<$BlogRSDUrl$>

பூப்புனித நீராட்டு விழா தமிழர்களின் விழாக்களில் பூப்புனித நீராட்டு வழாவும் ஒன்றாக இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த விழாவானது தமிழர்களிடம் தொன்று தொட்டு இருந்து வந்ததற்கான ஆதாரம் எதுவும் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியங்களிலோ அதன் பின்பு வந்த நூல்களிலோ காணப்படவில்லை இது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களின் கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் ஒரு பெண்ணின் வளர்ச்சியில் அதாவது பன்னிரண்டு பதின்மூன்று வயதில் இயற்கையாக நடக்கும் உடல் மாறுதல்களினால் ஏற்படும் ஒருநிகழ்வே பெண் பூப்பெய்துதல் மூடப்பழக்க வளக்கங்களை தன்வசம் வைத்துள்ள தமிழ் சமூகம் அவற்றை பெண்களுக்கே விலங்குகளாகப் போட்டுள்ளன அவற்றை இந்த சடங்கு நிழ்விலும் கண்டு கழித்திருப்பீர்கள் ஆனால் இந்த பூப்புனித நீராட்டு விழாவின் மூலம் அறிவியல் பூர்வமான ஒரு நோயின் கூறியீட்டையும் உணர்த்துகின்றார்கள் நமது முன்னோர்கள் பெண்ணாணவள் பருவம் அடைந்தபின் ஆணுடன் சேர்ந்து கருவுற்று குழந்தை பெற்று பாலூட்ட வேண்டும் ஆகவே இந்தப் பெண் நல்ல திடகாத்திரத்தோடும் நல்ல உடல்நலத்துடனும் தன் இனத்தை விருத்தி செய்து காப்பாற்றக்கூடிய பருவம் அடைந்துள்ளாள் என்று அறிவிக்கும் நிகழ்வே இந்த சாமத்தியச்சடங்கு ஆனாலும் சில பெண்கள் மேற்குறிப்பிட்ட வயதை தாண்டியும் பூப்பெய்த மாட்டார்கள் இவர்களிடம் குறைபாடுகள் காணப்படும் மாதவிலக்கு இவர்களுக்கு ஏற்படாது இவர்களை இருழி என்று ஊர்வழக்கில் அழைப்பார்கள் இப்படியான பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் மருத்துவ வசதிகள் இல்லாத அன்றைய காலங்களில் இப்படியான விழாக்களை கொண்டாடி தங்கள் உற்றார் உறவினர்களுக்கு விருந்துவைத்துச் சொன்னார்கள் கிராமங்களில் இந்தவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவார்கள் தமிழ் நாட்டில் பெண்ணை கட்டிக்கொள்ளும் முறையுள்ள மாமனோ அல்லது மச்சானோ பூப்பெய்திய பெண்ணை தனிமைப்படுத்தி மறைப்பு கட்டிக் கொடுப்பார்கள் இவர்தான் உனது கணவர் என்று அன்றே அடையாளம் காட்டி விடுவார்கள் பிறகென்ன பெரியவர்களின் சம்மதத்துடன் கரம் பிடிக்குமட்டும் காதல் வானில் பறப்பார்கள் இன்றய சூழ்நிலையில் கிராமங்கள் மெல்ல மெல்ல சிதறி பொருளாதார வசதிதேடி பட்டணத்துக்கும் நகரத்துக்கும் நகர்ந்ததால் கூடிவாழ்ந்த மக்கள் உறவுகளை மறந்தார்கள் இப்படியான விழாக்கள் நடத்துவதன் மூலம் உறவுகளை வரவளைத்து விருந்தழித்து உறவாடி மகிழ்வதில் மனதுக்கொரு மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்குமல்லவா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org