<$BlogRSDUrl$>

மீண்டும் மனம்?

மனசும் உடம்பும் நிர்சலனமின்றி கிடக்க, மரங்கள் விசும்பும் மூச்சுக் காற்றுகூட வெளியில் சுத்தமாய் உணரப்பட்டது. அங்கும் இங்குமென அலைபாயும் மணிக்குருவிகள்... அசைந்து தலைவருடும் திரைச்சீலைகள்... மௌனம் காக்கும் நாற்காலிகள், கட்டில், இன்னபிற அசையும் சொத்துகள்... பல அடி தூரத்தில் செல்லமாய் கிணுகிணுக்கும் சைக்கிள் மணியோசை... அருண் கண்களை மூடிக் கொண்டான்..! இந்த மௌனமும் தனிமையும் மரணவலியாய் நெஞ்சுக்குள் இறங்கி பதம் பார்த்தது. தனிமையே கொடுமை.. அதிலும், துணையிருந்தும் தனிமை அதனினும் பெருங்கொடுமை... சூழலை வாட்டும் அமைதியும், மௌனம் என்ற மறைமுக தண்டனையும் வாழ்க்கையை ரணப்படுத்தி வதைத்தது. ‘‘தலை வலிக்குதாம்மா...? காபி போட்டு தரட்டுமா...?’’ மென்மையாய் காதடியில் கிசுகிசுக்கும் பானுவின் குரல்... கழுத்து பரப்பில் கை வைத்து கதகதப்பு உணர முற்படும் கனிவு... மென்மையாய் விரல் நுழைத்து முடிகலைக்கும் காதல் ஸ்பரிசம்... விசுக்கென தலைசிலிப்பி உணர்வு கலைத்தான். எந்தவொரு அசைவுமின்றி வீடு அமைதிபட்டே இருந்தது. பானுவும் இல்லை... தலைகோதும் அவளின் அருகாமை ஸ்பரிசமும் இல்லை. மனசு கனத்துப் போனது. இந்த வெறுமைகூட ஒருகட்டத்தில் வேதனையாகி, வாழ்க்கையை வெறுக்க வைக்கிறது. தன்னோடு உறவாடிய ஊடாடிய, இன்னொரு உயிர், ஒரு கட்டத்தில் இல்லையென்று ஆகும்போது எழும் வேதனைகளை விளக்கி சொல்ல முடிவதில்லை. இத்தனை நாள் இல்லமாய் ஜொலித்த இடம், இன்று வெறும் வீடாய் விரக்தியாய் நிற்கிறது. வலதுகையை தடவிப் பார்த்தான். வெறுப்பாய் இருந்தது. இதன் வேகமும், வீச்சின் வீரியமும், செயல்பாடும் தான் இன்று பானுவை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டு போய் விட்டது. ‘‘அருண் பையா, என்ன பிரச்னை வந்தாலும் என்னை கைவிட்டுட மாட்டேயில்ல...’’ எத்தனை முறை மடிசாய்ந்து கொஞ்சி இருக்கிறாள்..! அந்த அன்பும், அன்யோன்யமும் சட்டென்று விட்டு விலகியோடியதுபோல் பிரமை. கதம்ப குழப்பம். ‘‘அருண், ஐ லவ் யூமா...’’ கைகளால் கழுத்தில் மாலை பின்னி, முகம் உயர்த்தி, அரிசி பற்கள் பளீரிட சிரிப்பாளே ஒரு சிரிப்பு, அதற்கே இன்னொரு யுகம் வாழலாம். காதல்விதை மனசுக்குள் விழும்போது, மெல்லிய கோடாய் மனநிலத்தில் பாய்கிறது. அது விழுந்து, வேர்பிடித்து, விம்மி வெடித்து கிளம்பும்போதுதான் அதன் தாக்கமும் அருகாமையின் அவசியமும் புரிகிறது. எத்தனை எதிர்ப்பு, எவ்வளவு வார்த்தை வதைப்பு... அத்தனையும் மீறி பானுவை கரம்பிடித்த நொடியில் இந்த உலகமே இவனுக்கு அடிமைபட்டு விட்டதாய் எண்ணி புளங்காகிதம் கொண்டான், இன்று அதே பானுவை அடிக்கத் துணிந்தது இந்த கரம் தானே.. பானு, பானுவென்ற சதாகாலமும் ஜெபித்த நிலை மாறி, ‘போடி நாயே’ என்று நெருப்பை கக்கியது இந்த நாவில்தானே..! எச்சில் கூட்டி இம்சை விழுங்கினான். இந்த அவஸ்தை விலக ஒரு சிகரெட் குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. சிகரெட்டை எடுத்து, மென்மையாய் கைகளில் உருட்டி உதட்டுக்கு தந்தபோது மனசு சுட்டது. பானுவிற்கு பிடிக்காது. சிகரெட் பிடித்தால் ஒரு மணி நேரத்திற்காவது இவனிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டாள். அவளுடைய அந்த செல்ல பிடிவாதம் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் தவறாது கடைபிடிக்கும், அவளின் உத்வேக சிணுங்கல் பிடிக்கும். ‘‘ஏன் பானு... ஒரு முறைகூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா..?’’ ‘‘ஏன் பண்ணிக்கணும்.?’’ நான் ஸ்மோக் பண்ணினால் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களா..?’’ என்பாள் நறுக்கென்று. சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூக்கியெறிந்துவிட்டு எழுந்து கொண்டான். வெளியில் பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. இந்த அமானுஷ்ய ஈரத்தில் குளிக்க பானுவுக்கு ரொம்பப் பிடிக்கும். நடுங்க, நடுங்க பனியில் கரைய நிற்பாள். ‘‘பானு, உனக்கு ஈஸ்னோபீலியா இருக்குல்ல.. எதுக்கு இப்படி வந்து நிக்கறே...’’ ‘‘ஆமாம் போங்க... இந்த நகரத்தில் இதுபோல காத்தும் பனியும், காண கிடைக்காத சந்தோஷங்கள். அது கிடைக்கும்போது அனுபவிச்சுக்கணும். அதவிட்டுட்டு உடம்பைக் காரணம் காட்டியே எல்லா விஷயங்களையும் புறம்தள்ளிட்டு போய்ட்டே இருக்க கூடாது...’’ என்பாளேயழிய, அடுத்தநாளே நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். அந்த நிலையிலும்கூட ஜன்னல் திறந்து விசுவிசுக்கும் காற்றைக் கண்களை மூடி ரசித்துக்கொண்டே தான் இருப்பாள், படு அமைதியாய். ‘‘சார்! கொரியர்...’’ வாசலில் குரல் கேட்டதும், நினைவு கலைந்தது. ஒருவேளை பானு எதுவும் அனுப்பியிருப்பாளோ... நினைத்த நொடியில் மனசுக்குள் றெக்கை கட்டிய உத்வேகம் பிறந்தது. வேகமாய் எழுந்தோடி வந்தான். வாங்கிப் பிரித்ததும் சப்பென்று போனது. ஏதோவொரு கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து புதுசாய் கோர்ஸ் ஒன்று ஆரம்பிப்பதாய் தகவல் தந்திருந்தார்கள். சோபாவில் விசிறியடித்துவிட்டு தளர்வாய் சரிந்தான். ‘...பானு நீ ஆயிரம் மடங்கு நல்லவள். உனக்குள் இயல்பாய் இருந்த சந்தேக புத்தி தானே, இன்றைய எல்லாவற்றுக்கும் காரணம். கம்ப்யூட்டர் செக்ஷனில் என்னோடு வேலைபார்க்கும் வினிதாவையும், என்னையும் இணைத்து நீ மட்டும் பேசாதிருந்தால் நான் கோபப்பட்டு இருப்பேனா... என் கண்மணி உன்னை கைநீட்டி இருப்பேனா... எல்லாவற்றுக்கும் மேலாய், உன்னை தரம்தாழ்த்திப் பேசியிருப்பேனா... உன்னை அடித்துவிட்டு நான் கூனிக்குறுகி நிற்கிறேன். இந்த நொடி என் கண்முன்னால் வந்து நீ நிற்பாயேயானால், உன் மடியில் தலைகவிழ்ந்து சின்னக் குழந்தையாய் விசும்பி விடுவேனே..! என் கண்ணம்மா, என் காதலை உனக்கெப்படி புரிய வைக்க...’ எங்கு போயிருப்பாள்..? பானுவுக்கு இங்கு யாரைத் தெரியும்...? நிச்சயம் பிறந்த வீட்டிற்குப் போயிருக்க முடியாது. அவளால் அது இயலவும் இயலாது. பின்னே எங்கு போய் இருப்பாள்..? அவளுடைய நெருங்கிய தோழி வித்யாதான். நிச்சயம் அங்குதான் போயிருக்க வேண்டும்... போன் செய்து பார்ப்போமா...? எண்ணம் விஸ்தீணமாக அவளுடைய பழைய டைரிகளைக் குடைந்தான். ஒவ்வொரு பக்கமும் இவனின் புராணம்தான். வரிக்கு வரி வார்த்தைகளாய் ஜெபித்திருந்தாள். வேறொன்றும் இல்லை. மனசு இன்னும் விட்டுப்போனது, அந்தப் பைத்தியகாரப் பெண்ணை நினைத்து. கடலின் ஆழத்தை கைநுழைத்து அறிந்துவிட முடியாது, பெண்ணின் மனசும் அதுபோலத்தான். பானு நேசிக்கிறாள் என்பது தெரியும். இத்தனை நேசித்தாளா என்று நினைக்கும்போது, உடம்பு ஒருகணம் அதிர்ந்து போனது. வீட்டிற்குள்ளேயே அலைந்தால் மனசு விகாரப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றெண்ணி, கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்தான். நந்தியாவட்டைப் பூக்கள் சிந்தி சிந்தி, வாசலின் இருமருங்கும் சருகுக்காடாய் தரித்துப் போயிருந்தது. பட்டு விரித்தது போல், கட்டுசெட்டான இதமில்லை கால்களுக்கு. இந்த பூக்களின் மரணம் பானுவுக்கு அதிகப்படியான வருத்தத்தைத் தரும். சிதறிய பூக்களை திரட்டித்திரட்டி மாலையாய் செய்து மரத்தின் இடையில் கட்டி வைப்பாள். ‘என்ன விளையாட்டு இது..?’ என்று கேட்டால், ‘‘எதுமா விளையாட்டு... இந்தப் பூவெல்லாம் சருகாகி வேஸ்டாகிறதை விட, அந்த பூ பிறந்த மரத்துக்கே பூஜையா சமர்ப்பணம் செய்துட்டா, மரத்திற்கும் திருப்தி, மடியற மலருக்கும் திருப்தி, வளர்கிற எனக்கும் திருப்தி, தட்ஸ் ஆல் டியர்...’’ ‘‘எல்லாம் சரிதான், இந்த லூஸ்தனத்தை செய்து முடிக்க எவ்வளவு நேரம் செலவாகும்னு யோசிச்சு பாரு...’’ என்பான் அவளின் தலையில் தட்டி. இப்போது உதிர்ந்து கிடந்த அந்தப் பூக்களின் சடலங்களைப் பார்த்த போது மெல்லிய வருத்தம் உண்டானது. தென்னந்துடைப்பத்தை எடுத்துப் பரபரவென பெருக்கித் தள்ளினான். குப்பைகளைக் குவித்துவிட்டு, கையலம்ப உள்ளே நுழைந்த நேரம், டெலிபோன் அலறியது. ‘நிச்சயம், பானுவாகத்தான் இருக்கும்...!’ மனசு றெக்கை கட்டிப் பறந்தது. ரிசீவரை பாய்ந்தெடுத்தான். எச்சில் கூட்டி ஆவல் விழுங்கி, உணர்வுகளை வெளிக்காட்டாமல், மென்மையாய் ‘‘ஹலோ..’’ என்றான். ‘‘குட்மானிங் சார்! இது தாம்ஸன் சர்வீஸ் சென்டர் தானே...?’’ எதிர் முனையில் குரல் வெண்ணெய்யாய் வழுக்க, சட்டென்று மனத்தாழி உடைந்து நொறுங்கிப்போனது. ‘‘சாரி... ராங் நம்பர்...’’ ரீசிவரை வேகமாய் சாய்த்தான். ராங் நம்பர்... ராங் நபர்... மனசின் ஊசலாட்டத்தை உத்வேகத்தை, உரசி பார்க்கும் இன்னுமொரு நிகழ்வு. ‘பானு நீ எனக்கு இத்தனை தேவையா..? உன் அணைப்பும் அருகாமையும் இத்தனை அவசியமா..?’ ஒருமுறை உடம்பு உதறி அடங்கியது. ‘புரிந்துகொள் பானு... எங்கிருந்தாலும் வந்துவிடேன்... என்னுடைய தவிப்பை உள்வாங்கிக் கொள்ளேன் பானு. இந்த பரிதவிப்பும், ஆற்றாமையும் எனக்கு மட்டும்தானா... உனக்கு நான் இத்தனை தேவையில்லயா...?’ ஆண்மை என்ற கம்பீரம் தேய்ந்து போக, சின்னக் குழந்தையாய் கண்கள் கசிந்தாலும், தனிமை சில நேரங்களில் இத்தகைய சவுகரியங்களையும் தராது இருப்பதில்லை. நமது உண்மை உணர்வுகளை வெளித்தள்ளும் விகல்பமில்லாத வசதியைத் தந்துவிட்டுத்தான் போகிறது. ஒருவேளை இந்நேரம் வேறு யாரேனும் இந்த இடத்தில் இருந்திருந்தால், இது போன்று கண்ணீர் விட்டழும் சவுகரியம் வாய்த்திருக்குமோ என்னவோ.. எதுவும் சாப்பிட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள தோணவில்லை. மனசு கனத்துக் கிடந்ததால் வயிறும் பசிக்க மறந்து போயிருந்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து பழம் மட்டும் எடுத்துச் சாப்பிட்டான். போதுமா, இன்னும் வேணுமா என்ற கேள்வியே வேண்டாமென்று தோன்றியது. அப்படியே படுத்துக்கொண்டான். இந்த நொடி பானு அருகிலிருக்க மாட்டாளா என்று மனசு மன்றாடி துடித்தது. வெகுதொலைவில் மிகசன்னமாய் ஒலித்தது மாதா கோவில் மணியோசை. மனசின் தாகம் அடங்கி ஆசுவாசப்பட்டது. வேதனைகளையும், துயரங்களையும் பங்கு போட்டுக் கொள்ளும் ஆன்மீக சக்தி. ஒவ்வொரு துளியையும், அவனுக்காய் ஒப்புவித்துக் காத்திருக்கும் நிர்சலன மனோநிலை. தன்னுடைய துயரங்களையும், துன்பங்களையும் கூட இறைவன்பால் ஒப்புவித்து விட்டால், நிச்சயம் நிம்மதி கிடைக்குமென்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுத்துவிட்டான். இரவு கரைவது வெகுதுன்பமான வேலையாக இருந்தது. எப்போது உறங்கினோம், எப்படி உறங்கினோம் என்ற நினைவேயின்றி உறங்கிப் போனான். விடிந்ததும் போன பிரக்ஞையின்றி, வெகு நேரம் கட்டிலில் கிடந்தான். எழுந்துகொள்ள சூழல் தூண்டினாலும், உடம்பும், மனசும் இன்னும் கொஞ்சம் நேரமென்று ஆவர்த்தனம் செய்தது. பிடிவாதம் தள்ளி, எழுந்து குளித்து விட்டு வரவும், காலிங்பெல் ஒலிக்கவும் மிகச்சரியாக இருந்தது. மறுபடியும் எதிர்பார்ப்பு... மலையாய் உயர்ந்து நின்ற மனசின் உத்வேக எதிர்பார்ப்பு. கைகளை அடக்கிக் கொண்டான். விரைந்த கால்களின் வேகம் தளர்த்தினான். அலட்சியமும், ஆதிக்கமும் மேலோங்கிய பார்வையோடு சென்று தாழ்விலக்கினான்... பானுவே தான்! அந்த விழிகள்... அதில் தென்பட்ட பரிதவிப்பு... இந்த நிமிஷம்வரை எந்த முகத்தின் தரிசனத்துக்காகக் காத்துகிடந்தானோ, எந்த உறவின் அன்யோன்யத்திற்கு தவித்து நின்றானோ, அந்த உறவு. விழிகளின் வெடிப்பும், வேதனையின் உழல்சியுமாய் வந்து நின்றன. சட்டென்று ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொள்ள மனசு உத்தரவு போட்டது, என்றாலும் இதழ்களை இறுக்கிக் கொண்டு முகத்தில் கருமைகவ்வ விழிகளை விரித்து வெறுப்பு உமிழ கேட்டான்... ‘‘எங்க வந்தே...?’’

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

நண்பர்கள்

அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடி வந்த 7-வயது சிறுவனான சரவணின் நெற்றியில் காயம். ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது...! "ஏண்டா அழுதிட்டே வாரே...?" என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள் அவனது அம்மா சரோஜினி. "என்னடா நெத்தியிலே காயம். இத்தனை ரத்தம் கொட்டுது. அச்...சச்சோவ்...!" என்று பதறி யடித்துக் கொண்டு கேட்டாள். "அம்மா பக்கத்து வீட்டு பிரபு தாம்மா என்னை கல் எடுத்து அடுச்சுப் போட்டு ஓடிப் போய்ட்டான். அம்மா வலிக்குதும்மா...!" என்றான். "அடப்பாவி...! கல் எடுத்தா அடிச்சான். இரு இப்போ அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்".. என்றவன், துணியை கிழித்து, தண்ணீரில் நனைத்து காயம் அடைந்த நெற்றிப்பகுதியில் கட்டுப்போட்டு விட்டு சரவணனின் இடது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விர்ரென வாசலுக்கு வந்து, பக்கத்து வீட்டுப் பையனான பிரபுவை அழைத்தாள்- "டேய்..."பிரபு வெளியிலே வாடா. பார்த்தால் உம்முன்னு இருக்கே. கல் எடுத்து என் பையன் மண்டையை பிளந்திருக்கே. எவ்வளவு திமிருடா உனக்கு..."-கூச்சல் போட்டுக் கத்தினாள். "சரோஜினி அக்கா என் மகனையா கூப்பிடுறே. அவன் இப்பத் தான் மும்முரமாய் டி.வி.பார்க்குறான். இருங்க அனுப்புறேன்" என்றாள், பிரபுவின் அம்மா கோமதி. டி.வியில் மூழ்கியிருந்த பிரபுவை வாசலுக்கு கூட்டிட்டு வந்தாள். புரபுவைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சரோஜினி, வேகமாக பிரபுவின் அருகில் சென்று அவனது காதைப் பிடித்து வலிக்குமளவுக்கு திருகினாள். "அய்யோவ்..."ம்...மா..." என்று கத்தினான் வலியைத் தாங்க முடியாத பிரபு. "ஏய்...! சரோஜினி எதுக்காக என் மகனை இப்படியெல்லாம் பண்ணுறே...!"-என்ற கோமதி சரோஜினியின் கையைப்பற்றி வேகமாக இழுத்துத் தள்ளினாள். கீழே விழுந்தாள் சரோஜினி. "ஏண்டி என்னையே அடித்து கீழே தள்ளுகிற அளவுக்கு நீ வந்திட்டீயா..." என்றவாறே. மேலே எழுந்து, கோமதியின் கூந்தலைப் பிடித்து ரெண்டு முறை குலுக்கி.. குலுக்கி கீழே தள்ளினாள் சரோஜினி. அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வலுவடைந்தது. ஊர் ஜனங்களெல்லாம் வேடிக்கை பார்த்தனர். தவறு...தவறான வார்த்தைகளை இருவரும் வாரி விட்டனர். உடனே கூட்டத்தில் இருந்து ஒரு பெரியவர் வந்து, "எதுக்காக `கல்' எடுத்து அடிச்சான்னு கேளுங்க-?"என்றார், உரத்த குரலில். "எதுக்குடா கல்லால அவனை அடிச்சேய்...? எனக்கேட்டாள் கோமதி. "என்னோட பம்பரத்தை தர மாட்டேன்னு சொன்னான். அதனால தான் அடிச்சேன்..." என்றான் பிரபு தலையை குனிந்தவாறு "உன்னை யாருடா கல்லால அடிக்கச் சொன்னது. அம்மா என் கிட்டே வந்து சொல்லியிருக்கலாமில்லே...?" "அம்மா நான் வெளையாட்டுக்குத் தாம்மா வீசினேன். வேணும்ணு அடிக்கலே..."-என்று பிரபு சொல்லச் சொல்ல, "ஏண்டா காலிப்பையனே, விளையாட்டுக்குன்னா சொல்லுறே உன்னையெல்லாம்..." என்று ஆத்திரம் அடைந்த சரோஜினி பிரபுவின் மண்டையில் குட்டினாள். அவன் வலியினால் அலறினான். மீண்டும் கோமதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, "என்ன நீ அதிசயமாய் புள்ள பெத்து வெச்சிருக்கே. இருக்குற கண்ட... கண்ட நாய்ககிட்டே வெல்லாம் அடி வாங்கவா என் குழந்தையை வளர்த்ëது விட்டிருக்கேன்..." என்றாள். இப்படி அவர்களின் சண்டை வார்த்தைக்கு வார்த்தை அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. அங்கே கூடி நின்றிருந்தவர்களுக்கும் அலுத்துப் போனது. எல்லோரும் கலைந்து சென்றார்கள். அந்த நேரம் பார்த்து மழை பெய்யத் தொடங்கியிருந்தது. தூரலாய் சிந்திய மழை பலமாகப் பெய்தது. சரோஜினியும், கோமதியும் ஆத்திரம் தணிந்து அவரவர் வீட்டுக்குள் சென்றனர். அன்றைய இரவு வீட்டுக்கு வந்த கணவன் மனோகரனிடம் சரோஜினி நடந்த சண்டையைப்பற்றி ஒண்ணுக்கு ரெண்டாகச் சொன்னாள். அவனோ `தாம், `தூம்'மென்று துள்ளினான். போலீசுக்கு போய் கேஸ் கொடுக்கலாம் என்றான், அதெல்லாம் எதுக்கு என்று அவனது மனம் சொல்ல அமைதியாய் இருந்து விட்டான். நாட்கள் நகர்ந்தன. சரோஜினியும், கோமதியும் கீரியும், பாம்புமாகவே இருந்தனர். முதலிலெல்லாம் ஊர்க்கதை. சினிமாக்கதை, மாமியார்-மருமகள் பிரச்சினை, அழகுக் குறிப்பு என்று எதைப்பத்தியாவது பேசி அரட்டை அடிப்பார்கள். இப்போது அதெல்லாம் இல்லை. சரவணனை பள்ளிக்கு தயார் செய்து வீதிக்கு வந்து சரோஜினி விட்டாள்... அதே நேரம் தான் கோமதியும் பிரபுவை கூட்டிட்டு வந்து விட்டாள். எதிர்பாராத விதமாய் சரோஜினியும், கோமதியும் பார்த்துக் கொள்ள விசுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டனர். பள்ளிக்குச் சென்ற சரவணனும், பிரபுவும் தோளில் கைகளைப் போட்டுக் கொண்டு சிநேகிதமாய் வீதியில் நடந்து போவதை அந்த இரண்டு அம்மாக்களுமே பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

அரசி

நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவாிலும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க்க முனைந்து நிற்கிறாள் அண்ணி. அண்ணியைத் தவிர இந்த வீட்டில் வேறுயார்தான் முனைப்புமிகக் கொண்டவர்களாயுள்ளனர். அண்ணாவுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர் வேறெதையும் இப்போ ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது. முன்னரெல்லாம், அண்ணா இரவு நேரங்களில் வானத்தைப் பார்த்தபடி நெடுநேரம் நிற்பார். அக்காலங்களில் அவரது நெஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட இரவுகளில் நட்சத்திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி நிற்பார். அங்கே அம்மாவும் அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம். ஒரு நாளைக்கு வடக்குமூலையில் அவை தொிவதைக் காண்பார். பிறகொரு நாளில் அவை சற்று இடம் பெயர்ந்து போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும் அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவைப் பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில் நீர் திரளும். நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார். கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாகத் தொியக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி வேகத்தில் பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் புரிந்து கொண்டவர் எவரும் இலர். அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்தக் காலத்தில் எல்லாம் அண்ணா தனக்குள்ளாகவே சில விவகாரங்களைச் சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந்தார். அப்போ, அண்ணா முகத்தில் சிரிப்புத் தொிவது அபூர்வம். யோசனை.... சதா குருட்டு யோசனைகளும், கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும்தான். அவருக்கு நிறையக் கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள் தாம் அரைவாசி வாழ்நாளில் இறந்துபோய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதை விரும்பக்கூடச் செய்தார். வாழ்க்கை அந்தளவுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களாலும், ஏமாற்றங்களினாலும், சத்திக்கு மீறிய செலவுகளாலும் சோர்ந்து போயிருந்தார். பாலனுக்கும், சுதாவுக்கும், சுமிக்கும் அவர் சோறு போடவேண்டியிருந்தது. படிக்க வைக்க வேண்டியிருந்தது, அவர்கள் ஏந்நேரமும் அவாிடம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கத் தொியவில்லை. முடியவுமில்லை. அவர்களுக்குப் பராயம் காணாது, சிறிசுகள், அப்படி அவர் எண்ணிக் கொண்டார். அண்ணியைப் போலொரு பெண்ணைத் தனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கிட்டும் என அவர் எதிர்பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது?, என இன்றும் கூட அவர் கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்த பிறகு அவரும் கூட ஆச்சாியப்படும் விதத்தில் மாறித்தான் போனார். உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத்தார். அவளைக் கண்டு பயந்தார். அவளது பிரகாசமான விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளில் கடும்கருமை நிறத்தனவல்ல, ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள் பொிதாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவிப் பார்க்கும். அந்தப் பார்வை எவரையும் பணிய வைக்கும் ஆளுமை கொண்டது. அந்த ஆளுமை தான், பிறகு அண்ணாவுக்கு தொற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில், இந்தப் பத்து வருடங்களில் இவ்வளவு காரிரீயங்களை ஒப்பேற்றியிருக்க முடியுமா? அண்ணி கொடுத்த நகைகள் தான் இப்படிப் பல்கிப் பெருகி விட்டனவா என அண்ணாவுக்குச் சொல்லத் தொியவில்லை. அவரால் ஆச்சாியப்பட மட்டுமே முடிகிறது. கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு; தனது நகைகளையும் தன்னையும் முழுமையாகக் கழற்றி அண்ணாவிடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புதுமனிதராகி விட்டார். அவரது துக்கரமாக சிந்தனைகள் குடியோடிப் போயின. அவர் வாழ விரும்பினார். உலக இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது. கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல, தசைப் பிடிப்புள்ளவாகின. மேனி மினுங்கிற்று. ஆனால், அண்ணி அதற்குப் பிறகு நகைகள் அணிவதைத் தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில் அவள் கொடுத்ததை விட பத்துமங்கு நகைகள் செய்யுமளவுக்கு அண்ணா 'பொிய மனிதர்' ஆகிவிட்டார். செய்து செய்யுமளவுக்கு அண்ணா 'பொிய மனிதர்' ஆகிவிட்டார். செய்து கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவதில்லை. இப்போதெல்லாம், காதுகளில் வெகு சாதாரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அதுவொன்றே அவளது கீர்த்தி வீசும் முகத்துக்கு வெகு சோவையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பொரீய வட்டமாக குங்குமம் குலங்கும். அது தான் அவளது உண்மையான ஆபரணம். அது மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. சிவந்து விழிக்கிறது. அந்தத் திலகத்தினால் அவள் அண்ணாவைச் சுண்டிச்சுண்டித் தன்பால் இழுத்தாள். கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, வீட்டுக்கு ஓடிஓடி வருவார். அண்ணியோ வெனில், குறும்புக் குறுஞ்சிரிரீப்புடன் திரும்ப ஓடஓட விரட்டுவாள். "இவ்வளவு காலமும் 'ஙே...ஙே' எண்டு மேகத்தைப் பார்த்து முழிச்சது போதாதா...ஓடுங்கோ, கடைக்கு ஓடுங்கோ...." அண்ணா திரும்பிச் செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பொிய சுகம் தொிந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு, கார் வாங்கிய பின்பும் வீட்டுக்கும் கடைக்கு மிடையே நடைதான். கார் வீட்டின் முன்புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா, என்ன? எதிரில் வரும் காரின் பின்சீற்றிலிருந்து முகம் நிறைந்த சிரிப்பும், கும்பிடுகளும் எட்டிப்பார்க்கும். சைக்கிள்களோவெனில், 'ஸ்லோ' பண்ணி வந்தனம் தொிவித்தபடி போகும். அவையெல்லாம் 'தனக்கா, தனக்கா' என அண்ணா ஆச்சாியப்படுவார். "அவளுக்கு, அவளுக்கு!" என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு இப்போ சாடையாகத் தொந்தி வைத்துவிட்டது. அண்ணிஅதில் அடிக்கடி செல்லமாகக் குத்துவாள். "செல்லவண்டி...கள்ளவண்டி....." என்பாள். 'அவளால்..., அவளால்!" என்றபடி கடைவாசல்படியை அழுந்த மிதித்து ஏறுவார். எதிர்புறமிருந்து 'ஜோன்சன்' முதலாளி கண்களை மிகச் சிறப்பித்துக் காட்டும் கண்ணாடியினூடாக ஓரப்பார்வை பார்த்தபடி அண்ணாவை வம்புக்கிழுப்பார். "என்ன முதலாளி...வீட்டை போய் வாறியளோ....?" எமகாதகன்; ஆள் சாியான ஜொலிப் பேர்வழி "ஊம்...ஊம்" என அண்ணா முனகுவார். "தண்ணி விடாய் போலை..கெஹ்கெஹ்ஹே...விடாய்க்கும்! விடாய்க்கும்!! ஹி...ஹி..." ஜோன்சன் முதலாளியின் பொிய தொந்தி சிரிப்பால் தழுமபிக் குலுங்கும் அண்ணா மானசீகமாக ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு, எதிர்படுகிற பையனை காரண காரியமற்று விரட்டுவார். அண்ணா தான் ஓடிஓடி அண்ணியைப் பார்க்கப் போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம். விரல் விட்டெண்ணக் கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும். றாக்கைகள், ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல இருக்கும். கடையில் கால்வைக்க இடம் பற்றாது என மொழியத் தோன்றும். ஒரு கோடி சூரியப் பிரகாசமுள்ள அரிய வஸ்து உள்ளே நுழைந்து விட்டதென, ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கம், அண்ணி சிலநொடி நேரம்தான் நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும், கல்லா மேசையடியில் உட்கார வேண்டும், என்பதில் அண்ணாவுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது, உடனேயே போய் விடுவாள். எல்லாமே வெறிச்லீரிடி விட்டது போல ஆகிவிடும் கடைச் சிப்பந்திகள் வாட்டமுற்றது போலக் காசு எண்ணியெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும், உப்பும் இட்டுப் புகைக்கும் போது மிளகாயின் காரநெடி உறைப்பதேயில்லை. 'படபட'வென பொரிந்து வெடிக்கும். "இலட்சுமி கடாட்சம்...இலட்சுமி கடாட்சம்" என்கிறார்களே; அது இதுதான் போலும்! எல்லோருக்கும் அண்ணி எதைக் கொடுத்தாள் என்று சொல்வது கடினம், பாலன், சுமி, சுதா எல்லாரும் அண்ணியைச் சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள்? அண்ணாந்து அவர்கள் இப்போ தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்தச் சுதா- அண்ணி வந்த போது ஒரு சின்னப்பெண்ணைப் போன்று அவளைத் தொட்டுப் பார்த்து கையை இழுத்துக் கொண்டவள்- அண்ணியுடனேயே ஒட்டிக்கொண்டாள். அவளைப் அண்ணியின் உடலிலிருந்து உதிரம் பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல். அந்த சுதா இனிப் போய்விடுவாள். இன்னும் ஒரேயரு நாள். அப்புறம் போய்விடுவாள். அண்ணியை விட்டுப் பிரிந்தே இராத சுதா பஸ் ஏறி....பிளேன் ஏறி, அவளுக்குரியவனிடம் போயே விடுவாள். 'அவன்' அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும். அவர்களுக்குள் முடிச்சுப் போட்டு வைத்தவளும் அண்ணி தான். முதுலில் சுதா பிணங்கினாள், பயந்தாள். "அந்த ஆள் வில்லன் மாதிரி இருக்கிறான்..." என்றாள். அண்ணி தேறுதல் சொன்னாள். "உங்கடை அண்ணா.... அப்ப, பொிய முனிவர் மாதிரி இருந்தாரே!...இப்ப எப்பிடி? எனக்கு என்ன குறைவைச்சார்.... அதெல்லாம் சாிவரும்...." அப்படிச் சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இடறிற்று. "எண்டாலும்...இந்த ஆம்பிள்ளை நம்பேலாதடி....சுதா" என்றாள் நைந்துபோன குரலில். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே 'ஏதோ' உண்டு! "இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய்...பிறகுபிறகு அண்ணியை பார்க்க நீ ஓடியா வரப்போறாய்.... எனக்குத் தொியாதா பெட்டையைப் பற்றி...." என்று நையாண்டியாகக் குத்தவும் செய்தாள். சுமியையும் இப்படித்தான் தனியே பிரித்தணுப்பினாள். சுமியின் 'விஷயம்' அண்ணா காதில் விழுந்ததும், அவர் வானத்துக்கும் பூமிக்குமாகப் பாய்ந்தார். "யாரவன்?" என்று குதித்தார். "எங்கடை அந்தஸ்தென்ன....குலமென்ன, கோத்திரமென்ன" என்று சொல்ல முனைந்தார். அண்ணி வேறுயாருக்கும் கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லிக் கடிந்தாள். அண்ணா தலையைக் குனிந்து கொண்டு கூனிக் குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ 'புகைச்சல்' உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான். சுமி மெளனமாய்ப் போனாள். ஆனால் அண்ணி அறிவாள், சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும் தாளாத பிரியம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதிரி மெளனமாக இருந்துவிட்டு, "லுதாியமாகக் காதல் பண்ணினேன்' கல்யாணம் பண்ணுவேன்" என அடம் பிடித்திருப்பாளா? எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்குத் தொியும். பாலனைப் பற்றியும் அறிவாள். அவனுக்கும் 'ஒரு இடம்' பார்க்கச் சொல்லி எப்போதிருந்தோ அண்ணாவை நச்சாித்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள். கெளசிக்குட்டியைப் பற்றி அண்ணியின் கற்பனைகளும், திட்டங்களும் எண்ணியோ எழுதியோ அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துக்கள் சேர்க்கத் தொடங்கிவிட்டான். எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறான். அண்ணாவுடனேயே அவள் எப்போதும் இருப்பாள். கிணறு பழுதுபார்க்கச் சொல்லி அவாிடம் சொல்லிச் சொல்லி அலுத்து, கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பிக் கட்டும், உட்சுவரும் ஆங்காங்கே புதிய பூச்சுக்களைக் காட்டி இளித்தன. இறைந்து விட்ட நீர்வளவெங்கும் ஓடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து திரிரீகின்றது. தேங்கிய நீரில் நட்சத்திரங்களும், குறைநிலவும், வீட்டின் பிரகாசமான வெளிவிளக்குகளும் பிரதிபலித்துத் தொிந்தன. அவற்றைப் பார்த்தபடியே எண்ணி சற்றே தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்னும் எப்படியோ? சுதா நாளைக்குப் போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன. கூடவே பிரிவும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத்தியது. 2 விடிகாலையில் சுதா பயணமாகிறாள். சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சபடுவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாரும் அண்ணியைச் சூழ உட்கார்ந்து அரசியலும், விலைவாசியும் பேசினார்கள். அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தான். கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது. அம்மா, பொிய பொிய பெட்டிகளில் விதவிதமான பளபளக்கும் சாறிகளும், தின்பண்டங்களம் திணித் திணிய அடுக்குவதைப் பார்த்து. சுதா அன்ரியை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா கொஞ்சலும் சிரிப்புமாக ஏதேதோ சொல்வதைக் கண்டது. ஆனால் சுதா அழுதாள். அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அம்மாவும் கூடத்தான் கொஞ்சமாக அழுதாள். அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது. ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம் மேலும் சிவந்து போயிற்று. அதைத் துடைக்க நேரமில்லாமல் அம்மா குசினிக்கும், அறைகளுக்கும், ஹோலுக்குமாக ஓடித்திரிகிறாள். எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல்லாம் ஓரே பிரகாசமாக ஜொலித்தது. அந்த ஜொலிப்பில், கெளசிக்குட்டிக்கு கண்ணைச் சுற்றியது. சீக்கிரம் தூங்கிப் போனது. கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும் வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார் தயாராக நின்றது. அப்பா பின்னுக்கு கைகளைக் கட்டியபடி வானத்தை அண்ணாந்து கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பொிதாகப் பொட்டு இட்டுக் கொண்டிருந்தாள். சுதா அன்ரி 'ரிப்ரொப்'பாக ஆயத்தமாக நிற்கிறாள். அவளிடமிருந்து நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள் கள்ளச்சிரிப்பொன்று ஓடியது. ஆனால் சுதா அன்ரி புறப்படும் போது மிகவும் அழுதாள். வாய்விட்டே அழுதாள். அம்மாவும் அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமி அன்ரியும் அழுதாள். அப்பா வெறெங்கோ பார்த்தவராய். "சாிதான்...வாங்கோடி....வாங்கோடி" என இலேசாக அதட்டினார். காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை. சுதா அன்ரி மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவை எல்லாம் பொியவர்களின் விஷயங்கள். அவற்றில் கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படிச் சொல்லித் தந்திருக்கிறாள். கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்ரியும், அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய் சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்ரி பாதியுடம்பை வெளியே நீட்டியபடி கைகளை ஆட்டியபடி போனாள். திரும்ப வரும்போது சுமி அன்ரியை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள். மெல்ல மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை விடிந்தது. வீடெல்லாம் 'ஓ' என்ற ஒரு மெளனம். வெறுமை. கடையில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுதாவைப் பற்றிய ஞாபகங்கள் மீண்டு மீண்டும் மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசித் தங்கை. அவளுடனான பிரியமான சில நினைவுகள் அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவைப் பற்றிய கவலைகளும் நிறைய இருந்தன. அவளது அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும், கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனைத் தேடிப்பிடித்து தம் அதைத் தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறள்! அவருக்கு அண்ணியைப் பார்க்கவேண்டு, அவளுடன் சிறிது நேரத்தைக் கழிக்கவேண்டும் போல இருந்தது. "அட...தம்பியவன.....நான் வீட்டுப்பக்கம் ஒருக்காப் போயிட்டுவாறான்....பாத்துக்கொள்ளுங்கோ...நான் வரச்சுணங்கினா சாவியைக் கொண்டந்து தந்திட்டுப் போங்கோ..." அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த மூடைகளினூடாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவாரீல் "சிவமயம், இலாபம்" என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தொிந்தது. "வீட்டுக்கா?...." "ஓம்..."என அண்ணா மெல்ல முனகினார். "தங்கச்சி போயிட்டாவோ?" தலையை ஆட்டினார். "எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது தானே.... சந்தோசம்..." "......" "தம்பி .....உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு...அது வந்த பிறகு தான் நீர் மனிசனா வந்தீர்...." அண்ணா அசட்டுச் சிரிப்புடன் நின்றார். "அப்ப நான் நிற்கிறன்...." "சாரீ" என்றாவது அண்ணா மேலே நடந்தார். அண்ணி வழக்கத்துக்கு மாறாக எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகித்துக் காணப்பட்டாள். அண்ணா மெதுவாக அவளருகில் போய் அமர்ந்தார். அண்ணி அவருக்கு வழக்கம் போல பணிவிடை செய்ய முந்தவில்லை. தன் பாட்டில் எங்கோ கவனமாக தலையை நீவி விட்டுக்கொண்டிருந்தாள். "என்னப்பா...அவ்வளவு யோசினை...." "ப்ச்...ஒண்டுமில்லை...." என்றாள் அசிரத்தையாக. "சுதாவை நினைச்சியா?.... "ஏன் அவளை நினைக்க வேணும்....போக வேண்டியவள் தானே....போவிட்டாள்...." "அப்ப....என்ன யோசினை" "கட்டாயம் உங்களுக்குச் சொல்ல வேணுமா?" "எனக்கு, என்னவோ என்னட்டையிருந்து கழண்டு போனது மாதிரிக்கு..." என்று தயக்கத்துடன் இழுத்தார். "கழட்டி எவளட்டைக் குடுத்தனீங்கள்?" அண்ணாருக்கு ஆச்சாியமாக இருந்தது. அண்ணி ஒரு போதும் சுரிருர் எனத் தைக்கும்படி இவ்வாறு கதைத்தவளல்ல. "சுமி போனாள்... சுதா போகிறாள்....பாலனும் ஒருத்திக்குப் பின்னாலை போவான்... கெளசியும் போகும்...." "போகட்டும்!" "பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது...." "ஏன் நீங்களும் உங்கடை 'அவளட்டை' போங்கோவன்!" "என்ன?!" "உங்கடை "அவளட்டை" அண்ணா அதிர்ந்தார். இதைப்பற்றி அண்ணிக்கு இலேசாகத் தொியும் என அண்ணா அறிவார். ஆனாலும் இத்தனை காலத்துக்குப் பிறகு இதை வெளிப்படையாக கேட்பாள் என அவர் எண்ணியதில்லை. அண்ணியும் கூட அதை விரும்பவில்லை. அப்படிக் கேட்பதனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும். ஆனால் இன்று அண்ணியின் மனம் மிகப்பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித்தானோ என்னவோ. கோடை காலத்து மழை மாதிரி! "ஏன் அவளை ஏமாத்தின்னீங்கள்?" "........" "அதுக்குப் பிறகும் தொடர்பிருக்கா?" "........" "இப்பவும் காணிறனீங்களா?" "........" "செலவுக்கு ஏதாவது குடுக்கிறனீங்களா?" அண்ணா விக்கித்துப் போயிருந்தார். "ஏன் ஏமாத்தின்னீங்கள்....என்ரை காசுக்காகவா?" அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். "சொல்லுங்கோ....என்னுடைய காசுக்காகத் தானே என்னைக் கட்டின்னீங்கள்...அவளில்லை தானே உங்களுக்கு ஆசை...ஆம்பிளையை நம்பக்கூடாது.... "அப்பிடி...எத்தனை ஆம்பிளையளோட உனக்குப் பளக்கம்" என அண்ணா திரும்பச் சாடினார். "என்னையும் உங்களைப் போல நினைச்சியளோ?" எனச் சீறுனாள். அந்தக் குரலில் தொனித்த உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிவிட்டுப் பார்க்க வைத்தது. அண்ணியின் அழகிய விழிகள் பெரு வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது. "போங்கோ...உங்கடை அவளட்டைப் போங்கோ...உங்களுக்கு அவளிருக்கிறதன்...." அண்ணாவின் கோபம், இயலாமை. அவமானம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டன. கைகள் முறுக்கேறின. கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின் கோபத்தை ஸ்பாிசிக்கும் முதல் தடவை. அண்ணியின் பொிய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக நனைந்து, ஒரு பொிய கண்ணீர்த்துளி பளபளவென மின்னியது. 'சொட்'டெனச் சிந்தித் தெறித்தது. அவன் பெறுமதி அளவிடற்காியது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும், காதலும் பொதிந்திருக்கிறது. அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளைத் தூக்கி முகத்தில் போட்டு மூடிக் கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து அழமாட்டாள். ஆளுமையும் மனவுறுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்! பிறகு கெளசி பள்ளிக் கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது. அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை. உடம்பைக் கழுவி தலை சீவிச் சிங்காரித்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை. கெளசி அப்பாவிடம் ஓடிற்று. பிறகு அம்மாவிடம் ஓடி அவளது கன்னத்தைத் தாங்கித் தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி புரியமையுடனும் பசியுடனும் அங்குமிங்கும் அலைந்து திரிந்தது. அப்புறம், வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே, அப்பாவும் அப்படியே! கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளைப் போட்டது, அம்மா ஒரு பெரு மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி நிமிர்ந்தார். பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங்கைச் சத்தம் 'சளசள' எனக் கேட்கவாரம்பித்தது. சோப்பின் நல்லன் வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனையுடன், கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கிப் போயிற்று. அண்ணி நிறைய நீராடினாள். ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி உலர்த்தினாள். பிறகு திலகமிட்டுக் கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம். அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமாரியைத் திறந்து அண்ணாவுக்கு பிடித்த அரக்கப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள். அண்ணாவோ வெனில், கிணற்றுக்கட்டில் உட்கார்ந்தபடியே வானத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பிரியமான நட்சத்திரங்களைத் தேடினார். அவற்றைக் காணவில்லை நிலவு வரவும் இன்னும் சற்ற நேரமிருந்தது. ஒளியற்ற நட்சத்திரங்கள் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெல்ல மின்னி பலகீனமாக முனகின. மோனமான மெல்லிய இருள் எங்கும் வியாபித்திருந்தது. நடமாடித்திரிரீய மனமற்றுப் போன காற்று முடவனைப் போல தழ்ந்தது. வெல்ல மெல்ல ஒரு பெண்ணின் இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்றக் கொண்டு அண்ணாவை நோக்கிச் சென்றது. அண்ணாவின் நாசியில் அதை தேய்த்தது. அண்ணாவின் கழுத்தைச் சுற்றி இரு மென்கரங்கள் மாலையென விழுந்தன. அவை ஈரலிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன. அதே சமயம் மெல்ல நடுங்கின. அண்ணாவை மெல்ல தம்முன்வளைக்க முயன்றன. பிறகு.... "உங்களுக்கு ...நானிருக்கிறேன்..." என மிகத் தவிப்புடனும், அடக்க முடியாமல் பீரிட்டெழும் அன்புடனும் ஒரு மிருதுவான பெண்குரல் அபயமளித்ததைக் கேட்டவுடன், காற்று அவ்விடத்தை விட்டு நாகாருகமாக நழுவிற்று. அண்ணா திரும்பிப் பார்த்தார். அந்த இருளிலும் ஜொலிக்கும் இரு விழிகளைக் கண்டார். அவை அண்ணாவை மன்னித்த சேதியை இதமாகத் தொிவித்தன. அவள் மீண்டும் தன்புறம் அவரை இழுத்தாள். அப்புறம்; அன்றிரவு அண்ணியால் தூங்க முடியவில்லை. அண்ணாவுக்கும் தூக்கம் வரவில்லை. * * *

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org