகீனம் கூட இடம்பெறலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் கணவனும் மனைவியும் மனந்திறந்து பேச வேண்டும். அதற்குரிய பக்குவம் இருவருக்குமே தேவை. `மனைவியிடம் பேசினாலே சண்டைதான் வரும்' என்று சில ஆண்கள் சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்களில் பலரும் மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் தனது சொந் தக்காரர்களிடம், குடும்பத்தினரிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்களின் செயல், மனை விக்கு தெரிந்திருக்கும். அந்த குற்றத்தை மனைவி உற் றார் உறவினர்களிடம் சொல்லக் கூடாது என்பதற்காக, மனைவிக்கு பயந்து நடுங் குகிறவர்களும் உண்டு. ஆண்களில் சிலருக்கு தன் சுய நலத்தைவிட குழந்தைகள் நலம் முக்கியமாகத் தெரியும். மனைவி தவறு செய்கிறாள் என்பது தெரிந்தும், அந்த தவறை சுட்டிக்காட்டினால் குடும்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு, அது குழந் தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற பயத்துடன் வாழ்க்கையை கழிப்பவர்களும் உண்டு. சில பெண்கள் வன்முறை எண்ணம் கொண் டவர்களாக இருப்பார்கள். கணவர் நல்லது சொன்னால் கூட சுவரில் முட்டுவது, நெஞ்சில் குத்துவது, ஓ...வென்று அழுது ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். மனைவிக்கு காயமும், தனக்கு பணச் செலவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்துடன் வாழும் கணவர்களும்இருக்கிறார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

அழகின் அர்த்தம்

குளித்து முடித்து விட்டு தன் அறைக்குள் வந்தாள் சுமதி. எதிரே பொருத்தப் பட்டிருந்த ஆள் உயர கண்ணாடிக்கு முன் நின்றாள். உடம்பில் மாருக்கு மேலே கட்டப்பட்ட டவல். கீழே தொடை அழகை பளிச்சென காட்டியது கண்ணாடி. மெழுகுச் சிலையாக தன் மேனியை பிரதிபலித்துக் காட்டிய கண்ணாடிக்கு நன்றி சொன்னாள். இன்னும் இருபது நாளில் இந்த அழகு ஒருவனிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளாக மெருகேற்றி வளர்த்த அழகும், செழுமையும், எங்கிருந்தோ வரும் ஒருவனுக்கு சொந்தமாகப் போகிறது. ஆமாம்! சுமதியின் திருமணம் நடக்க இன்னும் இருபது நாட்கள்தான் இருக்கின்றன. இயற்கையிலேயே வனப்பும் வாளிப்பும் கொண்ட அழகுப்பதுமை சுமதியைப் பெண் பார்க்க வந்த தினேஷ், அப்போதே அங்கேயே சம்மதம் சொல்லி விட்டான். அழகுக்கு அழகு சேர்ப்பது போல வண்ணமயமான ஆடைக்குள் ஐக்கியமானது அவள் உடம்பு. தேவதை ஒன்று புறப்பட்டது போல தன் அறையைவிட்டு வெளியே வந்தாள். அவள் அம்மா மரகதம் ஹாலில் உட்கார்ந்திருந்தாள். மகள் சுமதியைக் கண்டதும் பரிவோடு சொன்னாள். ``சுமதி! அம்மன் கோவிலுக்கு போகணும்னு சொன்னியே, டிபன் ரெடியாகி இருக்கும். சாப்பிட்டுவிட்டு போயேன்!'' என்றாள். ``சரிம்மா! என்றாள் சுமதி. உடனே மரகதம், சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தாள்.'' ``அடியே.. சுப்பு! சுமதிக்கு டிபன் எடுத்து வை!'' வேலைக்காரி சுப்புவுக்கு ஆர்டர் பறந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலைக் காரி சுப்புவின் பணிவுக்குரல் வந்தது. ``அம்மா! ரெடியா எடுத்து வைச்சிருக்கேன். சாப்பிட வாங்க!'' டைனிங் டேபிளில் இருந்த இட்லியை பரிமாற ஆரம்பித்தாள் சுப்பு. தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்றினாள். கை தவறி சட்னி கரண்டி தடுமாறியது. சுமதியின் ஆடையில் சட்னி தெறித்தது. அவ்வளவு தான்! சட்னியில் உள்ள காரம், சுமதியின் முகத்தில் ஏறியது. கோபத் தால் முகம் சிவந்தது. `பட'டென வேலைக்காரி சுப்புவின் கன்னத்தில் ஓர் அறை வைத்தாள். ``உன் கண் என்ன குருடா.... இப்பத்தான் குளிச்சு முடிச்சு டிரஸ் பண்ணி வந்து உட்கார்ந் திருக்கேன். இப்படி அசிங்கப்படுத் திட்டியே!'' சுமதியின் சத்தம் கேட்டு மிரண்ட வேலைக்காரி சுப்பு, அடி விழுந்த தன் கன்னத்தை தடவியபடி சமை யறைக்குள் சென்று விட்டாள். மகளின் அடாத செயலைக்கண்டு பதறிப்போய் ஓடி வந்தாள் மரகதம். ``என்ன காரியம் பண்ணிட்டே சுமதி! உன் வயசென்ன... வேலைக்காரி சுப்பு வயசென்ன... கை நீட்டலாமா?'' ``அப்போ அவளை கொஞ்சணுமாக்கும். செய்த தவறுக்கு உடனே தண்டனை கொடுத்தேன். அது என்ன தப்பா?'' கோபம் குறையாமல் சுமதி கொதித்தாள். சுமதியின் தலையைக் கோதியபடி அமைதியாகப் பேச அமர்ந்தாள் மரகதம். ``சுமதி! அடுத்த வீட்டில் போய் வாழப்போற பெண்ணுக்கு முதலில் பொறுமை குணம் மிக மிக அவசியம். மணப்பெண் ஆகப்போற உனக்கு அழகு எக்கச்சக்கமா இருக்கு. மருமகள் ஆகப்போற உனக்கு பெண்மைக்குரிய அழகான, பொறுமை குணம் ரொம்ப அவசியம்!'' தன் தாய் சொன்ன பக்குவமான பாடம் சுமதியின் ஆழ் மனத்தில் பதிந்தது. உண்மையான அழகின் அர்த்தத்தை அப்போதுதான் புரிந்து கொண்டாள். அப்போதே வேலைக்கார பெண்மணியிடம் போய் மன்னிப்பு கேட்டாள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

உடன் பிறப்பு

``மீனாட்சி, உங்கண்ணன்கிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அவனோட மகனுக்கு, நம்மோட பொண்ண, குடுக்கணும்னு கேட்டு எழுதியிருக்கான். இது சம்பந்தமா பேசறதுக்கு இன்னும் பத்து நாள்லே வர்றானாம். ஆக்கங்கெட்டவன் வரட்டும். நாலு வீதிக்கு இழுத்து நாரடிச்சு அனுப்பறேன்... படவா ராஸ்கோல்...'' கணவன் கதிரேசனின் கனல் கக்கும் வார்த்தைகளை கேட்டு விட்டு அடுப்படி யிலிருந்து ஆவேசத்தோடு வந்த மீனாட்சி, அவனின் ஆக்ரோஷமான முகத்தைக் கண்டு, தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள். ``வந்ததுமா வராததுமா, இப்ப ஏன் எங்க அண்ணனை கரிச்சிக் கொட்றீங்க? அவனுக்கு நம்ம பொண்ண கேக்கறதுக்கு உரிமை இருக்கு, கேட்ருக் கான், குடுத்து சந்தோஷப் படறதுக்கு நமக்கு குடுப்பினை வேணும்...?'' ``வாய மூடு. இதுக்கு மேல பேசினே வெளக்குமாறு பிஞ்சுரும். ஏண்டி அன்னிக்கு ஊர் சனங்க முன்னாடி என்ன அவன் வீட்டு வாசல்ல நிறுத்தி, போடா வெளியேன்னு கழுத்துல கைய வச் சானே... மறந்துட்டியா'' அவன் பொண்டாட்டி, நாளும் கிழமைய மதிக்காத, மண்ணை வாரி தூத்தினாளே... மறந்துடுச்சாடி மாஞ்சி போனவளே? தபார், இப்ப சொல்றேன் கேட்டுக்க, நீ அவனுக்கு தங்கச்சியுமில்லே, அவன் உனக்கு அண்ணனும் இல்லே, புரிஞ்சுக்கோ...'' எரிச்சலில் கூச்சல் போட்டான் கதிரேசன். மீனாட்சி, கண்களில் கனிவையும், வார்த்தைகளில் வசியத்தையும் தேக்கிக் கொண்டவளாக வார்த்தைகளை நைச்சியமாக இறக்கினாள். ``என்னங்க இப்படி கோபப்படறீங்க? அன்னிக்கு எங்க அண்ணன் அப்படி நடந்துட்டதும், அண்ணிக்காரி அத்துமீறி நடந்துக்கிட்டதும் தப்புத்தாங்க, நா இல்லேங்கல, நீங்கதானே முதல்ல செருப்பைத் தூக்கிக் காட்டினீங்க...? அப்புறமாத்தானே அவங்க அப்படி நடந்துட் டாங்க. ஏங்க அது நடந்து பத்து வருசமாச்சு. இன்னும் அத நெனச்சி புலம்பிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? பழசையெல்லாம் மறந்துடுங்க. உறவுகள பகைச்சிட்டு ஊர்ப்பழிக்கு எதுக்குங்க ஆளாகணும்? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. எங்க அண்ணனுக்கும், அவங்க பையனுக்கும் என்ன குறைச்சல்?'' அடிபட்ட புலிபோல பாய்ந்தான் கதிரேசன். ``அடி செருப்பால, ஏண்டி போயும் போயும் உனக்கு புத்தி ஏண்டி இப்படி போகுது. அந்த அளவுக்கு நா ஒண்ணும் மானம் கெட்டுப் போயிடல, கிழிஞ்சி போன துணிகளை தச்சிக்கிற மாதிரி அறுந்து போன உறவுகள ஒட்டுப் போட முடியாதுடீ... எனக்கும் மானம் மரியாதை இருக்கு. சுயகவுரவம் இருக்கு. அவங்க சகவாசமே வேண்டாங்கறேன். சம்பந்தியா ஆகணும்னு பார்க்கிறீயா... அது தாண்டி நடக்காது...'' தீர்க்கமாக பேசி னான் கதிரேசன். கொதித்துப் போனாள் மீனாட்சி. ``ச்சீ... இவ்வளவுதானா உங்க புத்தி...? பணங் காசு, சொத்து, பத்து போச்சுண்ணா சம்பாதிச்சிக்கலாம். ஆனா உறவுங்கறது அப்படியில்லே, உங்கம்மாவுக்கு இன் னொரு தரம் நீங்க புள்ளயா பொறக்கப் போறீங்களா... இன்னொரு தரம் உங்க அண்ணனுக்கு நீங்க தம்பியா பொறக்கப் போறீங்களா? காலம் கெட்டா பிரிஞ்சிக்கிற மாதிரி நேரம் வந்தா கூடிக்கறது புத்தி சாலித்தனம். அதுதா உறவு, பத்து பாசங் கறது. முதல்ல அதப் புரிஞ்சுக்கிங்க...'' ``ஏய்... ஏண்டி சினிமா வசனமெல்லாம் பேசறே. விட்டது விட்டதுதான் மறுபடியும் அத தொட்டு எதுக்காக அசிங்கப்பட்டுக் கணும். மனுசனுக்கு மானம்தாண்டி பெரிசு. எம்பொண்ண ஆத்துல, கொளத் துல தள்னினாலும் தள்ளு வேனே தவிர, உறவுன்னு சொல்லிக்கிட்டு அந்த காஞ்சி போன காட்ல தள்ளமாட்டேன். புரிஞ்சிக் கிட்டு இந்த வீட்டுல இருந்தா இரு... இல்லே, கூடப்பொறந்த அண்ணன்கிட்ட போயி சேர்ந்துக்கோ...'' தீர்மானமாக பேசி விட்டு திண்ணைக்கு நகர்ந்தான், கதி ரேசன். மீனாட்சி ஆடிப் போனாள். ஊர் உலகம் மெச்ச உறவாடிக் கொண்டிருந்த அண்ணன் தங்கை என்கிற உறவு பத்து வருடங் களுக்கு முன் அப்பாவுக்குப் பின் அம்மா போய் சேர்ந்த பின் பாகப்பிரி வினை என்ற பெயரில் அவர் களுக்குள் சண்டை வளர்ந்து, சாபங்கள் பெருகி, பாசங்கள் பட்டுப் போய் விட்ட பிறகு, அவ ளுக்கும் அவளது அண்ணன் ஆறுமுகத் துக்கும் கண்கள் மூடிக் கொண்டதே தவிர, கண்ணீர் வற்றிப் போய் விடவில்லை. ஆசைகள், அடிபட்டுப் போனதே தவிர, அன்பு குறைந்து போய் விடவில்லை. பிரிவுகளிலும் அவர்களது உறவுகள் இறு கிக் கொண்டேதான் இருந்தது. விட்டுப் போன அந்த புனிதமான பாசத்தை, பந்தத்தை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள நாட்கள் எண்ணிக் கொண்டு தான் இருந்தது. அந்த சந்தர்ப்பம் இப் போது கூடி வந்திருக்கிறது. அந்த ஆதங்கத்தில் அடுப்படியில் கிடந்து அழத் துவங்கினாள், மீனாட்சி. காலையில் காப்பியை வயிற்றுக்குள் இறக்கியபின் திண்ணைக்கு வந்து பேப் பரை எடுத்தான் கதிரேசன். சொல்லி வைத்தாற்போல் மாமூல்கிராக்கி மகா லிங்கம் வந்து உட்கார்ந்தார். ``தம்பி கதிரேசா! நான் நேத்து சந் தைக்கு போயிருந்தப்போ உங்க அண்ண னைப் பார்த்தேன். பாவம்பா ரொம்ப நொடிஞ்சுப் போயிட்டான். பேங்குல வாங்குன கடனை கட்ட முடியாம ஜப்திக்கு போய் நிக்குது. உங்க அண்ணிக்காரி வேற உடம்புக்கு முடியாம போய் ஆஸ்பத்தியில படுத்திருக்கா. ஹும்... எப்படி இருந்தவன் இப்ப இப்படி இடிஞ்சி போய் கிடக்கறான்...'' சோகத்தோடு சொன்னார், மகாலிங்கம். ``என்ன அண்ணே சொல்றீங்க...? எப்படி திடீர்ன்னு எங்க அண்ணனுக்கு இப்படியொரு நிலமை வந்தது'' பதறிப் போனான் கதிரேசன். அவனையும் அறியாமல் அவனது அடி மனது அதிரத் தொடங்கியது. இதுநாள் வரையில் அண்ணன் மேலிருந்த கோபமும், ஆவேசமும் ஒரு நொடியில் சிதறிப் போய், `எங்க அண்ணனுக்கா இப்படி?' என்கிற ஆதங்கம் இப்போது அவனை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. வெறுப்பின் உச்சத்தில் இருந்தவனுக்கு, இந்த சேதியைக் கேட்ட தும் கண்கள் கசிந்தது. மனது பதைபதைத்தது. அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் தகித்த ஊமை மரணங்கள் அவனை உஷ்ணப்படுத்தியது. ``கதிரேசா... அது என்னவோப்பா எனக்கு முழு விவரமும் தெரியலே. ஆனா உங்க அண்ணனை நேர்ல பார்த்தப்போ எனக்கே பதறி போச்சு. பாவம் எளச்சிப் போய் எலும்புக்கூடு மாதிரி நிக்கறான். தபார்பா உங்களுக்குள்ளே ஆயிரம் அளிச்சாட்டங்க இருக்கலாம். ஆனாலும் இந்த நேரத்துல நீ போயி அண்ணா நானி ருக்கேன்னு ஒரு வார்த்தை சொன்னா அவ னுக்கு பாதி கஷ்டம் நீங்கிப் போயிடும். அதுதான் மனுஷத்தனமும் கூட .இன் னொரு தடவ நீங்க ரெண்டு பேரும் உங் கம்மா வயித்துல பொறக்கப் போற தில்லே. ஆண்டவன் குடுத்த அந்த உறவு களை ஊனப்படுத்திடாதீங்க கதிரேசு, சரி சரி, நான் வரட்டுமா...'' மகாலிங்கம் போய் விட்டார். சலனங்களால் சரிந்து போன கதி ரேசன் சஞ்சலத்தால் தவித்தான். இனம் புரியாத வேதனை அவனை அரிக்கத் தொடங்கியது. அண்ணனும் தம்பியுமாய் அப்பா, அம்மாவுக்கு பிள்ளைகளாய் ஆடிக் கழித்து ஓடித்திரிந்த அந்த நாட்களின் நினைவுக் குமிழ்கள் நிதர்சனமாய் இப்போது அவனுக்குள் நெட்டி முறித்தன,. இனம்புரியாத வேதனை அவனுக் குள் புரண்டு புலம்பியது. இரவு முழுவதும் தூக்கத்துக்கு பதில் துக்கமே அவனை ஆரோகணித்தது. விடையில்லா கேள்விகள் அவனை விரட்டத் துவங்கியது. மூடிய கண்ணுக் குள்ளும் அண்ணனின் நினைவுகள் முடங்கிக் கிடந்தன. தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அது இதுதானோ. பகலில் அவன் மனைவி மீனாட்சி சொன்னாளே, ஊர் பழிக்கு அஞ்சி உறவுகளை ஏன் பகைத்துக் கொள்ளவேண்டும்னு. மகாலிங்கம் சொன்ன மாதிரி இன்னொரு தடவை கிடைக்கக்கூடிய உறவா இது? பாசம் என்பதென்னை சந்தைச்சரக்கா? விடிந்தது கூட தெரியாமல் விறகுக்கட்டைபோல் கட்டிலில் கிடந்தான் கதிரேசன். ``என்னங்க மணி ஏழாகப் போகுது. என்ன இது. அதிசயமா இன்னிக்கு இப்பிடி தூங்கறீங்க? எந்திரிங்க!'' உசுப்பி விட்டுப் போனாள் மீனாட்சி. கட்டிலில் இருந்து எழுந்த கதிரேசன் விடுவிடுவென சமையல் கட்டுக்குள் போனான். ``தபார் மீனாட்சி சீக்கிரமா பயணப் படு. ஊர்ல அண்ண னைப் போய் பார்க்கணும். அண்ணிக் காரி சீக்கா கிடக்காம். அங்க போயிட்டு அண் ணனை பார்த் துட்டு அப் படியே உங்கண்ணன் வீட்டுக்கும் போய் மாப்பிள்ளை பார்த்து பேசிட்டு வருவோம். மள மளண்ணு கிளம்பு'' சொல்லி விட்டு குளிக்கப் போனான். தன்னைத்தானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்ட மீனாட்சி! ``ஆத்தா நீ கண்ணுமுழிச்சிட்டே!'' என்று மனதுக்குள் வேண்டியபடி புறப்பட தயாரானா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

ஐம்பதாவது அகவை காணும் பிரபாகரன்

தேசத்துரோகிகளையும், காட்டிக் கொடுப்பவர்களையும் இனங்கண்டு வேட்டையாடும் படலம் ஆரம்பமானது. 1976 ஆம் ஆண்டு ஆடிமாதம் 2 ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலையை முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 ஆம் ஆண்டு மாசி மாதம் மாவிட்டபுரத்தில் வைத்து கருணாநிதி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 வைகாசி 18 ஆம் திகதி இனுவிலில் வைத்து இரு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களும், 1978 தை 27 ஆம் திகதி கொழும்பில் வைத்து பொத்துவில் தொகுதியின் தமிழர் கூýட்டணி வேட்பாளர் கனகரத்தினமும் சுட்டுக் கொல்லப்பட்டார். 1978 சித்திரை 7 ஆம் திகதி, கொழும்பு 4 ஆம் மாடிசித்திரவதையில் புகழ்பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட இலங்கை பொலிஸின் சி.ஐ.டிபிரிவைச் சேர்ந்த 4 பேர் முருங்கன்- மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் இளைஞர்களை கொன்றொழிப்பதிலும், சித்திரவதைகள் மேற்கொள்வதிலும் பஸ்தியாம்பிள்ளை முன்னின்று செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1978 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 25 ஆம் திகதி முதன் முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை மொத்தமாக 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரினர். இதையடுத்து, 1978 வைகாசி 19 ஆம் திகதி 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கொடூரமான சட்டம் தமிழ் மக்களை அழிப்பதற்கு சகல விதமான அதிகாரங்களையும் படைத்தரப்புக்கு வழங்கியது. அதே 1978 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 7 ஆம் திகதி ஐ.தே.கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ்மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. இதைத் தொடர்ந்து 1979 ஆடி 20 ஆம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் ஒருவரை எவ்வித விசாரணைகளுமின்றி 18 மாதம் சிறையில் வைக்க முடியும். அத்துடன், படைகளால் கொல்லப்படுவோரின் உடல்களை மரண விசாரணைகள், நீதி விசாரணைகளின்றி அழித்து விட முடியும். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட அதேதினம், வடக்கில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31 இற்குள் அதாவது 6 மாதங்களுக்குள் வடக்கே விடுதலைப் போரை அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டு பிரிகேடியர் வீரதுங்கவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜே.ஆர்.ஜெயவர்தன. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்தபோது, ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டுமென்ற நோக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக கெரில்லா அமைப்பு முறையை பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இதன்படி 1979 ஆம், 80 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக பின்போட்டு விட்டு விடுதலைப் புலிகள் அமைப்பை பலப்படுத்துவதில் பிரபாகரன் அதிக கவனம் செலுத்தினார். இக் காலகட்டத்திலேயே புரட்சிகர அரசியல் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கியதுடன் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்கு, குரல் கொடுக்குமுகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவிருந்தது. ஏனெனில், இலங்கை இராணுவத்தினதும், அரசினதும் அடக்கு முறைகளையும் இன அழிப்புகளையும், கொடூர சித்திரவதைகளையும் தனது ஆறு வயது முதலே நேரில் அனுபவித்த வேதனை, அதனால் கிளர்ந்தெழுந்த விடுதலை வேட்கை, சிங்கள இனவாத அரசுக்கு தமிழர்கள் யார் என்பதைக் காட்ட வேண்டுமென்ற ஆக்ரோர்ம், அதனால் பிறந்த புலிகள் அமைப்பு என்பவற்றை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்பதில் தனது 5 வயது முதல் 50 வயது வரை வெற்றி நாயகனாகத் திகழும் பிரபாகரனின் சிறுவயது பராயம் வித்தியாசமானது. வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினரின் கடைசிக் குழந்தையாக 26-11-1954 ஆம் ஆண்டு பிறந்தார் பிரபாகரன். இவருக்கு ஒரு அண்ணனும், இரு அக்கமார்களும். பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட காணி அதிகாரியாகக் கடமை புரிந்தார். பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு என்னுமிடத்திலுள்ள சிதம்பராக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் செல்வம் மிக்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் கற்பதும், வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், பிரபாகரனின் சிந்தனையோட்டம் சிறு வயதிலேயே வேறு விதமாக அமைந்தது. தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிங்களப் பொலிஸார் அப்பாவித் தமிழர்கள் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் பிரபாகரனின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தின.அதிலும் குறிப்பாக, 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழின அழிவில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்கள், சிறுவர்களை கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் போட்டுக் கொன்ற கோரங்கள், பாணந்துறையில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டமை போன்றவற்றை கேட்டதாலும், கண்டதாலும் சிங்கள இனவெறியர்களின் பிடியிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் பிரபாகரனிடம் துளிர்விட்டது. தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் சிங்கள இனவெறி அரசினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை பிரபாகரன் உறுதியாக உணர்ந்தார். இதனால் படிக்கும் காலத்திலேயே பிரபாகரனும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் கைக்குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்ததால் பிரபாகரனின் காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையின் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியதால் "கரிகாலன்' என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்கு சிறுவயதில் ஏற்பட்டது. 10 ஆம் வகுப்பு வரை படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கியதால் படிப்பைத் தொடர முடியவில்லை. போராட்ட முஸ்தீபுகள் இரகசியமாக கருக்கட்டத் தொடங்கின. இதேவேளை, பிரபாகரனின் போக்குகள், செயற்பாடுகள் அவரது பெற்றோருக்கு புரியவில்லை. பிரபாகரன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடிவந்தது. ஒரு முறை பிரபாகரனைத் தேடி வந்த பொலிஸார் அதிகாலை 3 மணியளவில் அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே பொலிஸார் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் பெற்றோருக்குக் கூடத் தெரியாமல் வீட்டின் பின் வழியாகத் தப்பிவிட்டார். வீட்டுக் கதவைத் திறந்த பிரபாகரனின் தாயார் ஏராளமான பொலிஸார் குவிந்து நிற்பதைக் கண்டு திகைத்து விட்டார். ஏனெனில், பிரபாகரன் இரகசிய இயக்கத்தில் இருப்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பொலிஸார் பிரபாகரனின் பெற்றோரை எச்சரித்து விட்டு வெறுங்கையுடன் திரும்பினர். இந் நிகழ்விற்குப் பின்னர் பிரபாகரன் வீட்டிற்குத் திரும்பவில்லை. பிரபாகரன் புரட்சிகர இயக்கத்தில் இணைந்திருப்பதை அறிந்து கொண்ட அவரது தந்தை பிரபாகரன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் பெற்றோரிடம் தனது நோக்கம் விடுதலை வேட்கை பற்றி வாதிட்டார். இதன்போது 'உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒரு போதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வேண்டாம். என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பிரபாகரனின் புரட்சிகர போராட்டத்தின் ஆரம்பகாலத் தோழர்களாக பிரபாகரனின் உறவினர்களும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாகவுமேயிருந்தனர். இதேவேளை, தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனிய நிலையொன்று உருவானது. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த்தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னடத்திச் செல்ல புரட்சிகரமான அரசியல் அமைப்பொன்று இன்றியமையாதது என்பதை தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். இதனால், 'தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பலம் பொருந்திய இயக்கமாக வளரத் தொடங்கியது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் இயங்கினார். இக் குழுவில் வயதில் மிகவும் குறைந்தவராக பிரபாகரன் இருந்ததனால், அனைவராலும் 'தம்பி" என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்த தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டோர் இருந்தனர். இக் காலகட்டத்தில் அரசுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேரூந்தொன்றை எரிப்பதென்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்ட பிரபாகரன் உட்பட நான்கு பேர் சென்றனர். ஆனால், அச்ச மிகுதியால் மூன்று பேர் இடைநடுவில் திரும்பிச் சென்று விட்டனர். ஆனால், அப்போது 16 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மட்டும் மனத் துணிவுடனும் எடுத்த முடிவை நடத்திக் காட்ட வேண்டுமென்ற சபதத்துடனும் தனியாகச் சென்று அரச பேரூந்தொன்றைக் கொளுத்திவிட்டு திரும்பி வந்தார். இதேநேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளை கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் கைது செய்து பொலிஸார் சித்திரவதை செய்தனர். சித்திரவதையை தாங்க முடியாத சிலர் சக தோழர்களை காட்டிக் கொடுத்து விட்டனர். இதனால் பலர் கொழும்பிலுள்ள 4 ஆம் மாடிதடுப்பு முகாமில் வைத்துக் கொடூர சித்திரவதைகளை மேற்கொண்டனர். இதனால், பிரபாகரன் தமிழகத்திற்குச் சென்றார். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்தும் இருக்க விரும்பாத பிரபாகரன் 1972 ஆம் ஆண்டு மீண்டும் தமிழீழம் திரும்பினார். இந்நிலையில், ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாத செயற்பாடு ஒரு புரட்சிகர தலைமையை நாடிநின்றது. இப் புரட்சிகர சூýழலில் தான் 'புதிய தமிழ்ப் புலிகள்" என்ற இயக்கம் 1972 ஆம் ஆண்டு பிரபாகரனால் தொடங்கப்பட்டது. இதுவே பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நிலை. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி கண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தமது மூýன்று திட்டங்களில் ஒன்றான துரோகிகளை அழித்தலைச் செயற்படுத்திய அதேவேளை, இரண்டாவது திட்டமான படையணிகள் மீதான தாக்குதல்களையும் தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி சிங்கள இராணுவப் படைகளும், ஐக்கிய தேசியக் கட்சி காடையர்களும் இணைந்து யாழ் நகரை எரிய10ட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்த யாழ். நூலகத்தை எரிய10ட்டிவிலை மதிப்பற்ற 94 ஆயிரம் புத்தகங்களை சாம்பர் மேடாக்கினர். இவ்வாறு தமிழினம் மீது கலாசார படுகொலைத் திட்டமாக அமைந்த இந்த அழிவுகளை தலைமை தாங்கிச் செய்து முடித்தவர் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் அமைச்சராகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவுமிருந்து 24-10-1994 அன்று குண்டுத் தாக்குதலுக்கு பலியான காமினி திசாநாயக்கவே ஆவார். இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடி பணியச் செய்து விட முடியாது என்பதை சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டுமெனத் தீர்மானித்த பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்குக் கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமடைந்தன. 1981 ஐப்பசி 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் வைத்து இராணுவ வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத் தாக்குதலே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி2 ஆம் திகதி வடமராட்சி நெல்லியடியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதேயாண்டு புரட்டாதி 29 ஆம் திகதி இனவெறியர் ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொன்னாலை பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களுக்கு கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. இதே ஆண்டு ஐப்பசி 27 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயமடைந்தனர். இங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் பொலிஸாரிடமிருந்து கைப்பற்றினர். இத் தாக்குதலையடுத்து வட மாகாணத்திலுள்ள பல பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் பொலிஸ் நிர்வாகம் நிலை குலைந்து முடங்கிப் போனது. 1983 மாசி 18 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேயாண்டு பங்குனி மாதம் 4 ஆம் திகதி பரந்தன் உமையாள்புரத்தில் இராணுவத் தொடரணி மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். இத் தாக்குதலில் இராணுவ கவச வண்டியொன்று சேதமடைந்ததுடன், ஐந்து இராணுவத்தினர் காயமடைந்தனர். 1983 சித்திரை 2 ஆம் திகதி வட மாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ் அரச அதிபர் "பாதுகாப்பு மாநாடு' ஒன்றைக் கச்சேரியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த போது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு யாழ்.கச்சேரி செயலக கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து தமது எதிர்ப்பை இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தினர். இதேயாண்டு வைகாசி 18 ஆம் திகதி வடக்கில் நடக்கவிருந்த உள்ராட்சி தேர்தல்களை பகிர்;கரிக்கும்படி பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சித்திரை 29 ஆம் திகதி இலங்கை இனவெறி அரசை ஆதரிக்கும் சகல துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஐ.தே.கட்சி சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன், பலர் ஐ.தே.க.விலிருந்தும் விலகிக் கொண்டனர். இதே திகதி நல்லூர் கந்தர்மடத்தில் தேர்தல் சாவடிக்கு காவலில் நின்ற இராணுவ, பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இத் தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும், பிரேத பரிசோதனை, நீதி விசாரணை எதுவுமின்றி சடலங்களை புதைக்கவும் இராணுவத்துக்கு ஜே.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. இதற்குப் பதிலடியாக 1983 ஆடி 23ஆம் திகதி நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படைப்பிரிவொன்று இராணுவத்திற்கெதிரான அதிரடித் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 போராளிகளைக் கொண்ட இப் படைப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஒரு போராளியாக நின்று கொண்டு தாக்குதலுக்கான தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்திருந்தார். புலிகள் காத்திருந்த இராணுவ தொடரணி குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத் தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டன. பிரபாகரன் மட்டும் இத் தாக்குதலில் 7 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றார். இத் தாக்குதலையடுத்து நிலைகுலைந்த சிங்கள அரசு இலங்கைத் தீவு முழுவதும் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டது. ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். தமிழரின் கோடிக் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. இந்த இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும், யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் இணையத் தொடங்கினர். இதனால், புலிகளின் கெரில்லா படையணி பல்மடங்காகப் பெருகியது. இந்நிலையில், கெரில்லா அணிகளை புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டியெழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கினார் பிரபாகரன். இதனால், ஆடி1983 இல் இருந்து 1984 மாசி வரை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி பாரிய கெரில்லா பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. கெரில்லா போர் முறை மரபுவழி யுத்த முறையாக மாற்றமடைந்து முன்னேற்றமடைந்ததால் ஆட்டம் கண்ட இலங்கையரசு இந்திய அரசின் துணையோடு திம்புப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. இந்திய அரசின் தலைமையில் விடுதலைப் புலிகளுடன் 1985 ஆடிமாத முற்பகுதியில் ப10ட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுகள் ஆரம்பமாகின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏனைய தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன. ஆனால், இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால், திம்பு பேச்சுவார்த்தையில் சிக்கல் நிலை தோன்றியது. அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை இராணுவம் திருகோணமலையிலும், வவுனியாவிலும் இனப்படுகொலையில் ஈடுபட்டு 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்று குவித்ததால் திம்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது. திம்பு பேச்சுகள் தோல்வியடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார். இதனால், பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசியில் தமிழகத்திலிருந்த தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிரபாகரனும் ஏனைய போராளிகளும் குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட்டார்கள். பின்னர் பிரபாகரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதேவேளை, தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் தொடங்கினார். இதையடுத்து பணிந்த இந்திய அரசு தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. இதற்குப் பின்னர் பெங்கரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக இந்திய அரசின் மூலம் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தினார். ஆனால், பிரபாகரன் அந்த யோசனையை அடியோடு மறுத்து விட்டார். தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்குத் தொந்தரவு இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் 1987 தை 3 ஆம் திகதி தமிழீழம் திரும்பினார். இதையடுத்து, இலங்கை இராணுவம் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்தன. இலங்கை துருப்புகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன. இலங்கை அரசு பெரும் எடுப்பில் வடமராட்சி மீது மேற்கொண்ட ஒப்பரேர்ன் லிபரேர்ன் இராணுவ நடவடிக்கை புலிகளால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் 1987 ஆடி 24 ஆம் திகதி, இந்திய அதிகாரிகள் சிலர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து இந்தியப் பிரதமர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததுடன், டில்லிக்கு அழைத்துச் செல்ல அவசரப்படுத்தினார்கள். இதன்போது பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "இன்று தமிழ்மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் தலைமையை பெற்றிருக்கிறார்கள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்களித்து வரும் பொறுப்புகளை நான் உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மையுடனும் செய்வேன் என நம்புகிறேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வுகளாக அமையாது. எனவே, தமிழ் மக்களுக்கு நிம்மதியான சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தரத் தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இந்தத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகின்றேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தை விட்டு உத்தியோகப10ர்வமாக இந்தியா செல்கிறேன் எனத் தெரிவித்து விட்டு ஹெலிகொப்டரில் டில்லி சென்றார். போகும் வழியில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து பேசிவிட்டே சென்றார். டில்லி சென்ற பிரபாகரனும் அவரது ஆலோசகர்களும் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் தீக்ர்த், இந்திய வெளிநாட்டுத்துறை செயலர் மேனன் ஆகியோர் பிரபாகரனை சந்தித்து இந்தியாவும் இலங்கையும் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் பற்றி தெரிவித்து விட்டு அதன் பிரதிகளை பிரபாகரனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். இந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் முற்றாக நிராகரித்தார். அவரை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் நடந்தன. நான்கு நாட்கள் சென்றுவிட்ட போதும் ராஜீவ் காந்தி பிரபாகரனைச் சந்திக்கவில்லை. பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டார் என்று உறுதிபடத் தெரிந்ததும் ஏனைய தமிழ்க் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு ஒப்பந்தத்துக்கு சம்மதம் பெறப்பட்டது. இதையடுத்து இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29 ஆம் திகதி கொழும்பு செல்லப் போவதாக ராஜீவ் காந்தி அறிவித்து விட்டு பிரபாகரனைச் சந்தித்து விட்டு அவரின் சம்மதம் பெறாமலேயே பிரபாரன் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக பொய் செய்திகள் வெளியிடப்பட்டன. இதை மறுத்து பிரபாகரன் அறிக்கையொன்றை வெளியிட்டார். 1987 ஆடி 29 பிரபாகரனை டில்லியில் ஹோட்டல் அறையில் கறுப்பு ப10னை படையின் காவலில் வைத்து விட்டு கொழும்பில் ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தம் முடிந்து இந்தியா திரும்பிய ராஜீவ் காந்தி பிரபாகரனுக்கு பல உறுதிமொழிகளை வழங்கினார். இதையடுத்து பிரபாகரன் தமிழீழம் திரும்பினார். இந்திய- இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல இலட்சம் தமிழ் மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் எம் மக்களது விடுதலைக்காக எம் மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். இதிலிருந்து தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு இந்தப் பொறுப்பு மாற்றத்தைத் தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலிலும் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார். பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டன. ஆனால், இந்தியப் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய தமிழ்த்துரோக குழுக்களைத் தூண்டினார். இந்நிலையில் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இந்திய- இலங்கை ஒப்பந்தத்திலுள்ள 5 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி தியாகி திலீபன் நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15 இல் ஆரம்பித்தார். இந்தியாவின் துரோகத்தனத்தினால் 1987 ஐப்பசி 26 இல் தியாக மரணமடைந்தார். திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூ த்த தளபதிகள் இருவர் உட்பட 15 போராளிகள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். போர் நிறுத்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது ஒப்பந்தத்திற்கு முரணானது என பிரபாகரன் இந்திய அரசுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், இந்திய அரசின் குரோதத்தனத்தால் 15 போராளிகள் சயனைட் உட்கொண்டதில் 12 போராளிகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டுவது தான் இந்திய அரசின் நோக்கம் என அறிக்கையிட்ட பிரபாகரன் யுத்த நிறுத்தத்தை பேனுவதில்லையென முடி வெடுத்தார். 1987 ஐப்பசி 10 இல் இந்திய - தமிழீழ போர் ஆரம்பமானது. யுத்தம் தீவிரமடைந்தது. யுத்தத்தை தலைமையேற்று நடத்திய பிரபாகரன், கெரில்லாப் போர் முறைதான் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள சரியான வழி என்பதை உணர்ந்து தனது போராளிகளுடன் காடுகளுக்குச் சென்றார். இந்நிலையில் இந்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதியும் தியாக மரணமடைந்தார். போர் உக்கிரமடைந்த நிலையில் 1988 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாஸா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு அறிவித்தார். விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்திருந்த இந்திய இராணுவம் 1990 பங்குனியில் தமிழீழத்திலிருந்து வெளியேறியது. பிரபாகரன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பல பேச்சுகள் நடந்தன. தோல்வி கண்டன. 1990-06-01 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இராணுவ முகாம்கள், கடற்படைக் கலங்கள் தகர்த்தழிக்கப்பட்டன. 1993 மே 1 இல் ஜனாதிபதி பிரேமதாஸா தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1995 இல் பதவிக்கு வந்த சந்திரிகா அரசும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அவையும் தோல்வி கண்டன. மீண்டும் 3 ஆம் ஈழப்போர் வெடித்தது. 17-10-1995 இல் சூ ரியக் கதிர் இராணுவ நடவடிக்கையை யாழ். குடாநாட்டி ன் மீது சந்திரிகா அரசு தொடுத்தது. மக்களினதும் போராளிகளினதும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு புலிகள் தந்திரோபாயமாக பின்வாங்கினர். குடாநாட்டு மக்கள் 5 இலட்சம் பேரும் புலிகளுடன் இணைந்து வெளியேறினர். இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நகர்வாகும். விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டி விட்டதாக அகில உலகமெலாம் சொல்லித் திரிந்த இலங்கை இராணுவத்துக்கு ஓயாத அலைகள் -01 இராணுவ நடவடி க்கை மூலம் 2000 இராணுவத்தினருக்கு மேல் கொன்றொழித்து பல கோடி, பெறுமதியான படைக்கலங்களை கைப்பற்றி முல்லைத்தீவு மாவட்டத்தை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து தமது இராணுவப் பலத்தை இலங்கை அரசிற்கும் உலகுக்கும் 19-07-1996 இல் புலிகள் நிரூபித்தனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதை திறப்பதற்காக 13-05-1997 இல் இராணுவம் மேற்கொண்ட "ஜெயசிகுறு' இராணுவ நடவடி க்கை ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்றது. இராணுவம் மாங்குளம் பகுதியை அண்மித்த நிலையில் 27-09-1998 இல் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்-02 இராணுவ நடவடிக்கை மூ லம் கிளிநொச்சி மாவட்டத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் ஜெயசிகுறு முடி வுக்கு வந்த போதும் இராணுவம் வேறு பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இராணுவம் பலத்த ஆளணி, தளபாட இழப்பிற்கு மத்தியில் கைப்பற்றிய வன்னி நிலப்பரப்பை ஐந்தே நாட்களில் மீட்டெடுத்து புலிகள் வரலாற்றுச் சாதனை படைத்தனர். ஓயாத அலைகள்-03 இராணுவ நடவடி க்கை 02-11-1999 இல் ஆரம்பமாகி வன்னி நிலப்பரப்பு மீட்கப்பட்டது. கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, குடாரப்பு தரையிறக்கங்கள் மூலம் ஆனையிறவின் பாதுகாப்பு வலயங்கள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனையிறவு முப்படைப் பெருந்தளம் 22-02-2000 ஆம் ஆண்டு புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. 240 வருடகால அடி மைச் சின்னம் இல்லாதொழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பகுதியில், நாகர்கோவில் வரையும், யாழ் நகர் நோக்கி எழுதுமட்டுவாள், பளை, சாவகச்சேரி கைதடி, நாவற்குழி, அரியாலை என யாழ்.குடாநாட்டி ன் முக்கிய பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டு யாழ் நகரை நோக்கி நகர்ந்த விடுதலைப் புலிகளின் படையணி இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகளின் அழுத்தம் காரணமாக, யாழ். குடாநாட்டு மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக மக்களின் பாதுகாப்பு கருதி இடைநிறுத்த வேண்டி யேற்பட்டது. இதேவேளை, ஆனையிறவு பெருந்தளத்தை மீண்டும் கைப்பற்ற இராணுவம் "கினிஹிர' இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் 26-09-2000 அன்று ஓயாத அலைகள்-04 மூ லம் கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையான 8 கிலோ மீற்றர் பரப்பளவை புலிகள் மீட்டெடுத்தனர். இதற்கிடையில் இலங்கையரசின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் நோர்வே அரசின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் 02-11-2000 அன்று வன்னியில் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து சர்வதேச அரசியலில் மாபெரும் ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் பின்னர் டிசம்பர் 24 இலிருந்து விடுதலைப் புலிகள் சமாதானத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை மேற்கொண்டனர். புலிகள் போர் நிறுத்தம் மேற்கொண்டு 5 மணி நேரத்தினுள் நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி பகுதிகளிலிருந்து 'தீச்சுவாலை" என்ற பெரும் இராணுவ நடவடி க்கையை அரசு மேற்கொண்டது. இதனைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். பல நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். படைக்கலங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அரசு புலிகளுடன் நோர்வேய10டாக சமாதானம் பேசி வந்தது. பல தரப்பட்ட சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னர் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகளும் இலங்கையரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், வெளிநாடுகளில் ஆரம்பமாகித் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் கலந்து கொண்டவர் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் கருணா. அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை விரும்பாத சில சக்திகள் கருணாவை விலைக்கு வாங்கின. இதனால், 2004-03-03 இல் பிரதேசவாதம் கிளப்பிய கருணா, புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் வரலாற்றுத் துரோகமிழைத்து மன்னிக்க முடி யாத துரோகியானார். துரோகி கருணாவின் கிளர்ச்சியை மிகவும் தந்திரோபாயமாக எதிர்கொண்ட புலிகள், கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், கருணாவைத் தனிமைப்படுத்தினர். இதனால், தற்போது இலங்கை இராணுவத்தினரோடும், தமிழ்த் துரோகக் கும்பல்களுடனும் இணைந்துள்ள கருணா துரோகத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று மரபுவழி இராணுவமாக தமிழினத்தின் தேசிய இராணுவமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டுக்குள் இரு இராணுவம், இரு கடற்படை, இரு பொலிஸ் படையாக பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

திருமணச்சடங்கு

கும்பம்: கங்கை புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும். ஓமம்: அனைத்துக்கும் அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும். நவகோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும். தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’ என்றெழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர். பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது. அட்சதை: திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும். அம்மி மிதித்தல்: மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும். மணமகளே! கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப் பற்றி அந்த அம்மிமேலே வைப்பது. அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்) மணமகனுக்கு: புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புது மணமகனே, உன் வாழ்வு புனிதமாகவும் புத்தமுதம் போலவும் இனிமையுடன் விளங்குவதாக. உன் மனைவியை அடிமைபோல் எண்ணி அடக்கியாளக் கூடாது. மனைவி மலருக்கு நிகராவாள். அதனால் மலரிடம் பழகுவதுபோல் மனைவியிடம் மெத்தென்று பழகவேண்டும். உன் மனைவி உன் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியாகும். அவள் திருமணமான அன்றே பெற்ற தாய்_தந்தையரையும், உடன் பிறந்தாரையும், பழகிய வீட்டையும், எல்லாவற்றையும் துறந்து உன்னை நாடி வந்திருக்கிறாள். சுருங்கச் சொன்னால், தன் பெயரையே துறந்து விடுகின்றாள். ஆதலால், மனைவியிடம் அன்பாகப் பழக வேண்டும். நீ வீட்டிற்கு வரும்பொழுது வன் சொற்கள் என்றுமே பேசக் கூடாது. மனைவியின் அன்பைப் பெற வேண்டுமானால், மாமனார் மாமியாரை உயவசதி செய்யும்.ர்த்திப் பேச வேண்டும். பெண் உருவத்துடன் கூடிய காலண்டரைக் கூட உற்றுப் பார்க்கக் கூடாது. மனைவியின் சுகதுக்கத்தில் நீ பங்குபெற வேண்டும். மனைவியை நீ உன் உயிர்போல் நேசிக்க வேண்டும். மனைவி ஏதாவது சிறுகுற்றம் செய்தால் அதனைப் புறங்காத்தல் அமைதிக்கும் அன்பு பெருகவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

தங்க ஆபரணங்கள்

பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் 'நகை'ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ' நகை ' என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள். அணி என்னும் சொல்லும் 'அணிதல்' மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி... இந்த நகைகள்தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால் சுவையும் வாய்ந்தது. தொடக்கம் காட்டு விலங்களை வேட்டையாடி வாழ்ந்த கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம் போன்றவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில் அணித்திருந்தார்கள். காலச்சுழற்சியில் பருத்தி,பஞ்சு, நூல் என்று நாகரிகம் கிளைகளை பரப்பியபோது நரம்புகளுக்கு பதில் நூலில் கோர்த்து அணியும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இயற்கைத்தாய் வழங்கிய முத்து,பவளம், மணி போன்றவற்றில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு முன்னேறினர். நூல் என்பதைக் குறிக்க ' இழை ' என்னும் இன்னொரு தமிழ்ச்சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு' இழை ' என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த பரணங்களுக்கும் ' இழை ' என்னும் பழைய பெயரே நிலைத்து விட்டது. 'யிழை ' [ய் + இழை -- ஆராய்ந்து செய்த ஆபரணம்]'அணியிழை '[ அழகிய ஆபரணம் ]என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் 'வடம்' என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களை குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு 'வடம்' என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம். அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்துமுடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிகோளில் தம் முன்னங்கைகளில் ' கங்கணம் ' என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். இன்றும் கூட 'ஒரு காரியத்தை செய்து முடிப்பேன்' என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில் எதுவும் கட்டாவிடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காப்பு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள். பண்பாடத காட்டுப்பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப்பிராணிகளில் அரவம் கேட்டு விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பயந்தோடவும் அக்கால ஆடவரும் மகளிரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலப்பும் இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர்,தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு 'சக்கரம்' என்று அர்த்தம். கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது. அங்கலெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற பரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங் கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காபியங்களை க்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது. அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. '' நான் விரும்புவதெல்லாம்அணிகலன் ஆடம்பர மின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் '' என்ற அண்ணல் காந்தியின் தங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். இன்றைய நவ நாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவிலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறு பதிப்பு கூட கூறலாம். ' கோவில்களுள் கோவில் ' என்றும் ' தேவாலய சக்கரவர்த்தி ' என்றும் 'தென் திசை மேரு ' என்றும் அழைக்கப்படும் இராஜ ராஜீசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இந்தப் பேரரசர் ஒரு பேராற்றலின் மொத்த உரு. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சிதான். 52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23. தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்போது அணிந்து மகிழ்ந்த நகைகளின் மாதிரியில் தானே கோவிலுக்கு அணிகலன்களை அளித்திருக்க முடியும்? அதனால் கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அந்த நாள் நடைமுறைப் பாணியில் இருந்தவை எனக் கொள்ளலாம். கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலநகைகளின் பெயர்கள் :-- ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]காறை [கழுத்து அணி ]கச்சோலம் [ இடை அணி]கலாவம் [இடை அணி]காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]மோதிரம் [இரத்தினம் முத்து ]முத்து மாத்திரை [காது அணி]பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]பதக்கம். என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை,அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன. எடுத்துக்காட்டாக பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல். இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 கழஞ்சுப் பொன். அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட''குடிஞைக்கல்'' முறையில் ''ஆடவல்லான் மேரு விடங்கன் '' என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம். தண்டவாணிக்கு கால் கால் காந்திகை ( கழுத்து அணி)கடகம்,கொப்பு ( காதணி)மகுடம், குதம்பை ( காதணி)பட்டம் (மகுடம்)பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)சிடுக்கு, சூடகம் (வளையல்)பாத சாயலம் ( கால் அணி)சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)வீரப்பட்டம் (தலையில் அணிவது)வாளி (காதணி)காறை கம்பி (காதணி)திருகு, மகரம் (காதணி)உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)தூக்கம் (காதணி)நயனம் (கண்மூடி)பொற்பூ,பொட்டு.பாசமாலைதோள் வளைதாலிதாலி மணிவடம்தாழ்வடம்தகடுதிரள்மணி வடம்வளையல்வடுக வாளிவடம்தோடுதிருவடிக்காறைகால் வடம்கால் மோதிரம் சன்ன வடம் திருகுகால் காறைகைக் காறை மாலை பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் சிந்தையுடனும் உருவாக்கப்பட்ட படிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் உலகின் எந்தக் கோடியில் உள்ளனவா... தெரியவில்லை. அணிகலன் பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். முதலில் ஒரு பாலியல் ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் :-- ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள்அணிவது ஆண்களுக்குத்தான். பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும். கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது. அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது.பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள் [ பழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக '' மேகலை '' என்ற ஆடையை அணிவார்கள் இப்போது அதுவே ' ஸ்விம் சூட்' ஆகிவிட்டது] சரி.... இது பாலியல் ஆய்வார்கள் கருத்து. இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம். நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் 。தியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும். திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப்பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.] ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள். அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, உடல் 。திராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்] அரைநாண்க் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது. மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ] கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும். தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):- 1. தலையணி:தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி. 2. காதணி:தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல். 3. கழுத்தணிகள்:கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை. 4. புய அணிகலன்கள்:கொந்திக்காய். 5. கை அணிகலன்:காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு. 6. கைவிரல் அணிகலன்கள்:சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ. 7. கால் அணிகலன்கள்:மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு. 8. கால்விரல் அணிகள்:கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி. 9. ஆண்களின் அணிகலன்கள்:வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம்ஆகியனவாகும்., மோதிரம்,கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,முத்து வடம், கடுக்கண், குண்டலம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

அக்கினி சாட்சி

தாலிகட்டி முடிந்தபின்னும் எஞ்சியிருந்த திருமணச் சடங்குகளை சந்துருவும், ஷோபனாவும், சாஸ்திரிகளும் மட்டும் அக்னியின் அருகில் தனியாக உட்கார்ந்துகொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு இதெல்லாம் ரொம்பப் பிடித்திருந்தது. கைகள் சேர்வதும், தொடையைத் தொடுவதும் புரியாத என்னவோ நியமங்கள். ஒவ்வொன்றையும் ரசித்த சந்துரு, அவ்வப்போது அவளிடம் சிரித்துப் பேசினான். அடிக்கடி பட்டான், தொட்டான், கையை அழுத்தினான். ஷோபனாவுக்கு இன்னமும் வெட்கமும் தயக்கமும் விலகவில்லை. தாலிகட்டி ஒருமணி நேரம்தான் ஆகிறது. பெரும்பாலான விருந்தினர்கள் மாடியில் சாப்பிடப் போயிருந்தார்கள். இரண்டாம் பந்தி ஓடிக்கொண்டிருந்தது. ஷோபனாவின் அண்ணனும், மன்னியும் நாற்காலியில் வீற்றிருந்தவர்களை ஒவ்வொருத்தராக அணுகி, ~நீங்கள் சாப்பிட்டாச்சா?என்று பரிவுடன் விசாரித்து டைனிங் ஹாலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது ஷோபனாவுக்கு அழுகையும் சந்தோஷமும் கலந்த உணர்ச்சிகள் பெருகின. வாத்தியார் சுவாமி, நினைத்து நினைத்து வாத்தியம் வாசிக்கச்சொல்லி முழுசாக வாசிப்பதற்குள் விரலால் நிறுத்திக்கொண்டிருந்தார். பாலிகை கொட்டுவதற்கு கார் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். லேட்டாக வந்த ஆபீஸ் சிநேகிதிகள் கிட்டேவந்து இருவரையும் கைகுலுக்கி அன்பளிப்புகளைக் கொடுத்துவிட்டு, சந்துருவைப் பார்த்து யு ஆர் லக்கி! ஷோபனா மாதிரி பெண் கிடைக்க குடுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். பார்க்கலாம் என்று சிரித்தான் சந்துரு. அவனை சற்று அதட்டலாகப் பார்த்தாள். உடனே அமெரிக்கா அழைத்துச் சென்று விடுவீர்களா? அதையெல்லாம் யோசிக்கவில்லை. யார் என் மனைவி என்றே இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. அத்தனை புகை காலையிலிருந்து... சாஸ்திரிகள் தோ ஆச்சு! டேய் கொஞ்சம் விசிர்றா... மாப்பிள்ளை கண்ணைக் கரிக்கறதுங்கறார் பாரு.. சிஷ்யன் விசிறிவிட, அக்கினி கொழுந்துவிட்டு எரிய, அதில் சுள்ளிகளையும் விறகுத் துணுக்குகளையும் சேர்த்தார். தீ பெரிசாகி சற்றே சுட்டது. அப்போதுதான் ஷோபனா, வினோத்தைப் பார்த்தாள். ~அய்யோ, இவன் எங்கே வந்தான்? வழியில் பார்த்தவர்கள் அத்தனை பேரிடமும் கைகுலுக்கிவிட்டு ஷோபனாவைப் பார்த்துக்கொண்டே மெல்ல மணமேடையை அணுகினான். வருவதற்குப் பத்தடி முன்பே செண்ட் வாசனை து}க்கியது. சில்க்கில் ஜிப்பா, காலர் திறந்து அதில் தங்கச் சங்கிலி, விரலெல்லாம் மோதிரம்... கடவுளே, என்ன இது சோதனை? ஏதும் குழப்பமில்லாமல் காப்பாற்று நாராயணா, பிள்ளையாரே, ஐயப்பா, அனுமாரே என்று இருக்கிற தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள். மெல்ல வினோத் அவளைப் பார்த்துக்கொண்டே கிட்டே வந்தான். சந்துரு நெருப்பில் நெய் வார்த்துக் கொண்டிருந்தான். ஹாய் ஷோபி! ஷோபனா சோகையாகச் சிரித்தாள். அய்யோ என்ன இது சோதனை? உன் கணவனை அறிமுகப்படுத்த மாட்டாயா? சந்துரு அப்போதுதான் நிமிர்ந்தான். சந்துரு, திஸ் இஸ் வினோத்! ஹாய் என்று ஒருமுறை பார்த்துவிட்டு, வாத்தியார் சொல்லும் மிச்ச மந்திரங்களில் கவனமானான். உங்களுக்கு ஒரு பரிசுப்பொருள் கொண்டு வந்திருக்கேன் என்றான் வினோத். எனக்கா? தாங்ஸ் என்றான் சந்துரு. ஒரு செல்போன். தட்ஸ் எக்ஸ்பென்சிவ். நைஸ். ஆனா, எங்கிட்ட ஏற்கெனவே இரண்டு செல்போன் இருக்கு. இந்த செல்போன் கொஞ்சம் ஸ்பெஷல் என்றான். ஸ்பெஷல்? ஷோபனாவின் உள்ளம் பதறியது. இதில் போனமாசம் ஷோபனா எனக்கு அனுப்பின எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அத்தனையும் அழிக்காம பத்திரமா பதிவாகியிருக்கு. ஹனிமூன் போது படிச்சுப் பார்க்கலாம். சுவாரஸ்யமா இருக்கும். அவன் உதடுகள் சுழித்து, கண்களில் குரோதம் தெரிந்தது. ஷோபனாவுக்கு விரல்கள் நடுங்கின. தன் புதிய கணவனை பயத்துடன் பார்த்தாள். அவன் சற்று தயக்கத்துக்குப்பின், தட்ஸ் இண்ட்ரஸ்டிங் என்றான். எங்கே குடுங்க... என்னைப் பத்தி ஷோபி உங்ககிட்ட சொல்லியிருக்க மாட்டா. அதனாலதான்... சொல்லியிருக்கா என்றான் சந்துரு. ஷோபனா அவனை வியப்புடன் பார்த்தாள். எதுக்கும் படிச்சுப் பாருங்க... தேவையில்லை என்று சந்துரு அந்த செல்போனை கொழுந்துவிட்டெரியும் அக்கினியில் போட்டான். அதன்மேல் தொன்னையில் மிச்சமிருந்த நெய்யைக் கொட்டினான். அக்ரிலிக் ப்ளாஸ்டிக் ஃபைபர்கிளாஸ், காப்பர்க்ளாடு போன்றவை உருகி எரியும் கலந்த வாசனையுடன் அந்த செல்போன், தீயின் நடுவில் மெல்ல விகாரமடைந்து உருமாறி ஜோதியுடன் கலந்து இறந்தது. சாப்பிட்டுட்டுப் போங்க வினோத் என்றான் சந்துரு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

வரிப்புலியே எழுந்திரு தமிழ் காக்க

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்தபண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள்தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி!அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாம டைந்ததுயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய், இந்நாள்செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! வயிற்றுக் கூற்றக்கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ இளந்தமிழா! குறைத விர்க்கஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்கு விப்பாய்!ஊழியம்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ!பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக்கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள் அழகுநாட்டில்!பணிசெய்வாய் தமிழக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த வரிப்புலியே இன்றே, இன்னே,புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கேஅதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

விவேகானந்தரின் போதனை

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான். ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை. ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே. இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன. மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான். எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் உபதேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது. தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும். தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை. அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார். புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

வாருங்கள் உலகைப் பாருங்கள்

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. 'நீ எங்கிருந்து வருகிறாய்?' 'கடலிலிருந்து' 'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது. 'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை. காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

விவேகானந்தர் கூறிய இந்துமதம்

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன. அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன். தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை. இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது. இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும். சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்? ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா? வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை. பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும். இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும். இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!' தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது. சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்? இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும். இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்? இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.' 'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல. இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

மரணம் வேண்டும்

1 தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? 'மேல் மாடி காலி' என்பதற்காக அவன் கேலி செய்த 'மண்டுக்கள்' எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் - இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா? இது ஒரு புறம் இருக்கட்டும். செல்லத்தின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? தன்னிடம் அளவிறந்த காதல் வைத்துள்ள அப்பேதை இவ் அவமானத்தை எங்ஙனஞ் சகிப்பாள்? பரீட்சைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு செல்லத்தைப் பிறந்தகத்துக்கு அனுப்பியபோது அவளுக்கும் தனக்கும் நிகழ்ந்த விவாதம் ஜெகந்நாதனுக்கு நினைவு வந்தது. அவள் அப்போது கூறினாள் - "என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? நான் உங்கள் படிப்புக்கு எவ்விதத்திலாவது குறுக்கே வருகிறேனோ? நான் இருந்தால் உங்களுக்கு எவ்வளவோ சௌகரியமாயிற்றே! உங்கள் அறையைப் பெருக்கி சுத்தமய் வைக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறேன். இரவில் நீங்கள் படிக்கும் போது உங்கள் படுக்கையை விரித்து விட்டே நான் சென்று படுத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதியாகிறது? ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு தனியறையில் இருந்தால் இவைகளையெல்லாம் நீங்கள்தானே செய்யவேண்டும்? இவ்வளவு சௌகரியம் இருக்குமா? எனக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுவதேனும் உண்டா? மாலைப் பொழுதினில் நீங்கள் வெளியிலிருந்து வந்ததும் அரைமணி நேரம் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எப்போதாவது உங்கள் படிப்புக்குக் குறுக்கே நான் வருகிறேனா? மேலும், உங்கள் தேக சௌக்கியத்தை என்னைப் போல் யார் கவனிப்பார்கள்." செல்லம்மாளின் இவ்வளவு வாதமும் அப்போது ஜகந்நாதன் செவியில் ஏறவில்லை. சென்ற வருஷம் பரீட்சையில் தவறியதும், அவனது நண்பர்களும் மற்றவர்களும், "ஆம்படையாள் ஆத்துக்கு வந்ததும் பையன் சுழி போட்டு விட்டான்" என்று கேலி செய்தது அவன் மனதை விட்டு அகலவில்லை. இந்தக் கேலிப்பேச்சு அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசியில் தான் பரீட்சையில் தவறியதற்குத் தன் மனைவியே காரணம் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டது. எனவே, இம்முறை அவளை ஊருக்கு அனுப்பியே தீரவேண்டுமென்றும், இல்லாவிடில் தனக்குப் பரீட்சை தேறாதென்றும் அவன் நிச்சயம் செய்து கொண்டிருந்தான். இப்போதோ? "அவ்வளவு பிடிவாதமாக என்னை ஊருக்கு அனுப்பினீர்களே? பரீட்சையில் தேறி விட்டீர்களா?" என்று செல்லம் கேட்டால், என்ன விடையளிப்பது? தன் புண்பட்ட மனதை இன்னும் புண்படுத்தக் கூடாதென்று அவள் இவ்வாறு கேளாமலிருக்கலாம்; தேறுதலும் சொல்லலாம். இருந்தாலும், அவள் மனதில் இவ்வெண்ணம் இருக்கத் தானே செய்யும்? அவள் முகத்தில் விழிப்பதெப்படி? இனி, கிராமத்திலுள்ள பெற்றோர்களோ? அவர்களைப் பற்றி எண்ணியபோதே ஜகந்நாதனுக்கு வயிரு பகீர் என்றது. தகப்பனார் உழையாத உழைப்பும் உழைத்து மூத்த புதல்வனான தன்னைப் படிக்க வைத்தார். இப்போது அவருக்கு தள்ளாத வயது வந்து விட்டது. குடும்பத்துக்கு 1,500 ரூபாய் கடன் இருந்தது. இன்னும் இரண்டு புதல்விகளுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஒரு பையனைப் படிக்க வைத்தாக வேண்டும். நிலத்தில் கிடைக்கும் வருமானம் காலட்சேபத்துக்கே போதும் போதாததாயிருந்தது. ஜகந்நாதனுக்கு வாங்கின வரதட்சணை ரூ. 2000-த்தில் ஒரு பைசாக் கூடத் தொடாமல் அவன் பி.ஏ. படிப்பதற்காகக் கொடுத்து விட்டார். அவன் உத்தியோகம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையே குடும்பத்துக்கு இப்போது ஆதாரமாயிருந்து வந்தது. போன வருஷமே அவர்கள் அடைந்த ஏமாற்றம் வருணிக்குந் தரமன்று. இம்முறையும் தவறிப்போன செய்தி கேட்டால் அந்தோ! அவர்கள் மனம் இடிந்தே போய்விடும். அவர்கள் துயரத்தை பார்த்து எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பது. நல்ல வேளை, உயிரை விடுவதும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒருவனுடைய விருப்பத்தைப் பொறுத்ததாயிருக்கிறதே, அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டியதுதான். அவமானத்தைப் பொருட்படுத்த வேண்டாம்; மனைவியையும் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டாம்; எனினும் அடுத்தாற்போல் செய்வதற்கென்ன இருக்கிறது? வரதட்சிணைப் பணம் ரூ. 2000-மும் இந்த மூன்று வருஷங்களில் செலவழிந்து போயிற்று. பாங்கிக் கணக்கில் 30 ரூபாயோ என்னவோதான் பாக்கி. இன்னமொரு வருஷம் படையெடுத்து சென்று பரீட்சைக் கோட்டையை முற்றுகை போடுவதென்பது இயலாத காரியம். மாமனாரிடம் பணம் கேட்கலாமா? சை! அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிர் விடலாம். உத்தியோகத்துக்குப் போவதென்றாலோ, பரீட்சையில் தவறிய பி.ஏ.க்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள்? 30, 35-க்கு மேல் இல்லை. இந்த 35 ரூபாயைக் கொண்டு பட்டணத்தில் மனைவியுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? சென்ற வருஷத்தில் மாதம் 60 ரூபாய் போதாமல் கஷ்டப்பட்டோ மே? பின்னர், பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதெப்படி? தம்பியைப் படிக்க வைப்பதும் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்ஙனம்? "ஆ! பரீட்சையில் மட்டும் தேறியிருந்தால்! நினைத்தபடி இன்கம்டாக்ஸ் ஆபீஸில் ஓர் உத்தியோகமும் கிடைத்திருந்தால்! 'சம்பளத்தைக் கொண்டு நீ உன் காலட்சேபத்தை நடத்திக் கொள். மேல் வரும்படியை மட்டும் மாதாமாதம் எனக்கு அனுப்பிவிடு' என்று தந்தை அடிக்கடி கூறியது அவனது நினைவுக்கு வந்தது. 'மேல் வரும்படி' விஷயத்தில் தானாக யாரையும் ஒரு பைசாவேனும் கேட்பதில்லையென்று அப்போதே தீர்மானித்திருந்ததும் ஞாபகம் வந்தது. இன்கம்டாக்ஸ் ஆபீஸில் உத்யோகம் அகப்படாவிட்டாலும் ரயில்வேயில் ரூ.100 சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தால் போதுமே!... சை, சை என்ன வீண் நினைவுகள்! இவைகளைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்! தற்கொலை! தற்கொலை! தற்கொலை! அதைப் பற்றியன்றோ இப்போது சிந்திக்க வேண்டும்! ஒரே ஒரு யோசனை, நாம் போய்விட்டால் மனைவி பெற்றோர்களின் கதி என்ன? நல்ல வேளையாக மனைவியின் பெற்றோர்கள் கொஞ்சம் பணக்காரர்கள். எனவே அவளைப் பற்றிக் கவலையில்லை. உயிரோடிருந்தாலும் பெற்றோர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எல்லாரும் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பது உண்மையே. ஆனால், உயிரோடிருந்து அவர்கள் துயரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இறந்து போய் விட்டால், பிறகு யார் எப்படிப் போனால் நமக்கென்ன தெரியப் போகிறது? இவ்வளவு எண்ணங்களும் ஜகந்நாதன் மனதில் கோர்வையாக எழுந்து மறைந்தன. அவனுடைய அறிவு அந்த நெருக்கடியான தருணத்தில் மிகத் தெளிவு பெற்றிருந்தது. அச்சமயத்தில், "நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?" என்னும் விஷயமாக ஒரு கட்டுரை வரையச் சொல்லியிருந்தால் அவன் மிக நன்றாக எழுதியிருப்பான். இவ்வளவு தெளிந்த அறிவுடன் பரீட்சையில் எழுதியிருந்தால் எந்தக் குருட்டுப் பரீட்சகனும் அவனைத் தேர்தல் செய்யத் தவறியிரான்! தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி ஜகந்நாதன் அதிகமாகச் சிந்திக்கவேயில்லை. ஒரே கணத்தில் இந்த விஷயத்தில் முடிவுக்கு வந்துவிட்டான். இரவு ஏழு மணியாயிற்று. மனைவிக்கொரு கடிதமும், தந்தைக்கொரு கடிதமும் எழுதினான். மனைவிக்கெழுதிய கடிதம் வருமாறு:- "என் அன்பே! நான் பரீட்சையில் இம் முறையும் தவறி விட்டேன். இனி உன் முகத்தில் விழிக்க என்னால் முடியாது. தற்கொலை செய்து கொண்டு இன்றிரவு உயிர் விடப் போகிறேன். ஜகந்நாதன்" தந்தைக் கெழுதிய கடிதமும் இவ்வளவு சுருக்கமானதுதான். இரண்டையும் மடித்து உறையில் போட்டு விலாசம் எழுதி மேஜையின் மீது வைத்தான். மரண விசாரணையில் அடையாளம் தெரிவதற்காகத் தன்னுடைய விலாசம் எழுதிய ஒரு காகிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். (என்ன முன்யோசனை) அறையை பூட்டி விட்டு வெளியே கிளம்பினான். 2 இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென் இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன. மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில் பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும் வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் 'பட்பட்' என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, "ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே" என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது. பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான். பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது. அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான். 3 "ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை. நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது. நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக் கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில் இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும். பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு, உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்" என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான். அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். "என் வரலாற்றை உம்மிடம் கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும் குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று" என்று மகாதேவ ஐயர் சற்றுக் கோபத்துடன் கூறினார். "தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று" என்றான் ஜகந்நாதன். இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் 'கிறீச்' என்று கத்திற்று. "உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்" என்று மகாதேவ ஐயர் கூறினார். "ததாஸ்து" என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- "இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று." "ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்." "அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை." "இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்." இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள். 4 மறுநாள் ஜகந்நாதனுக்கு, அவனுடைய காதல் மனைவி செல்லத்தினிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் பிற்பகுதியை இங்கே தருகிறோம்:- "...இந்த துக்க சமாசாரத்தில் நமக்கு ஒரு சந்தோஷமான அம்சமும் இல்லாமற் போகவில்லை. அத்தைக்கு என்னிடம் எப்போதுமே நிரம்பப் பிரியம் என்று தங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா? அந்திய காலத்தில் நான் அவளுக்குச் செய்த பணிவிடை அந்தப் பிரியத்தைப் பதின்மடங்கு வளர்ந்துவிட்டது. எனவே அவளுடைய மரண சாசனத்தில் பாங்கியில் அவள் பெயரால் இருந்த ரூபாய் மூவாயிரத்தையும் எனக்கு கொடுத்து விட்டதாக எழுதி வைத்திருக்கிறாள். இந்தப் பணம் தங்களாலேயே எனக்குக் கிடைத்தது என்பதை நினைவூட்டுகிறேன். தாங்கள் என்னை வற்புறுத்தி பிறந்தகத்துக்கு அனுப்பியிராவிடில் அத்தைக்குப் பணி விடை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திராது. அப்போது அவள் பணத்தை எனக்குக் கொடுத்திருப்பது நிச்சயமில்லை. ஆதலின், அந்தப் பணம் முழுதும் தங்களுக்கே உரியதாகும். இன்னொரு சமாசாரம், தங்கள் பரீட்சையின் முடிவு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். தேறியிருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. பட்டம் பெற்றவர்களுக்கும் கூட இக்காலத்தில் உத்தியோகம் இலேசில் கிடைப்பதில்லையென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். மேலும் கைகட்டுச் சேவகம் செய்யும் பிழைப்பு தங்கள் இயல்புக்கு ஒத்ததன்று. எனவே இந்த மூவாயிரம் ரூபாயும் மூலதனமாக வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதேனும் ஒரு தொழில் ஆரம்பித்து நடத்தினாலென்ன? அடியாள் தங்களுக்குப் பிடியாவிட்டால் அதற்காக என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தாங்கள்தான் செல்லங் கொடுத்துக் கொடுத்துத் தங்கள் செல்லத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிற விஷயங்கள் தங்களை நேரில் தரிசிக்கும்போது." மேற் சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மகாதேவ ஐயரும் ஜகந்நாதனும் "மகாநாதன் கம்பெனி" என்ற பெயருடன் புத்தக வியாபாரமும், பிரசுரமும் நடத்தி, நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்களென அறிகிறோம். ஜகந்நாதனுடைய தந்தை மட்டும் "என்னதான் இருந்தாலும், மாதா மாதம் சம்பளமும் அதன் மீது கொஞ்சம் மேல் வரும்படியும் கிடைப்பதுபோல் ஆகுமா?" என்று சொல்லி வருகிறாராம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org