<$BlogRSDUrl$>

வானம் ஏன் நீல நிறம் ----------------------------- வானம் ஏன் நீல நிறம், உங்களிடம் பதில் உள்ளதா? வானத்தில் கானும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல் தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது. வின்வெளியில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கருப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டும் நீல நிறமாகத் தெரிவதேன்? பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம். சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே, அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே, ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு (frequency). வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும், சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை. ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.) நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான். அதனால் தான் 'பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும்' என்று ஆதி சங்கரர் கேட்டார். இதைப்பற்றி சற்று தெளிவாகப் 'பார்க்கலாம்'! உதாரணமாக: நாம் பார்க்கும் பருத்தி உடை பச்சை நிறம் என்றால், அந்த உடையில் படும் ஒளியில் பச்சை நிறத்திற்கான துடிப்பு மட்டும் திரும்பி வருகிறது, அது நம் கண்களில் படும் போது பச்சைச் சட்டை என உணருகிறோம். இருட்டில் எதுவும் கண்ணுக்கு தெரியாததன் காரணமும், பொருட்களில் இருந்து எந்த ஒளியும் நம் கண்ணுக்கு வந்து சேராதது தான். இதனால் தான் பனிமூட்டத்தில் அருகில் இருக்கும் நபர் கூட தெரிவதில்லை, மேகமில்லாத இரவில் நெடுந்தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தைக்கூட நம்மால் 'பார்க்க' முடிகிறது. காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் பறந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
காதல் ஈர்ப்பு ---------------- அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது. இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்வின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது. அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்ல நாகரிகம் படர்ந்தபோது அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டார்கள். உறவுகள், குடும்பங்கள், இனக்குழுக்கள் எனப் பிரிந்து எல்லைக் கோடுகளை விரிந்தன. நாகரிகம் வளர வளர தேசம், மதம், இனம், மொழி என காதல் சுவர்கள் பல எழும்பின. இருப்பினும், காதல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது. தங்களை அழித்துக் கொண்டு காதலை வாழவைத்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. சிலர் சரித்திரமாகவும் நிலைத்துவிட்டார்கள். சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தன் காதலியை அடையாமலே தூக்கிலிடப்பட்ட தினத்தைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகத்திலும் காதல் என்பது சமூகக்குற்றம் என்பது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இன்னும் இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கவில்லை. காதல் சாமான்யனையும் சாதனையாளனாக்கிவிடும். காதல்தான் மிகப்பெரும் ஊக்கச் சக்தி. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் எல்லாம் காதலித்தவர்களாகவும், காதலிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வாழ்க்கையின் முழுமையான வெற்றி என்பது காதலையும் உள்ளடக்கியதுதான். இந்த உலகம் எப்போதும் காதலால் நிரம்பியே இருக்கவேண்டும். காதல் இல்லாத உலகம் சூன்யமானது

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
பெண்களே குடும்பவாழ்கை உங்கள் கையில் --------------------------------------------------------- பிடிக்காத உடையை கழற்றி எறிவது போல ,மேளம் தாளம் முழங்க கணவன் கட்டிய தாலியையும் ஒரு சில பெண்கள் கழற்றி எறிவது மனதிற்குச் சங்கடத்தை கொடுக்கிறது.ஒரு பெண்ணின் கையில் தான் குடும்பத்தின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.நான் பெண் என்று குறிப்பிடுவது மனைவியை மட்டும் இல்லை .மாறாக அக்குடும்பத்தில் உள்ள மாமியார் ,அண்ணி ..... அனைத்து பெண்களும் தான். குடிக்காரக் கணவனையும் ஒரு மனைவியால் திருத்த முடியும்;முரடனையும் அன்பால் அரவணைக்க முடியும்;தீயவனையும் நல்வழி படுத்த முடியும்.அது இறைவன் பெண்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.மனைவியானவள் எப்பொழுதும் அனுசரித்து செல்லும் போக்கைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.அன்பே வடிவாக திகழ வேண்டும்.பெண்கள் என்றாலே மென்மை என்றுதானே அர்த்தம்? பெண்ணைப் பூவோடு ஒப்பிட்டு கவிஞர்களின் கற்பனையில் பிறந்த கவிதைகள் ஒன்றா இரண்டா?பெண்கள் அடிமையாக இருக்கக் கூடாது.அதே வேளை அடங்காப்பிடாரியாகவும் இருக்கக் கூடாது. இன்று எத்தனையோ பெண்கள் திருமணமான ஒரு சில வருடங்களில் மணவாழ்க்கை கசந்து விட்டது,மாமியாருடன் போர்,கணவனின் குடும்பத்தாருடன் ஒத்து போக முடியவில்லை , என பல காரணங்களைக் கூறி விவகாரத்து கேட்கின்றனர்.புனிதமான திருமணத்தை நீதிமன்றத்தில் பேரம் பேசுவது நமது கலாச்சாரத்திற்கு பொருந்துமா? விவகாரத்து கணவன் மனைவி எனும் உறவை மட்டும் பிரிக்கவில்லை.ஒன்றும் அறியா மழலை செல்வங்களையும் பாசத்திற்காக ஏங்க வைக்கிறது.அப்பா வேண்டுமா?அம்மா வேண்டுமா?வாரத்தில் இரு நாட்கள் அப்பாவைப் பார்க்கலாம்.மீதி நாட்கள் அம்மாவுடன் இருக்க வேண்டும்.நீதிமன்ற உத்தரவு.அப்பப்பா..!இது கொடுமையல்லவா?பாசத்தை விலை பேசுவதா? பிறந்த வீட்டில் அனுசரித்துப் போகும் பெண்களால் புகுந்த வீட்டில் அனுசரித்துப் போக முடியாதா?சொந்த மகளை திருமணமாகும் வரை சீராட்டி வளர்த்த தாயாரால் மருமகளுடன் அனுசரித்து போக முடியாதா?முடியும்!நிச்சயம் முடியும்.மனம் உண்டானால் மார்க்கம் உண்டல்லாவா? திருமணமான பெண்கள்....... புகுத்த வீட்டையும் பிறந்த வீடாக நினையுங்கள்.மாமியாரை கொடுமைக்காரியாக பார்க்காதீர்கள்;தாயாக மதியுங்கள்.நாத்தனாரை தங்கையாய் நேசியுங்கள்.அந்நிய வீடாக நினைக்கும்போதுதான் விரிசல் ஏற்படுகிறது. மாமியார்கள்....... மருமகளை மகளாக நினையுங்கள்.வீட்டில் விளக்கேற்ற வந்த தேவதையாக ஏற்று கொள்ளுங்கள்.அவளுடைய உணர்வுகளையும் மதியுங்கள்.அவளும் உங்களை போல பெண்தானே... ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என அக்காலத்தில் எழுதி வைத்துவிட்டனர்.பெண்களால் குடும்பம் எனும் பல்கலைகழகத்தை அழிக்கவும் முடியும்....எதிர்கால சந்ததியினருக்காக தலை நிமிர்ந்து நிற்க செய்யவும் முடியும். காலங்கள் மாறலாம்.ஆனால் பெண்களுக்கே உரித்தான குணங்கள் மாறலாமா?பெண்கள் ஆண்களுக்கு ஈடாக இன்று உயர்ந்த பதவியில் இருப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறோம்.கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்களும் இக்காலத்தில் உண்டு.கணவன் தன் மனைவியின் திறமையைக் கண்டு பாராட்ட வேண்டும்.மேலும் பதவியில் உயர ஊக்கமளிக்க வேண்டும்.அதை விட்டு பொறாமைப் படக் கூடாது. பெண்களும் உயர்ந்த பதவியில் இருப்பதால் அகம்பாவம் கொள்ளக் கூடாது.தலைகணமும் கூடாது.திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து விட்டோம்.இனி அதனை எப்படி வழிநடத்துவது என்பதை இருவரும் சேர்ந்து திட்டமிட வேண்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org