<$BlogRSDUrl$>

குடும்பச் சிக்கலைத்தீர்ப்பதற்கு கணவன் மனைவியிடம் கருத்துப் பரிமாறலும் விட்டுக்கொடுப்புகளும் தேவை´'' ----------------------------------------------------------------------------------------------------- குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையிலான கருத்துப் பரிமாறல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில சமயம் தோன்றுகின்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கருத்துப் பரிமாறல் இல்லாமை ஒரு முக்கிய காரணமாக இருக்கும். திருமணத்தின் ஆரம்ப நாட்களில் பல மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். சலிப்பும் தட்டாது கால்வலிக்கவும் மாட்டாது. தொலைபேசிக் கொண்டிருப்பார்கள், ஆனால் இப்போது இப்படியில்லை ஏன்? ஐந்து நிமிடம் ஆறுதலாய்ப் பேச மாட்டார்கள். அவர்களது தொழில்களும் வேலைப் பழுவும் ஒருவன் மற்றவரது உரிமையை மறந்து போகும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சிலர் இப்படி முறைப்பாடு செய்கிறார்கள். எனது மனைவி நான் பேசுவதை கணக்கில் எடுப்பதில்லை. எந்நேரமும் அவளே பேசிக் கொண்டிருக்கிறாள். இதனால் அவளோடு பேச விருப்பம் வருவதில்லை. இதே முறைப்பாட்டை சிலசமயம் மனைவியும் தெரிவிப்பதுண்டு. இத்தகைய முறைப்பாடுகள் தோன்றக்கூடாது என்பதல்ல. மாறாக அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். தீர்வு காணப்படாத போதுதான் ஆபத்தான விளைவுகள் கூடத் தோன்ற முடியும். இந்த இடத்தில்தான் கணவன் மனைவிக்கிடையிலான கருத்துப் பரிமாறலின் அவசியம் தெரிகிறது. அதனு}டாக ஒவ்வொருவரும் அடுத்தவரைப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். இயல்புகள், விருப்பங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். தொடரும் நடத்தைகள் அதற்கேற்ற விதத்தில்தான் அமையவேண்டும். சிலசமயம் சில பிரச்சினைகளைப் பார்க்கின்ற பொழுது இவர்கள் மத்தியில் கருத்துப் பரிமாறல் இருந்திருந்தால் இப்படி ஒரு பிரச்சினை தோன்றவே மாட்;டாது என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த வகையில் இருவருக்கும் தனித்தனியாக சில உபதேசங்களை முன்வைக்க முயல்கிறோம். பயன் பெறுவீர்கள் என நினைக்கிறோம். மனைவிமார்களே 1. உனது கணவனின் உள்ளத்தை வெல்ல வேண்டுமென்றால் அழகிய முறையில் பேசும் கலையைக் கற்றுக்கொள். வெற்றிகரமான மனைவிமாரின் அடிப்படைத் தகுதி இதுதான். 2. உனது கணவனின் அன்பை எப்போதும் பெற வேண்டுமாயின் அவனது மனோ நிலைகளை புரிந்துகொள்ள முற்படு. 3. ஆண் எப்பொழுதும் கெஞ்சுதலையும் அன்பான வார்த்தைகளையுமே எதிர்பார்க்கிறான். எனவே, கணவனுடன் கொஞ்சம் அதிகமாகவே கெஞ்சலாம், அன்பாகப் பேசலாம். 4. கணவனது மனநிலைகள் சூழ்நிலைகள் என்பவற்றை அவதானித்து உரிய நேரத்தில் உரிய விடயத்தைப் பேசப் பழகிக்கொள், குறிப்பாக வேலையில் இருந்து திரும்பி வருகின்ற போது தேவைகளைப் பற்றிப் பேசாதே, அதிகமான பிரச்சினைகள் தோன்றுவது இங்குதான். 5. என்னிடத்தில் உயர்ந்த கண்ணியமுள்ளவன் நீதான் என்று கணவன் உணரும் வகையில் நடந்துகொள், அந்த வகையில் வார்த்தைகளை அமைத்துக் கொள். உ-ம் ||நாமிருவரும் நன்றாக கொஞ்ச நேரம் பேச வேண்டும் போலிருக்கிறது|| நீங்களில்லாமல் என்;னால் செயற்படுவது கடினம்|| போன்றவை. 6. கருத்துப் பரிமாறல்களின் போது நீ கணவனுக்குச் சமமான மனைவி என்று உணர்த்திவிடாதே. அதுவே கருத்துப் பரிமாறலைப் பயனற்றதாக்கிவிடும். கருத்துப் பரிமாறலே பிரச்சினையாகவும் முடியலாம். கணவன்மார்களே 1. உனது துணைவியின் பங்கை மறந்துவிடாதே. நீ ஏற்றுக்கொண்டாலும் அவன் உன்னில் பாதி, இப்படித்தான் இறைவனும்கூறியுள்ளார்கள். 2. எப்போதும் அவளுடன் நல்ல முறையில் நடந்துகொள், நல்ல வார்த்தைகளில் அவளுடன் பேசு. 3. உனது பொறுப்புக்களிலும் கடமைகளிலும் அவளையும் இணைத்துக் கொள், உனது தொழிற் பிரச்சினைகள், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றி அவளுடன் கலந்தாலோசி. உனக்கு நல்ல ஆலோசனை வழங்கவும் து}ண்டுதல் தரவும் ஆறுதல் அளிக்கவும் அவளைவிடவும் தகுதியானவர்கள் கிடைக்க மாட்டார்கள். 4. அவளுக்கும் அறிவிருக்கிறது அனுபவமிருக்கிறது. அவளாலும் சிந்திக்கவும் செயலாற்றவும் முடியும் என்பதை ஒப்புக்கொள், உனது அதிகமான பாரங்களை அவளே இறக்கி வைப்பாள். 5. அதிகாரமுள்ளவன் நீதான் இருந்த போதிலும் வீட்டு விவகாரங்களை அவளிடம் விட்டுவிடு. அவளது அந்தத் திருப்தியையும் இல்லாது செய்து விடாதே. கணவன்மார்களே மனைவிமார்களே நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்து விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்தால் இல்லறவாழ்க்கை என்றும் இனிதே

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
கேலியும் கிண்டலும் பெண்களின் மனதைக் கீறும் ஆயுதங்கள் --------------------------------------------------------------------------------- இளம்பெண் தனியாகவோ அல்லது பெண்களுடன் சேர்ந்தோ வீதியில் செல்லும்பொழுது பல இளம் வயது ஆண்களாலோ அல்லது நடுத்தர வயது ஆண்களாலோ கேலிப் பேச்சுக்களுக்குள்ளாக்கப்படுவது இன்று சாதாரணமாக நிகழ்கின்றது.ஆண்கள்,பாலியல் ரீதியாகப் பெண்களைக் கிண்டல் செய்வது,அவர்கள் மனம் நோகும்படி பேசுவது,அருவருக்கத்தக்க பாடல்களைப் பாடுவது,சாயத் தண்ணிகளை பெண்கள் மேல் தெளிப்பது,அவர்களின் உடைகளை இழுப்பது,வேண்டுமென்றே அருகில் வந்து இடிப்பது போன்ற பல ரகளைகளைச் செய்கிறார்கள். இதற்கு மூல காரணம் இவ்வாறான ஆண்களின் குடும்பங்களே.குடும்பங்களில் பெண் பிள்ளையை ஒரு விதமாகவும் ஆண் பிள்ளையை வேறு விதமாகவும் நடத்துகின்றனர்.பெண் என்றால் தன் வீட்டில் முடங்கிக் கிடக்கவேண்டும் என்ற வகையில் தான் பலர் தம் பெண் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.இதனால் ஆண் பிள்ளையின் மனதில் பெண் என்பவள் வீட்டுவேலை செய்யவும்,கணவனுக்குப் பணிவிடை செய்யவும் ஆண்களிடம் அடங்கியிருப்பதற்கும்தான் பிறப்பெடுத்திருக்கிறார் என்ற தவறான அப்பிப்பிராயம் தோன்றிவிடுகின்றது. இவ்வாறான கோணத்தில் பெண்ணை நோக்கிய ஆண்களுக்கும் பெண்கள் படிப்பதும்,வேலைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதாவது அடங்கி,ஒடுங்கி இருக்கவேண்டிய பெண்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதே,அவர்களின் நடமாட்டம் நசுக்கப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான புத்தி தோன்றுகின்றது.ஆண்களின் இவ்வாறான புத்தியே பெண்களை கேலிப்பேச்சிற்கு ஆளாக்குகின்றது. வெளியிடங்களில் ஆண்களால் இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெண்கள் வீட்டில் வந்துகூறப் பயப்படுகின்றனர்.காரணம் நாளையிலிருந்து நீ தனியாகப் படிக்கப்போகவேண்டாம்,மேற்கொண்டு படிக்கவேண்டாம்,வீட்டிலேயே இருந்துபடி என குடும்பத்தவர்கள் பெண்களை முடிக்கி விடுகின்றனர்.உண்மையான பாசமுள்ள குடும்பத்தவர்களாக இருந்தால் பெண்களின் உரிமைகளை நசுக்கவோ ஒடுக்கவோ கூடாது.அவளிலிருந்து அச்சத்தை விலக்கி வாழ வழிவகுத்துக்கொடுங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
திருமணவாழ்க்கை இன்பமா? துன்பமா? இரண்டும் உங்கள் கைகளில் ------------------------------------------------------------------------------------------ ------------------------------------------------------------------------------------------ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ திருமண வாழ்வு சொர்க்கமாக இனிப்பது கணவன், மனைவி இருவர் கைகளிலுமேயே தங்கியுள்ளது. திருமண பந்தம் ஏற்படுத்தும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. ஆயுள் முழுவதும் இணைந்து வாழப்போகின்ற பந்தத்தின் நுழைவாயிலே திருமணமாகும். வௌ;வேறு குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழ்ந்து வந்த இருவர் இணைந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் இல்வாழ்வில் இன்பமும் துன்பமும் தவிர்க்க முடியாதவை. பெண்ணியச்சிந்தனைகள் மேலோங்கி வரும் இன்றைய காலத்தில் திருமண வாழ்விலும் சமத்துவ சுதந்திரரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் பண்பாட்டுப் போலிகள் சிறுவயதில் இருந்தே மனதில் ஏற்படுத்தி வந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டுப்பெண்ணைச் சம அந்தஸ்துள்ள துணைவியாக ஏற்றுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை. நமது நாட்டில் காதல் சுதந்திரம் கிடைப்பதில்லை. சுயவிருப்பத்தின் பெயரில் ஏற்படவேண்டிய உறவு நிர்ப்பந்தங்களின் நிபந்தனையாக ஏற்படுகின்றது. இங்கம் பெண்ணின் நிலைதான் மிகப்பரிதாபகரமானது. போலிக்கற்பு எனும் மாயையும் பொருளாதாரமும் பெண்கள் தம்துணையை சுயவிருப்பின் பேரில் தேர்வு செய்யத்தடையாகவுள்ளன. சீதனம் சுயவிருப்ப அங்கீகாரமின்மை என்பவற்றோடு ஆரமபிக்கப்படும்இல்வாழ்வு பல நெருடல்களுடனேயே ஆரம்பிக்கின்றது. உள்ளம் உடல் இரண்டையும் பகிர்ந்து வாழ்கின்ற இவ்வுறவு ஆரம்பத்தில் இருந்தே இணக்கப்பாட்டுடன் தொடரப்படவேண்டியது அவசியம். நெருக்கம், நுட்பம், தீவிரம், அன்பு நிறைந்த பிரத்தியேகமான இல்வாழ்வை இன்று பலர் வீம்பினாலும், பிடிவாத்தினாலும், சந்தேகத்தினாலும், புரிந்துணர்வின்மையாலும் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் - பெண் இருவரும் நல்ல இயல்புடையவர்களாக இருந்தும் கூட சில திருமணங்கள் புரிந்துணர்வற்ற முரண்பாடு காரணமாக நரகமாகிவிடுகின்றது. திருமண வாழ்வில் நிரந்தர நிறைவு காணவேண்டுமானால் பரஸ்பர புரிந்துணர்வு முக்கியமானது. எமதுநாட்டில் காதல் திருமணங்களால் பெரும்பாலானவை கூடப் புரிந்துணர்வினால் மலர்வதில்லை. பல காதல்கள் வெறும் உடல் உந்துதலினால் மட்டும் ஏற்படும் நிலை உள்ளது. பரஸ்பரம் இருவரும் பழகுமுன்னரே கண்டதும் காதல் என்ற மாயை நிலையில் ஏற்படும் காதல் பெரும்பாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது திருமண வாழ்வு அவர்களுக்குச் சுமுகமாக இருப்பதில்லை. காதலிக்கும்போது உடல் சுகத்தை மனம் நாடும். ஆனால், உடலுறவு இங்கு கட்டாயமானதல்ல. பேசிச்செய்யும் திருமணங்களில் ஒருவித அறிமுகமோ பழக்கமோ இல்லாத ஒருவர் திடீரென்று இணையும்போது அவர்களது முதல்நெருக்கமே உடலுறவோடு ஆரம்பிக்கின்றது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. பேசிச்செய்யும் திருமணங்கள் பல நிர்ப்பந்த திருமணங்களாகவும், சீதனத்தினால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவும் இருக்கின்றன. இல்வாழ்வு சிறக்க வேண்டுமானால் பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் முதலில் மாறவேண்டும். இல்வாழ்வில் மனைவி என்பவள் சமபங்காளி என்பதைக் கணவன் அங்கீகரித்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும் என்ற நினைப்பு மாறவேண்டும். இறுதிவரை இணைந்து வாழ்ந்திட ஏற்படுத்தப்படுகின்ற திருமணப்பந்தங்களில் ஆரம்ப சந்தோஷம் தொடர்ந்து நிலவிட பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியம். அன்பு, காதல், பாசம், என்பவை ஏற்படவும் நீடிக்கவும் இல்வாழ்வின் சந்தோஷங்கள் வழி சமைக்கின்றன. எனக்கு இன்றும் என்றும் அவளேதான் முக்கியமானவள் என்று கணவனும், அவனேதான் முக்கியமானவன் என்று மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பரஸ்பர தேவைகளைப் புரிந்துகொண்டு பொய்ம்மையோ, பாஷாங்கோ, திரைகளோ இன்றி உண்மையுடன் இணைந்து வாழவேண்டும். பிறதலையீடுகள் தமது உறவைப்பாதித்துவிடாமல் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். முரண்பட்ட கருத்துக்களைக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அழுத்ம் கொடுக்காமல் மற்றவர் கருத்தையும் செவிசாய்த்து பரஸ்பர உரையாடல் மூலம் தீர்க்கவேண்டும். கடும் சொற்பிரயோகம், சீற்றம்கொள்ளல் முதலானவற்றால் சொர்க்க வாசலைத்திறந்திட முடியாமல் போய்விடும்.சிலருக்கு ஏற்படும் பொருத்தமற்ற அல்லது பற்றாக்குறையான பாலியல் தேவைகள் காரணமாகப்பல குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை தீர்க்கப்படாவிட்டால் வாழ்வு நரகமாவதோடு புதிய பாலுறவுகள் ஏற்படவும் ஏதுவாகின்றது. உடலுறவில் ஏற்படுமு; ஏமாற்றங்களும் சிக்கல்களும் பெரும்பாலானவை நவீன மருத்துவ மூலமே சீர் செய்யக்கூடியவை. தயக்கமோ வீம்போ இன்றி வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். வீண் சந்தேகம் இல்வாழ்வைச் சீர்குலைக்கும். போதைவஸ்துப்பாவனை, வருமானப்பற்றாக்குறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஆடம்பரம், போலி நாகரிகம் என்பன குடும்பத்தைச் சீரழிக்கக்கூடியவை. குடும்பத்தில் ஏற்படும் எந்தப்பிரச்சினையையும் முறையிலேயே கிள்ளிவிட வேண்டும். பிரச்சினைகள் வளர்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. பிரச்சினைகள் வரக்காரணம் தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு தான் அடுது;தவரைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் பல குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் ஆகும். தனது மனக்குறையைப் பிறரிடம் கூறுவதை விடத் தன் கணவனிடமோ மனைவியிடமோ தான் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் முக்கிய காரணம் ஒருவர் மற்றவரிடம கொண்டுள்ள பயம் ஆகும். சொன்னால் சண்டை வரும் என்ற பயத்தால் மனதிற்குள்ளே அடைத்து வைக்கப்படும் விவகாரங்கள் சில சந்தர்ப்பங்களில் வெளியே கொட்டப்படும்போது கோபத்தையும், சண்டையையும் உருவாக்கும். அமைதியான வாழ்விற்குப் பொய்மையற்ற வெளிப்படையான அணுகுமுறை அவசியமாகும் இல்வாழ்வு சிறப்பது இருவர் கைகளிலும் தங்கியுள்ளது. இல்வாழ்வு சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிப்பது அவர்களே

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
தமிழ் சமூகத்தை சீரழிக்கும் சீதனம் ----------------------------------------------- ----------------------------------------------- ~~சீதனம் முதுகெலும்பில்லாதவர்களின் முகவரி|| இதை நான் சொல்லவில்லை அண்மையில் இலங்கையின் தனியார் வானொலி ஒன்றில் நடைபெற்றிருந்த சீதனம் சம்பந்தமாக நேயர்களின் தொலைபேசிவாயிலான கருத்துப்பரிமாற்றத்தின்போது நேயர் ஒருவர் தெரிவித்த கருத்து. வித்தியாசமாக ஒருபெண் கூறியகருத்து என்னவென்றால் ~~சீதனம் வாங்குபவர்களுக்கு மரணதண்டனை (இது ரொம்பவும் ஓவர்) கொடுக்க வேண்டும்|| என்பதுதான். எது எப்படியிருந்தபோதிலும் அன்று எவரும் சீதனம் வாங்கப்படுவது ஒரு நியாயமானதான செயலாக குறிப்பிட்டிருக்கவில்லை. சமூகத்தில் சீதனத்துக்கு எதிராக இப்படி ஒரு எதிர்ப்பு நிலவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஏன், எப்படி இந்த சீரழிவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது? இது பெண்களுக்கு எதிரான ஒரு கொடுமை என பலராலும் சுட்டிக்காட்டப் ;படுகின்றபோதிலும் உண்மையில் இது தனியே பெண்களுக்கு எதிரான கொடுமை என பச்சை குத்திவிட முடியாது. இது ஒரு சமூகக்கொடுமை இதனால் பாதிக்கப்படுபவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள் என்றபோதிலும் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை ஒரு தகப்பன் தன் மகளை திருமணபந்தத்தில் இணைத்துவைக்க (நாட்டுப்புற வழக்கில் ~கரை சேர்த்தல்| என குறிப்பிடப்படலாம்) ஒரு தம்பி தன் அக்காவை, ஒரு அண்ணன் தன் தங்கையினை, கரை சேர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது. இது இத்தோடு நின்றுவிட்டதா? இல்லையே! கரை சேர்த்துவைக்க கணவன் ஏதோ அசம்பாவிதத்தால் இறந்துவிட அல்லது இயலாத நிலையில் இருக்க அவளின் மகளைக்கரைசேர்க்கவேண்டிய தேவையும் சிலருக்கு ஏற்படுகின்றது. இப்படியே ஒரு தொடராக வளர்ந்துகொண்டிருக்கிறது.எத்தனை ஆண்கள் இந்த சீதனப்பிரச்சினையால் தங்கள் உறவுகளைக் கரைசேர்க்க முடியாதநிலையில் பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்கள். காலங்கடந்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடன்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறார்கள். என்னடா இது ஒரே ஆண்களுக்குரிய புராணமாக இருக்கிறதே என விசனப்படுகிறீர்கள் கொஞ்சம் பொறுங்கள். ஒரு விடயத்தை ஆராய வேண்டுமானால் தீர ஆராய வேண்டுமல்லவா பெறுமனே சீதனம் பெண்களுக்கு எதிரான கொடுமை என கோவிந்தா போட்டுவிட்டால் சரியாகிவிடுமா? சரி இனிபெண்கள் பக்கம் வருவோம்! இவர்களின் சோகம் கொடுமையானது தனக்காக உறவுகள் கஷ்டப்படுவதனை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். பின் கரை சேர்ந்த பின் கட்டிய கணவனிடமிருந்து, ~~இன்னும் கொண்டுவா போ|| என்ற கொஞ்சமும் ஈவிரக்கமற்ற கட்டளைகள். இதனால் மனமுடைந்து எத்தனை பெண்கள் தற்கொலை செய்கிறார்கள். இத்தனை கடினப்பட்டு என்னைக்கரைசேர்த்தவர்களிடம் போய் இன்னும் தாருங்கள் என்று எந்த முகத்துடன் கேட்பது என்பது தான் இவர்களின் முடிவுக்கு காரணம். தற்கொலை என்பதை எந்த மனிதனாகப்பிறந்த ஜீவனும் எடுக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாத வேளையிலும் வேறு என்ன செய்வது? இதைவிட எத்தனை பெண்கள் இந்தச் சீதனத்தினால் தமது உணர்வுகளைக்கருக்கி காலம் முழுக்க கன்னிகளாக காலங்கடத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்யாணம் ஒன்றே கன்னியர்க்கு ஒரு நல்ல பாதுகாப்புக் கவசம் என்ற ஒரு நம்பிக்கை (ஒரு வகையில் நியாயம்தான்) காலம் காலமாக நிலவிவருகின்றது. அப்படியானால் மேற்சொன்னவர்களின் பாதுகாப்புக்கு யார்பொறுப்பு? சீதனத்தை திரட்டுபவர்களில் பெரும்பாலும் ஆண்களே சம்பந்தப்படுகின்றபோதிலும் சில சந்தர்ப்பங்களில் பெண்களும் இதில்பெரும் பங்கு வகிக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.குடும்பத்தில் ஆண்கள் இல்லாத ஒரு நிலையில் தனது தங்கையின் ,அக்காவின் திருமணத்தினை நிறைவேற்ற எத்தனையோ பெண்கள் தம்மை அர்ப்பணித்தும் இருக்கிறார்கள். திருமணத்தின் பின்னரான சீதனக்கொடுமை இன்னும் சோகமானது இதனால் பாதிக்கப்படுவது முற்றிலுமாக பெண்கள் தான் என்றால் மிகையில்லை. சீதனம் கொண்டுவராமல் வந்தவள்@ கொண்டுவந்த சீதனம் பற்றாது இன்னும் கொண்டுவரவேண்டி இம்சிக்கப்படுபவள் என பெண்கள் படும் அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா அது கொடுமையிலும் கொடுமை. இதற்காக இவள் தற்கொலை செய்யப்படுவதையும் காண்கின்றோம். இது இலங்கையில் குறைவாக இருக்கின்ற போதிலும் இந்தியாவில் இது கட்டுப்படுத்த முடியாத ஒரு நோயாக இருக்கிறது. இத்தனைக்கும் சீதனத்துக்கு எதிரான சட்டம் இந்தியாவில் அமுலில் இருக்கிறது. ஆனால் இலங்கையில் இல்லை. சீதனக்கொடுமையால் எத்தனையோ பெண்கள் கையில் குழந்தைகளுடன் விதவைகளாக்கப்பட்டிருக்கும் இது போன்ற எண்ணுக்கணக்கற்ற வித்தியாசமான பாதிப்புக்கள் எமது கண்ணெதிரே சமூகத்தில் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கு சுவாரஸ்யமான ஒரு விடயம் ஒன்று இருக்கின்றது. சீதனம் என்னும் கொடுமையான திரைப்படத்தில் வில்லன் வில்லிகள் எல்லோரும் இருக்கிறார்கள். பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடிய சித்திரவதைகளில் வில்லிகளாக பெண்களாக இருப்பதே அது. மாமியார் கொடுமை, மச்சினிச்சி கொடுமை என இங்கு இருவேறு காட்சிகள். என்ன இந்த உலகமோ தெரியவில்லை. ஒரு மனிதப்பிறவி துன்பப்படுவதை இறக்க இன்னம் ஒரு மனிதப்பிறவி இருக்கிறதே.வெளிப்படையாக சீதனத்தின்கொடுமைகளையும் அதன் பாரது}ரமான விளைவுகளையும் எம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருந்தும் ஏன் இந்த சீதனம் ஒழியவில்லை. நாம் என்ன சிந்திக்கமுடியாத சித்தப்பிரமை பிடித்த ஜடங்களா? இதனால் நாம் அடைந்த இலாபம் என்ன? நட்டம் என்ன?இதனால்தான் என்னவோ அன்று பட்டுக்கோட்டை ~~திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது|| என்று பாடிவைத்தானோ? பட்டுக்கோட்டை இன்றிருந்தால் எப்படிப்பாடியிருப்பானோ? என்று நான் கேட்க மாட்டேன் ஏனென்றால் இந்தக்கொடுமை அவன் காலத்திலும் தலைவிரித்துக் கொண்டுதானிருந்தது. சீதனம் வாங்குபவர்களை பிடித்து மரணதண்டனை வழங்கவேண்டும் என்று கூறிய இந்த பெண் சார்ந்த வர்க்கத்தில்வந்த இன்னும் ஒரு பெண்தான் ஒரு இளைஞனின் தாயாக இருந்துகொண்டு பெண்ணுக்குமாமியாராக இருந்துகொண்டு சீதனம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள் என்றால் நகைப்பாக இருக்கிறதல்லவா. ஆனால் இது தான் உண்மை. எந்தப்பெண் சீதனக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாளோ அதேபெண்தான் சீதனம் தரவேண்டும் என தனது மகனுக்காக வாதாடுகிறாள். எந்த ஆண் தன் உறவுகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக இடர்ப்பட்டாளோ அதே ஆண்தான் மகனுக்கு வீடுவேண்டும் மோட்டார் வண்டிவேண்டும், இருபத்தைந்து இலட்சம்வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்றான். என்ன செய்வது இது கலிகாலம் நான்பெற்ற இன்பம்(?) பெறுக இவ்வையகம் என்ற பெருந்தன்மையோ தெரியவில்லை. இவர்கள் கலியுகத்து அன்னம்போலும் அதாவது பாலில் அழுக்கிருந்தால் பாலைவிட்டு அழுக்கை உட்கொள்கின்றனர். இவர்கள் காலங்காலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஊடகங்கள் திரைப்படங்கள் வாயிலாக இவர்களை நல்வழிப்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் இவர்கள் கொஞ்சமேனும் அவற்றை சட்டை செய்வதாக இல்லை. சிலர் பிரச்சாரத்தில் தாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு சரி. ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி என்பது இவர்கள் எண்ணம் போலும்! எனக்கென்னவோ ||உங்களைத் திருத்தவே முடியாதடா||என்று ஜனங்களின் கலைஞன் விவேக் இனது பாணியில் சொல்லவேண்டும் போலிருக்கிறது. இந்த சீதனம், அதன் பாதிப்புக்கள் எல்லாம் ஒரு சுற்றுவட்டம் என்றே கூறலாம் அதாவது நாம் பாடங்களில் படிக்கின்றோமே நைதரசன் வட்டம், காபன் வட்டம் என்று அவை போல இதுவும் சுழற்சி முறையிலான ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.தகப்பன் மகளைக் கரைசேர்க்க மகள் தன் மகளைக் கரைசேர்க்க இன்னும் ஒரு தகப்பன் தன் மகனுக்கு என இந்த சீதனம் எந்த வேளையிலும் அடிபடும் ஒரு கரப்பந்தாக சுழன்றுகொண்டிருக்கின்றது. இந்தக்கரப்பந்து சுற்றுப்போட்டிக்கு முடிவென்பது கிடையாது ஒருவீரர் களைத்துவிட்டால் இன்னும் ஒரு வீரர் களமிறங்கிவிடுவார். இதனை நிறுத்தவேண்டும் எனில் அணுக்குண்டு (?) ஜமனச்சாட்சிஸ தான் போடவேண்டும். எது எப்படியிருப்பினும், இந்த சீதனத்தை வாங்குபவர்களாக இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய ஓரிடம் இருக்கிறது. சீதனம் என்ற ஒரு தொகைப் பணத்தை,பொருளைப்பெற்று ஆண்களை நிபந்தனைக்குட்பட்ட விபச்சாரத்திற்காகவிற்கின்றார்கள். அல்லது தாமே விபச்சாரிகளாக விலைபோகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்களினை பணங்கொடுத்து ஏற்பாடுசெய்தால் அதுவிபச்சாரம் என்பதுபோல இதுவும் ஒரு நீண்ட கால விபச்சாரமாக ஏன்கொள்ள முடியாது? இவர் பொறியியலாளர் இவருக்கு எழுபத்தைந்து லட்சம் இவர் மருத்துவர் இவருக்கு ஐம்பது லட்சம் என ஒவ்வொரு ஆண்களும் விலைபேசப்படுகிறார். வேலையில்லாவிட்டால் என்ன பரவாயில்லை அவருக்கு பத்துலட்சம் தரலாம். ஐந்து லட்சம் அந்த அற்புதமகனை ஈன்ற பெற்றோருக்கு ஐந்துலட்சம் வங்கியில் போட்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள் என சந்தை நிலவரம் போகிறது. பெண் விபச்சாரம் ஆனது ஓரளவுக்கேனும் மறைமுகமாகவே இருக்கிறது ஆயினும் இந்த ஆண் விபச்சாரம் (சீதனம் சம்பந்தப்பட்டது) இருக்கின்றதே அது பட்டப்பகலில் நிறைவேற்றப்படுகிறது. தெருவில் கந்தையா வருகிறார் எதிரில் முருகேசுவருகிறார். ~~என்ன கந்தையா புது மாப்பிளை போல வருகின்றாய் யாரின்ர கல்யாணம்? என்று கேட்க ~~ இவன் செல்லையா இருக்கிறானே அவனின்ர கடைசிப்பெட்டைக்கு கல்யாணம் || என்றார் கந்தையா. ~~யாருபொடியன் எவ்வளவு சீதனமாம்? ~இது முருகேசரின் ஆவலான கேள்வி. இது சாதாரணமாக தெருவில் இன்று சம்பவிக்கக்கூடிய உரையாடல் அந்தளவுக்கு சீதனம் வேரூன்றி இருக்கின்றது என்றால் மறுப்பீர்களா? திருமணம் - உலகத்தில் நாம் பிறந்து வாழப்போகும் காலப்பகுதியில் பெரும் பகுதி இதன்பின்தான் ஆரம்பிக்கின்றது. இதற்கு நாம் விலை பேசுவதா உலகில் மனி;தப்பிறவிகளுக்கு இரண்டு ஜாதி தான் இருக்கிறது ஒன்று பெண் மற்றது ஆண். இதையெல்லாம் நீங்கள் சொல்லியா நாங்க தெரியவேண்டும் என நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது என்ன செய்வது அது அதுவா வருகுது. இந்த இரு இனங்களும் கூடிவாழும் போது உள்ள சுகம் எங்கு கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழும் போது கிடைக்கும் இனிமையினை யாரால் விலை பேசமுடியும். ஒரு பெண் தனது இறுதி அத்தியாயத்துக்காக தன் உறவுகளைப்பிரிந்து கணவனே கதியென கால் எடுத்து வைக்கும்போது அவளைப்பார்க்காமல் அவள் அன்பைப்புரியாமல் அவள் என்ன கொண்டுவருகிறார் என்று பார்ப்பது என்ன மடத்தனம். அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் சீதனம் தானே அதை விடுத்து அவள் கழுத்தில் எவ்வளவு கையில் எவ்வளவு கட்டிவருவது எவ்வளவு என்று பார்க்கிறானே ஒரு ஆடவன். கட்டிய மனைவியினை கண்கலங்காது கட்டிக்காப்பது கணவனின் கடமை என்று உணராமல் அதற்கு கூலிதரவேண்டும் என்று கேட்பதற்கு செய்யப்படும் பந்தத்துக்கு பெயர் திருமணமா? இதற்கு அவர்கள் பெண்களை கலங்காது காப்பாற்றுவோம் என்று ஒரு புதிய சேவையினை தொடங்கியிருப்பார்களானால் சிலவேளை ஏற்கக்கூடியதாயிருக்குமே. அண்மையில் இதுபற்றி ஒரு பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்க கூட்டத்தில் ஒருவர் குரல்கொடுப்பது எனக்கு கேட்கிறது. ~~நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டுப்படித்து இந்நிலைக்கு வந்து இருக்கின்றோம். எம்மை இந்நிலைக்கு வரச்செலவழித்த பெற்றோருக்கு நாம் என்ன கைம்மாறு செய்வது அதற்கு இந்த சீதனம் தானே பதில்|| என்று அவர் கூறுகிறார். அதோ மற்றவரும் சொல்லவருகிறார் கேட்போம். ~~நாம் வாழ்க்கையின் பெரும்பாகத்தை உறவுகளுக்கு ஒரு நல்ல வரன் (மாப்பிள்ளை) கிடைப்பதற்கும் அவனுக்கு சீதனம் கொடுக்கவும் செலவழித்துவிட்டோம். இனி எமக்கு என்று ஒன்றும் இல்லை. அப்படி இருக்க எமது வாழ்கையினை தொடக்க ஒரு முதலாக இந்த சீதனத்தை வாங்குகிறோம்|| என்கிறார் ஆதங்கத்துடன். என்னடா இது கொஞ்சம் விட்டால் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள் இதோ கூட்டத்தின் முன்னாலிருந்து ஒரு குரல் பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? ~~நாம் என்ன இளிச்சவாயன்களா? நான் இன்று மருத்துவராயிருக்கிறேன் வயது 30 ஆகிறது வீட்டில் கல்யாண வயசில் மூன்று சகோதரிகள் நான் என்ன செய்வது இன்றுவரை நான் உழைத்து ஏதுமில்லை. எல்லாம் வீட்டில் வாங்கியது தான் இனி அந்த சகோதரிகளை கரைசேர்க்க நான் சீதனம் வாங்கத்தானே வேண்டும். கொஞ்சமும் இரக்கமில்லாமல் கதையாக்கின்றீர்களே அப்படியானால் நீங்கள் எனது சகோதரிகளை கரை சேருங்கள். நான் சீதனம் வாங்கவில்லை.|| போட்டாரே ஒரு போடு.(இது என்னடா ஒரு புதுச்சிக்கல்) சரி சரி அமைதி என்று குரல் கொடுத்தேன். அப்போது கூட்டத்தின் மூலைப்பக்கத்தில் இருந்த ஒருவர் எழுந்து ~~நான் என்ன செய்ய எனக்கு சீதனம் வாங்காமல்விட விருப்பம் தான் ஆனால் என்ன செய்ய அம்மாவும் அப்பாவும் பிடிவாதமாய் இருக்கின்றனர் வாங்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாய் மிரட்டுகினம்|| என்றார் தொங்கிய முகத்துடன்.அந்தவேளையில் அங்கு இன்னும் ஒரு கூட்டம் கையில் வீச்சரிவாள்களோடு. ~~யாரடா அவன் என்ர பொடியனை சீதனம்வாங்க வேண்டாம் என்றுசொன்னவன்|| என்று பாய்ந்து வந்து கொண்டிருந்தார் ஒரு பெரியவர் கையில் வாளுடன். பிறகென்ன நான் விவேக்கின் பாணியில் எஸ்கேப்(தப்பிவிட்டேன்) வெள்ளைக்காரனிடம் நாம் பெற்றுக்கொண்டவற்றில் நல்லவைகள் மிகக்குறைவே. உண்மையில் பெரிய விஞ்ஞானிகள் எல்லாரும் வெள்ளைக்காரர்கள் தான் அவர்கள் சீதனம் கேட்டா திருமணம் செய்தார்கள் மிகவும் எளிமையாகவல்லவா வாழ்ந்தார்கள். அவர்கள் கேட்டிருந்தால் சந்தை நிலவரம் எவ்வளவாக இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தால் தலை சுற்றுகின்றதல்லவா? இந்தியாவிலும் இலங்கையிலும் தான் இந்த சீதனத்தின் தாக்கம் அதிகம் எனலாம். மேலும் தமிழர்கள் பெரும்பாலான தொகையில் வாழும் நாடுகளில் அவர்களிடையிலும் இது காணப்படுகின்றது. சிங்களவர்கள், முஸ்லிம்கள் மத்தியில் இது பெரியதாக்கம் தருமளவில் இல்லை ஆயினும் தமிழர்களிடையே தான் இது பெரியளவில் பரவி இருக்கிறது. நான் முற்சொன்னவாறு இது ஒரு சுற்றுவட்டத்தில் தான் இருக்கிறது. ஓரிடத்தில் சீதனம் வழங்கப்படுகிறது அந்தச்சீதனம் பகுதியாகவோ முழுமையாகவோ இன்னும் ஒரு இடத்திற்கு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குறித்த தொகைப்பணம் கைமாறிக்கொண்டிருக்கின்றது. இது எந்தவித சிரமமும் இன்றி நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்க பக்கவிளைவுகளாக இடையில் சில நபர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எந்த இயக்கமும் சீராக இருக்க வேண்டும் என்பதில்லைத்தானே. ஒருவர்வாங்குகிறார் அவரிடம்வாங்க இன்னுமொருவர் தயாராகஇருக்கிறார் அவரிடம் வாங்க இன்னும் ஒருவர் இருக்கிறார். இந்தச் சுழற்சிப்பரிமாற்றத்தைக் குழப்ப ஒருசிலர் இருப்பார்கள். (அவர்கள் தான் உறவுகள் இல்லாதவர்கள், இவர்கள் இந்த சீதனத்தில் குளிர்காய்கின்றவர்கள் அதனை தமக்கு சாதமாக்கி பிழைக்கத்தெரிந்தவர்கள்(?) இவர்களை விட வேறு காரணங்களும் இந்த சுழற்சி பரிமாற்றத்தினை சிக்கலுக்குள்ளாக்கி சிலர் பாதிக்ககாரணமாயிருக்கின்றன. அவை குடும்பத்தில் சீதனத்தின்தேவையுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை, சீதனத்தின் சந்தை பெறுமதிகள் (தொழில்களுக்கு ஏற்ப மாறுபடும்) இந்த சிக்கலான செயற்பாடுகளுடன்கூடிய இந்த சீதனக்கொடுமையினை நிறுத்தமுடியுமா? முடியும் மனமுன்டானால் இடமுண்டு. எல்லோரும் ஒரே நேரத்தில் சீதனம் வாங்குவதையும் வழங்குவதையும் நிறுத்திக்கொண்டால் தீர்வு கிடைக்காதா? ஏன் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருக்கவேண்டும்? குளிர்காயவேண்டிய, வாங்கவேண்டிய தேவைகள் இல்லாதபோது இடர்ப்படவேண்டிய, வழங்கவேண்டிய தேவைகள் அற்றுப்போகும் தானே? இறைவன்மனிதனை வாயுடன் வயிற்றுடன் படைக்கும்போது கால்களையும் கைகளையும் படைத்தான் தானே ஏன் அவை மூலம் தேவையானதைப்பெற்று வாய் வழி வயிற்றில் கொட்டத்தானே. இதனைவிடுத்து வாய்மூலம் சீதனம் கேட்டு வாங்கி வயிற்றை வளர்த்துவைத்து கையிலும் காலிலும் கனக்க கனக்க அணிகலன்போடவா இறைவன் படைப்பை அர்த்தம் கொள்வது? காதலிக்கும்போது பெற்றவர்கள் எதிர்ப்பிருந்தால் காதலியைக் கூட்டிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடுவீர்கள். ஆனால் சீதனம் விடயத்தில் பெற்றோர் வற்புறுத்தின் கொண்டவளையும் கொடுமைப்படுத்த தயங்கமாட்டீர்கள். இது எந்த வகையில் நியாயம். இங்கு காதலைப்பற்றி கதைக்கும் போது ஒன்றைக்குறிப்பிடவேண்டும் சீதனத்தை சிதைத்து வெற்றிகாணும் ஆயுதங்களில் இது கூராயுதம் எனினும் அந்தக்காதலை தமது காமத்துக்கும் காரியங்களுக்கும் இரையாக்குபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.மூலதனம் வேண்டுமா கிடைப்பதனை கடனாகக்கருதி அதனை திருப்பி கொடுப்பதை உறுதிப்படுத்தின் அது சீதனம் என்றபெயரை பெறுவதை தடுக்கலாமல்லவா? சும்மா சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் ஆனால் மணிகட்டின ஆடு சொன்னால் கேட்பார்கள் இது தான் மனிதஇயல்பு. ஈழத்தைப்பொறுத்தவரை வடக்குக்கிழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இதன் தாக்கம் வெகுவாகக்குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கு மேற்சொன்னகாரணம்தான். மேலதிகமாய் இருந்தால் எமக்குத்தாருங்கள் வீட்டுக்குதவாத சோம்பேறிகளை உருவாக்குவதை விடுத்து நாட்டுக்குதவும் வீரர்களை உருவாக்குவதே சிறந்தது என்பது அவர்களது கண்டிப்பானவாதம். இதனை அவர்கள் இயன்றவரை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். போராட்டம் எமக்கு தந்த பரிசுகளில் பட்டினி, உறவுகளின் பிரிவு, அழிவு என்பனவற்றுடன் இந்த சீதனப்புரட்சி, பெண்மைப்புரட்சி, சாதிப்புரட்சியும் உள்ளடங்கும் என்பது சற்றே ஆறுதலளிக்கும் உண்மை. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தமது வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.சீதனம் வாங்குவது நல்லது அல்ல என புரிகிறது. ஆனால் நிறுத்த மனமில்லை அல்லது நிலைமை விடவில்லை. எந்த நல்லதையும் செய்ய ஒரு சில தியாகங்களை செய்யவேண்டும் தானே ஒன்றைப் பெற ஒன்றை இழப்பது அவசியம்தான். அவர் வாங்கினவர் தானே ஆனபடியால் நானும் வாங்கவேண்டும் என சொல்வது தவறு. இதுபோன்ற விதண்டாவாதங்களால்தான் ~ராக்கிங்| இன்னும் தொடர்ந்து கொண்டிக்கின்றது. இன்னும், சீதனம் வாங்குவது குற்றம் எனினும் வசதியான இடத்தில் வாங்கலாம். தேவையிருந்தால் வாங்கலாம் என்றெல்லாம் புகைக்குண்டுகளை எறிவது அவ்வளவு நல்லதல்ல. அது நிச்சயமாக இருந்த கொடுமையினை முன்னெடுத்துச் செல்பவர்களாக எம்மை இனங்காட்டுமேயன்றி வேறொன்று மில்லை. வெறுமனே குண்டக்கா மண்டக்கா விவாதங்களை ஓரங்கட்டிவிட்டு இளைஞர்களே, யுவதிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே சீதனப்புரட்சியில் இன்றே இணைவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
முதியவர்கள் நமக்குப் பாரமா??? ----------------------------------------- ----------------------------------------- முதியோர்கள் - காலச்சக்கரத்தின் கடமைகளை முடித்துவிட்டு காலதேவ னுக்காய் காத்திருக்கும் கட்டைகள். சிறுவர்கள் - என்னவென்று தெரியாத உலகில் எதையோ சாதிப்பதற் காய் முகிழ்த்திருக்கின்ற மொட்டுகள். இன்று இவர்களின் நாள். அடிக்கடி உலகம் மறந்து போகின்ற மானிடர் களை நினைந்து கொள்வ தற்காகத்தானே இந்த மானுடத் தினங்கள். இவர்கள் விடயத்தில் உலகம் என்ன மறந்தது என்று நீங்கள் கேட்கக ;கூடும். இவர்களும் மனிதர்கள் என்பதை உலகம் மறந்து விட்டதுதான் உண்மையாகும். சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்படுவது குறித்தும், இன்று அதிகம் பேர் கதைக்கத் தொ டங்கிவிட்டார்கள். எனவே, இந்தக் கட்டுரையில் நான் அவர்களைப் பற்றி அதிகம் தொடா மல் சிந்திக்கப்படாத சில ஜீவன் களைப் பற்றி உங்கள் நெஞ்சோடு பேச விழைகின்றேன். முதிய மனிதர்கள், உலக ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்ட சடப் பொருள்கள். இப்படித்தான் நாம் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு கணக்குப்போட்டு வைத்திருக்கிறோம். எந்தத் தேவையும் அற்றவர்களாய், எதற்கும் தேவையற்றவர்களாய் அவர் களுக்கு ஒருகோடு கிழித்து வைத்திருக் கிறோம். நாளெல்லாம் எம்மைத் தோள் மீது சுமந்தவரின் உடைமைகளை ஒரு தோல்பைக்குள் முடக்கி வைத்துள்ளோம். வீட்டுப்படி யேறி விறாந்தை தாண்டி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வரும் நாலறைதாண்டி வரும் ஐந்தாவது அறையில் ஒரு மூலையில் ஒரு மூச்சுச் சத்தம் கேட்கும். முனகல் கேட்கும். உற்று நோக்கினால் ஓர் உருவம் தெரியும். உலர்ந்த தோல் ஒட்டிய உடலுடன் கண்களைச் சுருக்கி கனதியாய் நோக்கிவிட்டு சோர்ந்த உடல் சரிந்து அவ்வுருவம் உறக்கம் கொள்ளப் பார்க்கும். என்ன வர்ணனையாய் போகிறதே என்று எண்ணுகிறீர்களா? இல்லை. முதியவர்களைக் கொண்ட நம் தமிழ்த் தேசிய குடிகளின் ஒவ் வொரு நு}று வீட்டிலும் எழுபது வீடு களில் இதுதான் நிலைமை. தம் இள மைக்காலத்து இரத்தத்தை வியர் வையாய் சிந்தி தன் சந்ததி சக தியை மிதிக்காது வாழவைத்த பெற் றோருக்கு அவர்கள் வயது முதிர்ந் ததும் அவர்கள் தம் சிறகுகளால் காத்து வளர்த்த பிள்ளைகள் கொடுக் கும் பரிசு இதுதான். உலகின் கண் களுக்குத் தெரியாமல், ஏன் உறவினர் களின் கண்களுக்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் உங்களோடு கதைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இந்த மனிதர் களின் நிலை என்ன? பிள்ளை படித்து பெரியவனாகி பட்டம் வாங்கி பரதேசம் போவான். அகதி என்ற பெயரில் அப்பா கொடுத்த பணத்தில் அரச வாழ்க்கை வாழ்வான். இங்கே இந்த கிழடுகள் பிள்ளைக் காய் கட்டிய வீட்டை கட்டிக்காத்துக் கொண்டு காவல்காக்கும் நாய்களாய், புதையல் பேணும் பேய்களாய் ஆவி பிரியும் முன்னம் ஆஸ்தியை பிள் ளையிற்ற குடுத்திட வேணும் என்ற கனவுகளோடு....... பத்திரிகைகளில் செய்தி வரும். ~~தனிமையில் இருந்த மூதாட்டி கொலை, நகைகள் அபகரிப்பு.|| ~~வயோதிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.|| கொள்ளிவைக்கக்கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை. வலிகாமம் பகுதியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தகப்பன் இறந்து போனார். ஜேர்மனியிலுள்ள மகனுக்கு அறிவித்தார்கள். அப்பா இறந்துவிட்டார். கொள்ளிவைக்க ஒரு பிள்ளையும் இங்கு இல்லை. நீங் கள் வாருங்கள் என்று. மகன் டெலி போனில் பதில் சொன்னார். ஷஷயாழ்ப்பாணம் இன்னும் முன்னேற வி;ல்லையே இன்னும் கொள்ளிவைச் சுக் கொண்டிருக்கிறியள். காசனுப்பி விடுகிறன் பொடியை கொழும்புக்கு கொண்டுவந்து மெசினில குடுத்து எரி யுங்கோ. வடிவா எல்லாத்தையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ.|| இது கதையில்லை உண்மை. தன் இரத்தத்தால் உயிர் கொடுத்த தந்தையை, தன் இரத்தத்தை ஊனாக்கி உடல் வளர்த்த அன்னையை, அருகிருந்து பார்த்து, அவர் தம் உயிர் பிரியும்வேளை உடனிருந்து உருகாத மனமுடைய மனிதன் ஒரு நல்ல மகளாக அல் லது மகனாக இருக்கமுடியுமா? மல்லாகம் பகுதியில் ஒரு சம்ப வம் 18 வருடம் வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த ஒரு மகனை தாய் கேட் டாள். ஷஷஎன்ர பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசையாய் கிடக்கு கூட்டிக் கொண்டு போவன் மேனை.|| அவர் சொன்னார். ~~இனி இவவுக்கு இந்த வயதில அங்கென்ன வேலை?|| இந்த மனிதர்களின் சிந்தனை களைப்பாருங்கள். முதியவர்களுக்கு எதுவும் தேவையில்லை. எந்த உணர்வுக்கும் அவசியமில்லை என்று நினைக்கிறார் கள். ஆனால், அவர்களுக் கும் ஆசைகள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. தாம் புறக்கணிக்கப்படு வதைக் கண்டு அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். உள்ளத்தால் அழு கிறார்கள். தமது கருத்துகளை நம் பிள்ளை கேட்க வேண்டும், குடும்ப நடவடிக்கைகளில் தம்மையும் பங் கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும், தம்மை தமது அடுத்த தலைமுறை மதிக்க வேண்டும் என்ற எண்ணங் கள் அவர்களிடமுண்டு. இவைகள் ஈடேறாதபோது அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். இதனால் பலர் முடங்கிப் போகிறார்கள். சிலர் முரண்படுகிறார்கள். இதற்கு நம் மவர் கொடுக்கும் விளக்கம் ஷஅறளை பெயர்ந்து போச்சுது அதுதான் இப்படி||. இன்றைய பிள்ளைகள் தம்மைச் சுமந்தவரை நாம் சுமப்பது பாரமென நினைக்கிறார்கள். அவர்களில் பலர் நம் முதிர்ந்த பெற்றோரை விடுதி களிலும் சிலர் வீதிகளிலும் தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலானோர் மூலையில் இருத்தி மூன்று நேரமும் உணவளிக்கிறார்கள். மூன்று வேளை கிடைக்கும் உணவு அவர்கள் மூச்சுவிட போது மானதாக இருக்கலாம். அவர் தம் உணர்வுகளுக்கு வடிகாலாக அமை யாது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுவிட்டு மாதா மாதம் பணம் கொடுக்கும் பிள்ளை களுமுண்டு,. ஷஷவடிவா காசு குடுத்து கவனிக்கிறம் தானே|| என்பது அவர் கள் கணக்கு. ஆனால், பிணக்கு இது வல்ல. அவர்களின் உள்ளத்தின் ஓசைகள் கேட்கப்படுகிறதா? தள் ளாத வயதில் எழும் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதுதான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் வாழ்க்கை அல்ல இவர்கள் வாழ்வு. காலச் சுழற்சியில் கடைசி மணித் துளிக்காய் காத்திருக்கும் கணங்கள் இவர்களுடைய வாழ்வு. இன்றிவர் நோவுக்கு மருந்திடாது மறைந்த பின்பு அழுது புலம்பியென்ன? ஆண்டுத் துவசம் செய்தென்ன? இலங்கைத் தீவிலே எண்ணிக்கை அடிப்படையில் நோக்காது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் படித்த சமூகம் என தம்மை மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில் தான் முதியவர்கள் அதிகளவில் அல்லற் படுத்தப்படுகிறார்கள். அடக்குமுறைக் குட்படுத்தப்படுகிறார்கள். முதியவர்கள் பற்றி ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறும் கருத்து என்னவெனில், ஒரு குறிப் பிட்ட வயதைக் கடந்து முதிய கோல மடைந்த மனிதன் மீண்டும் குழந்தை களின் நிலைக்கே திரும்புகிறான். அங்கே அவன் எண்ணங்கள் சிந்தனைகள் ஒரு குழந்தையிடமுள்ள தைப்போல பிடிவாதமுடையதாய் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டு மென்பதற்காக செயல்களைச் செய்வதாகவே இருக்கும். இவர்கள் உடலால் முதிர்ந்தவர்களாயினும் உள்ளத்தால் குழந்தைகளைப் போலிருப்பர். எனவே, அவர் களை உங்கள் பிள்ளைகளில் ஒரு வராகவே நோக்குங்கள். கருதுங்கள் என்கிறார்கள். ஆனால், நடப்பது என்ன? பிள்ளைகளைப் போல பேண வேண்டியவர்களைத் தொல்லை களாவே கருதுகிறார்கள். பல்லாண்டுகளாகத் தம்மைப் பேணியவரை சில ஆண்டுகள் பேணுவதற்கு சினக்கிறார்கள். இத்தகைய நடத்தைகள் மனித நேயமற்ற செயல்களாகவே கருதப்படவேண்டும். இதை சட்டமும் ஏற்றுக்கொண ;டுள்ளது. இலங்கையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 9 ஆம் இலக்க சட்டத்தின்படி முதியோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத் தின் பிரகாரம் அறுபது வயதைக் கடந்த ஒரு நபர் முதியவராக கருதப் படுவார். அத்தகைய ஒரு முதியவர் தம் பிள்ளைகளால் தமக்கு போதிய பராமரிப்பு கிடைக்கவில்லை என உணர்ந்தால் தமக்குப் பிள்ளைகளி டமிருந்து போதிய பராமரிப்பைப் பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக் கல் செய்யமுடியும். இத்தகைய வழக்குகளை முதியவர்கள் சார்பில் இலவசமாக நடத்துவதற்கு ~வயது வந்தவர்களுக்கான தேசியச் செயல கம்| எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவரும் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் இதற்கான விண்ணப் பப்படிவத்தைப் பெற்று மேற்படி செய லகத்திற்கு விண்ணப்பத்தினு}டாக வழக்குகளை மேற்கொண்டு தமக்குரிய பராமரிப்புக்கான செலவுகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு பிள்ளைகள் எனும் போது சட்டாPதியான பிள்ளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு வயதான பெற்றோரும் தமக்கு பிறந்த சட்ட hPதியற்ற பிள்ளைகள் மறுமணம் மூல மாகப் பிறந்த பிள்ளைகள், வளர்ப்பு பிள்ளைகள் போன்றோரிடமிருந்தும் பராரிப்பைக் கோரும் உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே, மேற் குறித்த எந்தப் பிள்ளையாயினும் தமது வயதான பெற்றோரைப் பரா மரிப்பது கட்டாயமாகிறது. ~~பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது|| ~~பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது|| என்ற கவிவரிகள் எம் மூரின் தெருக்களில் நிதர்சனமாகத் தெரிவது வேதனைக்குரியது. ~நாய் வளர்த்து பாலை வார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நன்றிகெட்ட பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும்|| எனும் வரிகள் ஒவ்வொரு வயதான பெற்றோரின் மனதிலும் ஆழப்பதியும் நிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. தென்னையை வைத்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று அவர்கள் கண்ணீர்விடும் காலம் இன்று. இந்த நிலை மாறவேண்டும். தன் தகப்பனுக்கு ஒருவன் உடைந்த தட்டிலே உணவு கொடுத்தானாம். அதைக் கண்ட அவன் பிள்ளை அத்தட்டை எடுத்து ஒளித்து வைத்தானாம். ஏனடா ஒளித்தாய் என்று கேட்டதற்கு அப்பா நீ உன் அப்பாவுக்கு உடைந்த தட்டிலே உணவு கொடுக்கிறாய். எதிர்காலத்தில் நான் உனக்கு உணவு கொடுக்க ஓர் உடைந்த தட்டு வேண்டுமே அதற்கா கவே எடுத்து வைத்தேன் என்றானாம். இந்தக் கதையிலுள்ள தத்துவம் ஒவ்வொரு பிள்ளைக்கும் உறைக்க வேண்டும். உனக்கு உயிர் தந்த வரை உன் உயிர் இருக்கும்வரை கவனி. காலம் உனக்கு பரிசு தரும். உன் கடைசி காலம் கண்ணீர் இன்றி கழியும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org