<$BlogRSDUrl$>

பேரழகி கிளியோபாட்ரா ------------------------------ உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமை யும் சுவாரசியம் தரக்கூடியவை.கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புஸ்தகங்கள் சொல்லு கின்றன. எகிப்தை ஆண்ட பன்னி ரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக் கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சாரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார் கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப் பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறhத பேரையும், புகழை யும் இவள் எப்படிப் பெற்றhள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என் கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக் கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக, வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலை களைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். இதெல்லாம் போதா தென்று ஒன்பது மொழி களில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா? கிளியோ பாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக் கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவை யும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அhpயணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி* இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்லƒ அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது* ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சுப்பராகத் தான் நடந்தது. ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன் கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கை யெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது?என்று தூண்டி விட்டார்கள். ஆகவே, அந்த ஜூனியர் டால மியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோ பாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ. அப்பேற்பட்ட சீசர். தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்ப தாகக் கேள்விப் பட்டாள் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப் பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள். மாபெரும் வீரரே* இதோ உங்களுக் கான பரிசு* அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி* கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிhp ஒரு இது வந்து விட்டது சீசருக்கு* கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப் பதிலேயோ, கல்யாணம் செய்து கொள் வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. அவளது நோக்கமெல் லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியு மானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை* கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பூ* இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார். யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணி யானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தோpலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள். இதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற் கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்த தன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர்] என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற் றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது* திருமணத்துக்குப் பிறகு கிளியோ பாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டு வதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னா லேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச் சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவருக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள். சீசரின் மரணத்துக்குப் பின் ரோமானிய சாம் ராஜ்ஜயத்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, தேசம் இரண்டாகப் பிளந்தது. கிழக்குப் பகுதியை அப்போது மார்க் ஆண்டனி என்பவன் பிடித்துக் கொண்டான். ஷேக்ஸ்பியர் காவியம் ஞாபகத்துக்கு வருகிறதா? இப்போது தான் கிளியோபாட்ரா- மார்க் ஆண்டனி காதல் அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது* அதிகாரத்துக்கு வந்த ஆண்டனி, முதல் வேலையாக எகிப்து ராணி யான கிளியோ பாட்ரா வுக்கு ஒரு சம்மன் அனுப்பினான். தன் எதிரி களுக்கு அவள் அடைக் கலம் கொடுத்திருக்கிறாள் என்று தான் கேள்விப் படுவதாகவும் அது பற்றிய விசாரணைக்கு அவள் வரவேண்டுமென்றும்* இப்போதுதான் கிளியோபாட்ரா ஒரு முடிவு செய்தாள். எகிப்தின் சுதந்திரத் தைக் காப்பாற்றவும், மாபெரும் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் தன்னையே அர்ப்பணிக்கலாம் என்பதே அம் முடிவு* அழகாக டிரெஸ் பண்ணிக் கொண்டாள். பெரியதொரு அமைதிப் படையுடனும் நிறைய பரிசுப் பொருட் களுடனும் சேடிப் பெண்களுடனும் ஆடல்-பாடல் மங்கையருடனும் புறப் பட்டவள், ஒரு அழகான நதிக்கரையில் ஆண்டனியைச் சந்தித்து வணக்கம் சொன்னாள். அடடா, அந்த மோகனப் புன்னகை* சீசரையே வீழ்த்திய அப் புன்னகையின் முன்னால், ஆண்டனி எம்மாத்திரம்? அவ்வளவு தான் ஆள் காலி* அடுத்தக் கணமே ஒரு வளர்ப்பு நாய்க்குட்டி மாதிரி கிளியோபாட்ராவின் பின்னால் நடந்துபோக ஆரம்பித்து விட்டான் ஆண்டனி. அப்புறம் அவன் ரோம் திரும்பி வேறொரு விதவைப் பெண்ணை மணந்ததும் மீண்டும் எகிப்து வந்து கிளியோபாட்ராதான் தன் நிஜமான மனைவி என்று பப்ளிக்காக அறிவித்ததும் அதன் சாட்சியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, தானே அவர்களுக்குத் தந்தை என்று சொன்னதுமெல்லாம் சரித்திரம். என்ன பிரச்சினையாகி விட்டது என்றால், இந்த தன்னறிவிப்புப் பிரகடனம் கண்டு பொறுக்காத ஆண்டனியின் அந்த விதவை மனைவியான ஆக்டோவியா என் பவளின் தந்தை ஆக்டோவியன், கிளியோ பாட்ராவை ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து எகிப்து மீது படை யெடுத்து விட்டான். இந்த ஆக்டோவியன் யார் என்றால் நமது கதாநாயகி யான கிளியோபாட்ராவின் முன்னாள் கணவன் சீசரின் அத்தைப் பையனோ, மாமா பையனோ* சுத்திச் சுத்தி பங்காளிப் பகைதான்* ஆச்சா? எகிப்து மீது ஆக்டோவியன் படையெடுத்து விட்டான். கிளியோ பாட்ராவையும் அவளது ராஜ்ஜயத்தை யும் காப்பாற்ற வேண்டியது இப்போது ஆண்டனியின் பொறுப்பாகி விட்டது. ஓராண்டு சண்டைகளில் ஆண்டனி தப்பித்தாலும் இறுதியில் அவன் சரணடைய வேண்டியதாகி விட்டது. கிளியோபாட்ரா மட்டும் எப்படியோ தப்பித்து ஒரு ரகசிய இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துவிட்டாள் என்றும் உயிருடன்தான் ஒளிந்திருக் கிறhள் என்றும் பல பேர் பலவிதமாகச் சொல்லி ஆண்டனியைக் கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கி விட்டார்கள். உண்மையில், அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், பயங்கர விஷமுள்ள மலைப்பாம்பைக் கடிக்க விட்டு, கிளியோபாட்ரா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். கிளியோபாட்ராவின் சாகசங்கள் மிக்க வாழ்க்கை இன்றைக்கு சந்தேக மில்லாமல் ஒரு தேவதைக் கதையாகி விட்டது. அவளது அழகும், காதல் களும் மட்டுமே அதிகம் பேசப்படும் விஷயங்களாகி விட்டன. உண்மையில் அவள் தன் தாய் மண்ணான எகிப்தை மிகவும் நேசித்தவள். அவளது போராட்டமெல்லாம் மண்ணை காப்பதற்காகவே நடத்தப்பட்டன. காதலெல்லாம் அதற்கான கருவியாகவே அவளுக்குப் பயன்பட்டிருக்கிறது*

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
இளவரசி டயானா ---------------------- ஸ்பென்ஸர்ஸ் குடும்பம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பிரிட்டனில் மதிப்புக்குரிய பிரபு வம்சம் அது. அந்தக் குடும்ப வழியில் வந்தவர் டயானா. ஆனாலும் பந்தாக்கள் ஏதுமின்றி, தமது திருமணத்துக்கு முன்பு ஒரு பாலர் பள்ளியில் டீச்சராக உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்பென்ஸர்ஸ் குடும்பத்துடன் இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கு நல்ல நெருக்கமும், தொடர்பும் ஆரம்பத்திலிருந்தே உண்டென்பதால் டயானாவை சார்லஸுக்குச் சிறுவயதிலிருந்தே தேரியும். விசித்திரம் என்ன வென்றால், சார்லஸ் ஆரம்பத்தில் காதலித்தது டயானாவை அல்ல. அவரது சகோதரி யான சாராவை* சாராவுக்குப் பிறகு சார்லஸ் காதலிக்க ஆரம்பித்த வர்தான் டயானா.பொதுவாக ராஜ குடும்பங்களில் காதல் மட்டு மல்லƒ கல்யாணமே கூட ரெண்டாம் பட்சம்தான். அந்தஸ்து சரியாக இருக்கிறதா என்பதற்குத்தான் முதல் மரியாதை. சார்லஸ்- டயானா விஷயத்தில் அந்தப் பிரச்சினை இல்லாததால்தான் உடனே திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணி விட்டார் ராணி எலிசபெத். சாதாரண திருமணமா அது* பூமியில் நிச்சயிக்கப் பட்டு சொர்க்கத்தில் நடத்தப்பட்ட திருமணம்* சென்ற நூற்றாண்டில் அதைவிட ஆடம்பரமாகவும், கலர் புல்லாகவும் நடந்த திருமணங்கள் வேறில்லை. ஆனால் தேனிலவின்போதே இருவருக்கும் சாpப்பட்டு வராமல் போய்விட்டது. காரணம், கணவாpன் பிற காதலிகள் பற்றி டயானாவுக்குத் தேரிய வந்ததுதான். குறிப்பாக காமிலா பார்க்கர். காமிலா பார்க்கர், டயானாவோடு ஒப்பிட் டால் பேரழகி இல்லை. ஆனால் மிகவும் வசீகரக் கவர்ச்சி கொண்டவர். சார்லஸுடன் அவரது திருமணத்துக்கு முன்பிருந்தே தொடர்புள்ளவர். முதலில் டயானா இந்த விவகாரத்தை மாpயாதையாக எலிசபெத் ராணியிடம் கொண்டு போனார். ஆனால் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. என்ன அக்கிரமம் இது? தாங்கவே முடியவில்லை டயானா வால். ஒரு டெலிவிஷன் கம்பெனியினரை அழைத்து சுடச்சுட பேட்டி கொடுத்தார். சார்லஸ்- காமீலா பார்க்கர் காதல் விஷயத்தைப் உடைத்தார். அப்போதே உறவும் உடைந்துவிட்டது. ஆனால் குழந்தைகள் வில்லி யம், ஹhhp இரண்டு பேரின் எதிர்காலத் தைக் கருதித்தான் அவர் அப்போதே சார் லஸை விவாகரத்து செய்யாமலி ருந்தார். டயானாவும் தனக்கான காதலர்களைத் தேட ஆரம்பித்தார். பல பிரபலங்கள்- பிரபலமல்லாதவர்களுடன் டயானாவை இணைத்துக் கிசு கிசுக்கள் வரத்தொடங்கின. எகிப்தியக் கோடீஸ்வரர் டோடி உடனானா கிசுகிசு மட்டும் தான் இறுதியில் நிஜம் என்றhனது. இதற்கிடையில் டயானாவின் அயல் தேசத்துச் சுற்றுப்பயணங்கள் மூலம் அவர் மிகவும் பாப்புலர் ஆகியிருந்தார். பாப்புலர் என்றhல் சார்லஸைவிடப் பாப்புலர். எலிசபெத் சீமாட்டியைவிடப் பாப்புலர். அரச குடும்பத்தின் பந்தா கிடையாது. அலட்டல் கிடையாது என்பது அவரது முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். தவிர சராசாp மக்களுடன் அவர் மிக நெருக்க மாகப் பழகக் கூடியவராக இருந்தார். உலகெங்கும் கண்ணி வெடிக்கு எதிரான அமைதிப் போராட்டத் தில் டயானா தன்னைத் தீவிரமாக படுத் திக் கொண்டதும், எய்ட்ஸ் விழிப் புணர்வுப் பிரசாரங்களில் பங்கு கொண்டதும் மக்களிடையே அவருக்குப் பிரத்தியேகமான அன்பை உண்டாக்கிக் கொடுத்தது. டயானாவின் மூத்த மகனுக்குத் தன் அம்மாவின் காதல் குறித்துத் தேரியும். அப்போதே . உன் சந்தோஷம் எனக்கு முக்கியம் அம்மா என்று சொல்லி, காதலருடன் தாயை வழியனுப்பி வைத்த அந்தச் சிறுவனைப் புரிந்துகொள்வது எப்படி நமக்குக் கஷடமோ, அதே மாதிரித்தான் இளவரசியாக இருந்தும் பிகினி உடையில் போஸ் கோடுத்த டயானாவை, ராஜகுடும்பத்துக்கு எதி ராக பேட்டி கள் கொடுத்த டயானாவை, பரபரப்பு சம்பவங்கள் நிறைந்த தன் வாழ்க்கை வர லாறை எழுது வதற்காக ஒரு பிரிட்டிஷ் பத்தி ரிகை யாளருக்கு ரகசியமாக உதவிய டயா னாவை, இரண்டு குழந்தைகளின் தாயான பிறகும் ஒரு எகிப்து கோடீஸ்வரருடன் உல்லாச உலாக் கள் போன டயானாவை புரிந்து கொள்வதும் நமக்குக் கஷடம். ஆ, அந்தக் காதல் அத்தியாயம்;* பரபரப்பு மிக்க ஒரு த்ரில்லர் சினிமா மாதிரியானது டயானா- டோடி காதல். டோடிக்கு 41 வயது. பெரிய பணக்காரர். இந்த வார்த்தை ரொம்ப சாதாரணமானது. நாமெல் லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்குப் பெரும் பணக்காரர். டயானாவைக் காதலித்த இவரும் அதற்கு முன்னால் இன்னும் பல பெண் களுடன் தொடர்பு உள்ளவராகத் தான் இருந்திருக்கிறhர். சொல்லப்போனால் சார்லஸுக்கு இருந்த பெண்கள் தொடர்பைக் காட்டிலும் டோடிக்கு இருந்த தொடர்புகள் அதிகம். சார்லஸை வெறுத்த டயானா-டோடியை மட்டும் எப்படி விரும்பினார்? லாஜpக் இடிக்கிறதே என்று தோன்றலாம்.இரண்டு காரணங்கள்தான் இதற்குண்டு. முதலாவது, சார்லஸைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் டயானாவுக்கு அதிகம். இது மிக அபத்தமான காரணமாகத் தோன்றினாலும் உண்மை இதுவே என்கிறார்கள் பல பிரிட்டிஷ உளவியல் மருத்துவர்கள். அந்தப் பழிவாங்கும் வெறிதான், சார்லஸைவிட அதிகப் பெண்கள் தொடர்பு கொண்டவராக இருந்தபோதிலும் டோடியை அவர் ஏற்கச் செய்தது. இரண்டாவது காரணம், ஏற்கக் கூடியது. டயானாவின் சமூக சேவைகளை வெகுவாகப் பாராட்டும் இயல்புடையவர் டோடி. இந்தக் காரணம்தான் இருவரையும் மிக நெருக்கமாக இணைத்தது என்றும் சொல்லுகிறார்கள். காரணம் எதுவானாலும், இருவரும் காதலிக் கிறhர்கள் என்கிற செய்தி, ஒரு வதந்தியாக வெளிவரத் தொடங்கியதிலிருந்தே இரண்டு பேருக்கும் போட்டோகிராஃபர்களால் பிரச்சினைகள் வரத்தொடங்கிவிட்டது. எங்கே போனாலும் துரத்துவார்கள். என்ன செய்தாலும் படமெடுப்பார்கள். நின்றால் படம், உட்கார்ந்தால் படம், சிரித்தால் படம், பேசினால் படம், தொட்டால் படம், தொடாவிட்டாலும் படம். ஐயோ, சகிக்க முடியாத பேஜார் அது*அந்த ஒரு சந்தர்ப்பத்தைக்கூட தரக்கூடாது என்றுதான் டயானாவும், டோடியும் ஓட்டலின் பின்புறமாகப் புறப்பட்டு மணிக்கு நூற்றுமுப்பது மைல் வேகத்தில் காரில்பறந்தார்கள். அப்படியும் விடாமல் துரத்திய போட்டோ கிராபர்கள்தான் இறுதியில் அவர்களின் உயிருக்கே எமனானார்கள்.அப்போது பாரிஸில் நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அந்தச் சுரங்கப்பாதையில் டயானாவின் கார் சீறிக் கொண்டிருந்தபோது டிரைவர் குடித்திருந்தார் என்று பிறகு சொன்னார்கள். குடிக்காதிருந் தாலுமே அந்த வேகம் ஜாஸ்திதான். சுரங்கப்பாலத்தைத் தாங்கி நின்றிருந்த ராட்சஸ காங்க்ரிட் தூண்களுள் ஒன்றில் கார் மோதியது. பயங்கரமான சப்தம். கார் அப்பளமான சப்தம் அது. உள்ளே இருந்த டோடியும், டயானாவும் கூடத்தான்.ஒரு ரோஜாவை நசுக்கிப் பிய்த்துப் போட்டிருந்த மாதிரி இருந்தது என்று மருத்துவமனையில் டயானாவின் உடலைக் கண்ட நர்ஸ் ஒருவர் அழுதபடி தொலைக் காட்சியில் பேசியது நினைவிருக்கலாம். இந்த மிகச் சுருக்கமான டயானாவின் வாழ்க்கைச் சம்பவங்களை மட்டுமே பார்த்தால்கூட வெறும் கிசுகிசு, காதல், கல்யாணம், விவாகரத்து, முறை தவறிய உறவுகள் என்பவை மட்டும்தான் கவனத்தில் நிலைக்கும். இந்த விஷயங்களால் மட்டுமே ஒரு பெண் உலகப்புகழ் பெற முடியுமா? பெற்றாலும் அது நிலைக்குமா? எத்தனை காலத்துக்கு? உண்மை அதுவல்ல. டயானா, உலக மக்களிடையே மறக்க முடியாத பெண்மணியாக ஆகிப்போனதன் காரணம், ஏழை, எளியவர்கள் மீது அவர் காட்டிய பரிவுதான். தேசத்தின் எல்லைகள் கடந்து, உலகெங்கும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரையும் அவர் நேசித்தார். எங்கோ பாகிஸ்தானில் இம்ரான்கான் ஒரு புற்றுநோய் மருத்துவமனை கட்டியிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் கர்ம சிரத்தையாகப் புறப்பட்டு வந்து அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அத்தனை பேரையும் தனித்தனியே விசாhpத்து, ஆறுதல் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று அவருக்கென்ன தலையெழுத்து? சோமாலியாவில் பட்டினியால் சாகிற ஏழைகளுக்காக நேரில் போய் உதவிகள் செய்து விட்டுக் கண்ணீர் விட்டு வருந்த வேண்டும் என்று யார் அவரிடம் சொன்னார்கள்? அன்னை தெரசாவின் சமூகப்பணிகளுக்கு உதவுவோரில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக் கொள்ளு வதற்காக அவர் ரோமில் இருந்தபோது நேரில் போய் ஆசி பெற்றுப் பணியாற்ற ஆரம்பிக்க யாருக்கு மனசு வரும்? அவர் பக்கிங்காம் அரண்மனையை அல்ல இங்கிலாந்து தேசத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த மானுட குலத்தையே நேசித்தவர் என்பதால்தான் சரித்திரத்தில் இடம் பெற்றார். அதே நேசம் தன் கணவரால் கூடத் தனக்குத் திருப்பித் தரப்பட வில்லை என்பதால்தான் தன் தனி வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளவும் செய்தார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org