<$BlogRSDUrl$>

மாமியாரா? மருமகளா? மாமியார்-மருமகள் சண்டையில்லாத வீடுகளைக் காண்பது அரிது. மாமியாரும், மருமகளும் ஒற்றுமையில்லாத வீடுகளில் அமைதி நீடிப்பதில்லை. தாய்- மகன் உறவில் புதிதாக வந்திருக் கும் மருமகளாலும், கணவன் -மனைவி உறவில் மாமியாராலும் விரிசல் உருவாகி விடுமோ என்ற பயமே இவர்களது சண்டை களின் அடிப்படை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், சகிப்புத் தன்மை இல்லாமல், தேவையற்ற விஷயங்களுக் கெல்லாம் மோதிக்கொள்ளும் மாமியார்களுக்கும், மருமகள்களுக் கும் சில அட்வைஸ்... மாமியார்களுக்கு... நீங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்தான் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். அப்போது உங்களது மனநிலை, உங்களுக்கு இருந்த பயங்கள், அவற்றை சமாளிக்க நீங்கள் பட்ட கஷடங்கள் போன்றவற்றை நினைவுப்படுத்திப் பாருங்கள். இப்போது உங்களுக்கு மருமகளாக வந்திருக்கும் பெண்ணுக்கும் அதே மனநிலை இருக்கக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வீட்டுப் பழக்க வழக்கங்களும், உங்கள் மரு மகள் வீட்டாரது பழக்க வழக்கங்களும் பல வகைகளில் வேறுபடலாம். பல வருடங்களாக தான் வளர்ந்த சூழ்நிலையிலிருந்து விலகி, புதிய சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதென்பது யாருக்குமே சுலபமல்ல. எனவே, உங்களது மரு மகள் உங்கள் வீட்டில் தனது பிறந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும்போது, அவற்றில் குற்றம் கண்டு பிடிக்காதீர்கள். மருமகள்தான் வந்தாயிற்றே என்ற எண்ணத்தில், முதல் வேலையாக வீட்டு வேலைகள் அனைத்தையும் அவள் தலையில் கட்டப் பார்க்காதீர்கள். உங்களது உடல் ஆரோக்கியம் நன்றhக இருக்கும் பட்சத்தில், வழக்கம்போல உங்கள் வேலைகளை நீங்களே தொடருங்கள். மருமகள் கைகளை எதிர்பார்க்காமல் உங்கள் வேலை களைச் செய்தீர்களேயானால், அது அவளைத் தானாகவே மனமுவந்து, அவற்றைப் பகிர்ந்து கொள்ள வைக்கும். வீட்டு விஷயங்கள் எதையுமே உங்கள் மருமகளிடமிருந்து மறைக்க நினைக்கா தீர்கள். உங்கள் மருமகளது வரவிற்கு முன்பு வரை, வீட்டு விவகாரங்களுக்கான முடிவெடுக்கும் ஒட்டு மொத்த உரிமையும் உங்களிடமே இருந்திருக்கலாம். ஆனால் அவள் வந்த பிறகு எல்லா விஷயங்களையும் கலந்து பேசி முடிவெடுப்பதே நல்லது. மருமகள் செய்யும் தவறுகளை, அவளிடம் பக்குவமாக, அன்புடன் சுட்டிக் காட்டுங்கள். அதை விட்டு விட்டு, அவள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளைப் பற்றி உங்கள் மகனிடமோ, வேறு யாhpடமோ குறை கூறிப் பேசாதீர்கள். உங்களது உற வினர்களிடமோ, அக்கம் பக்கத்தினாரி டமோ மருமகளை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே எழும் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்த்து, நாகாரிகமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள். மருமகளையும் உங்கள் சொந்த மகளாகவே நினைத்துப் பழகுங்கள். பிரச்சினையே வராது. மருமகள்களுக்கு... மருமகளது வரவு, தனக்கும், தன் மகனுக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி விடுமோ என்ற பயம் எல்லா மாமியார்களுக்கும் இருக்கத்தான் செய்யும். அதன் விளைவாக உங்களது செய்கைகளில் மாமியார் குற்றம் கண்டுபிடிக்க முற்படலாம். அதைப் பெரிது படுத்தாதீர்கள். உங்களது பிறந்த வீட்டுச் Nழ்நிலைக்கும், புகுந்த வீட்டுச் சூழ்நிலைகளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கக் கூடும். எனவே புகுந்த வீட்டுச் சூழலுக்கும், அந்த வீட்டாருக்கும் ஏற்ப அனுசரித்து வாழ முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில் சில நாட்களுக்காவது உங்களது மாமியாரது ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுங்கள். வீட்டு வேலைகளை மாமியாராகச் சொன்னால் செய்யலாம் என்றிருக்காமல் நீங்களாகக் கேட்டுச் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் மாமியாரை உங்கள் அம்மாவுடன் ஒப்பிடாதீர்கள். உங்கள் மாமியாரைப் பற்றிக் கணவனிடமோ, பெற்றோரிடமோ, வேறு யாரிடமோ குறை சொல்லிப் பேசாதீர்கள். உங்கள் கணவரது பெற்றோரை, உங்கள் பெற்றோராகவும், அவரது உடன் பிறந்தோரை உங்கள் உடன் பிறப்புகளாகவும் நினைத்துப் பழகுங்கள்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
திருமணத்துக்கு முன் செக்ஸ்..? தமிழ்நாட்டில் மட்டுமே மாதத்திற்கு சுமார் நு}று பெண்கள் வரை கருக்கலைப்பு செய்து கொள்கிறhர்களாம். இதிலென்ன ஆச்சாpயம்? என்கிறீர்களா? இந்தப் பெண்கள் எல்லோருமே திருமணமாகாத வர்கள். திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபட்டு, கர்ப்பமடையும் பெண்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாpத்து வருகிறது. திருமணத்திற்கு முன்பாக இது மாதிhp தகாத உறவில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் ஆடம்ப ரத்தில் ஊறிய மேல்தட்டுப் பெண்கள் என்ற தவறhன கருத்து பரவலாக உண்டு. ஆனால் பாதிக்கப்படும் பெண்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், சமுதாயத்தின் எந்தப் பிhpவைச் சேர்ந்த பெண்களுமே இதற்கு விதிவிலக்கல்ல என்று தொpகிறது. திருமணத்திற்கு முன்பாகத் தன் ஆண் நண்பருடனோ, காதலருடனோ செக்ஸில் ஈடுபடுவது பொpய குற்ற மில்லை என்ற மனோபாவம் பல பெண்களுக்கு ஏற்பட ஆரம்பித்தி ருக்கிறது. கற்பு, கலாச்சாரம் போன் றவற்றின் மீதான அவர்களது மதிப்பும் குறைந்து வருகிறது. ‰பெற்றேhரால் புறக்கணிக்கப்படுபவர்கள், தான் பழகும் ஆணின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பவர்கள், செக்ஸ் கல்வியைப் பற் றியோ, திருமணத்திற்கு முன்பான உறவினால் ஏற்படக் கூடிய பயங்கரங்களைப் பற்றியோ அறியாதவர்கள், கருத்தடைச் சாதனங்களைப் பற்றித் தொpயாதவர்கள் போன்ற பெண்களே பெரும்பாலும் டீன் ஏஜ; பருவத்தில் வழி தவறிப் போகிறhர்கள். ‰ டீன் ஏஜ; பருவத்தில் ஆண்கள் மீது பெண்களுக்கும், பெண்கள் மீது ஆண்களுக்கும் இனக்கவர்ச்சி ஏற்ப டுவது இயற்கை. இது வெறும் இனக் கவர்ச்சி தான் எனப் புhpந்து கொள் ளாமல், காதல் என நினைக்கும் பெண்கள் மிகச் சுலபமாக தவறhன உறவுகளுக்கு அடிமையாகி விடுகி றhர்கள். இப்படிப் பட்ட பெண்கள் பருவ வயதைக் கடந்த பிறகும் தனது தவறை நினைத்துக் காலம் முழுவதும் குற்ற உணர்விலேயே புழுங்கிக் கொண்டிருப் பார்கள். ‰ திருமணத்திற்கு முன் தகாத உறவில் ஈடுபடுவதால் மனத்தளவிலும், உடலளவிலும் பொpதும் பாதிக்கப் படுவது பெண்கள்தான். ஒரு ஆணிடம் காதல் வயப்படும் பெண், அவன் மீதான நம்பிக்கையில் திருமணத்திற்கு முன்பே கற்பை இழக்கிறhள். எதிர்பாராத விதமாக அந்தக் காதல் நிறைவேறhமல் போகும் போது, தனது செயலை நினைத்து, அவமானத்தில் தலை குனிவதோடு, சில சமயங்களில் தற்கொலைக்குக் கூட முயற்சிக்கிறhள். திருமணத்திற்கு முன்பான தகாத உறவுகள் ஆண்களைப் பொpயளவில் பாதிப்பதில்லை. இத்தகைய பயங்கரங்களிலிருந்து பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள டீன் ஏஜ; பெண்களுக்கு சில அறிவுரைகள்.... ‰ இனக்கவர்ச்சிக்கும், காதலுக்கும் உள்ள வேற்றுமையைப் புhpந்து கொள்ளுங்கள். டீன் ஏஜ; பருவத்துக் காதலில் பக்குவம் இருக்காது. ‰ உங்கள் காதலர் மீது உங்களுக்கு அபார நம்பிக்கை இருக்கலாம். அவர் உங்களைக் கைவிடமாட்டார் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம். ஆனாலும் திருமணத் திற்கு முன்பான உரசல்களிலோ, தீண்டல்களிலோ உங்களுக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை அவாpடம் உறுதியாகச் சொல்லி விடுங்கள். ‰ திருமணத்திற்கு முன்பான செக்ஸ் உறவு, திருமணத்திற்குப் பிறகான அவர்களது தாம்பத்திய வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய உதவும் என்பது விடலைப் பருவத்தினாpன் தவறhன நம்பிக்கை. ஆனால் இப்படிப்பட்ட உறவுகள் அவர்களது நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையுமே பாழாக்கி விடும் என்பது தான் நிஜம். ‰ ஆண்- பெண் நட்பில் தவறில்லை. அந்த நட்பில் காமத்திற்கு இடம் இருக்கக் கூடாது. ‰ டீன் ஏஜpல் ஏற்படும் உடல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தன்னை பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும். படிப்பு, யோகா போன்ற ஏதேனும் ஒன்றில் மனத்தைத் தீவிரமாகச் செலுத்தினால் மற்ற விஷயங்களில் மனம் அலை பாயாது. ‰ திருமணத்திற்கு முன்பே கற்பை இழந்தவளை மணக்க எந்த ஆணும் முன்வர மாட்டான். காதலன் தானே என்று இத்தகைய உறவில் ஈடுபடுவது கூட பிற்காலத்தில் திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் சந்தேகம் என்ற புயலைக் கிளப்பி விடும் என்பதில் ஆச்சாpயமில்லை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
விவாகரத்து விவரங்கள் விவாகரத்து சட்டம் என்பது மதத்திற்கு மதம் வேறுபடுகிறது. கணவனும், மனைவியும் இந்துக்களாக இருந்து இந்து முறைப்படி திரு மணம் செய்திருப்பின், இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் கை விட்டு, பின் தொடர்பு எதுவுமின்றி பிhpந்து தனியே வாழ்ந்திருந் தால் அதுவே போதுமானது. கணவனும், மனைவியும் கிறிஸ்தவர்களாக இருந்து, கிறிஸ்தவ முறைப் படி திருமணம் செய்திருப்பின், இந்திய விவாகரத்துச் சட்டத்தின் விதிமுறைப்படி விவாகரத்து செய்யலாம். இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் விவாகரத்து செய்வதற்கான உhp மைகள் குறைவு. கணவன் தன் மனைவி இல்லாத வேறெhரு பெண்ணுடனும், மனைவி தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்தா லும், கணவனையோ அல்லது மனைவியையோ பற்றி ஏழு ஆண்டுக ளாக எந்த விவரமும் தொpயாமலிருந்தாலும் (அந்த நபர் இறந்து விட்டதாகக் கருதி) விவாகரத்து கொடுக்கப்படும். கணவனோ, மனை வியோ மனநிலை சாpயில்லாதவர்களாக இருந்தாலும், இருவாpல் யாருக்கேனும் தொற்றும் விதத்தில் பால்வினை நோய் இருந்தாலும் விவாகரத்து பெறலாம். கணவன்-மனைவி இருவரும் சம்மதித்து விவாகரத்து கோhp மனு கொடுத்தால் உடனடியாக விவாகரத்து கிடைத்து விடும். விவாக ரத்தில் இருவாpல் யாராவது ஒருவருக்கு ஆட்சேபம் இருந்தாலும் விவாகரத்திற்கான காரணங்களை விளக்கி விவாகரத்து பெறதாம தமாகலாம். விவாகரத்து செய்ய விரும்பும் தம்பதியர் முதலில் வழக்கறிஞரை அணுக வேண்டும். அவர் மனு தயாhpத்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்வார். எதிர் மனுதாரருக்கு நீதி மன்றத்திலிருந்து முதலில் அஞ்சல் அட்டையுடன் தபால் வரும். அதில் கையெழுத்து போட்டு விட்டு நீதி மன்றத்திற்கு வராமலிருந்தால் ஒரு தலை பட்சமாக விவாகரத்து கிடைக்கும். தபாலைப் பெற்றுக் கொண்டு நீதி மன்றத் தை அணுகி, எதிர்ப்பு தொpவித்து விட்டால் விவாகரத்து கிடைக்க பல மாதங்கள் ஆகும். அந்தக் காலக் கட்டத்தை இத்தனை மாதங்கள் என்று கணிக்க முடியாது. விவாகரத்து கோரும் தம்பதியருக்குக் குழந்தைகள் இருந்தால் பிரச்சி னைதான். தந்தை ஒழுக்கமில்லாதவராகவும், தாயின் பொருளாதார நிலை, பிறர் உதவியின்றி குழந்தையை வளர்த்து ஆளாக்கும் சக்தி யிருந்தால் குழந்தையை தாயே வளர்க்கலாம். ஒரு சில வழக்குகளில் குழந்தையின் வயதைப் பொறுத்து அதன் சம்மதத்தின் போpல் தாயி டமோ, தந்தையிடமோ நீதி மன்றம் ஒப்படைக்கிறது. விவாகரத்து செய்த தம்பதியர் மனம் திருந்தி மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய நீதி மன்றத்தில் மனு போட்டு அந்தத் தீர்ப்பு ரத்தானதும் சேர்ந்து வா ழலாம். இந்த விஷயத்தில் பெண்கள் மிக ஜhக்கிரதையாக இருக்க வேண்டும். கணவன் மனம் திருந்தி விட்டதாக நம்பி உடலுறவுக்கு இணங்கி விடக் கூடாது. பிறகு அதனால் உருவான குழந்தையைத் தன் குழந்தை இல்லை என்று கணவன் மறுத்து விடும் அபாயம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
பெனசிர் பூட்டோ --------------------- அன்றைக்குப் பொழுது ஏன்தான் விடிய வேண்டுமோ என்று இருந்தது அவளுக்கு. சின்னப் பெண். கல்லு}hpயில் படித்துக் கொண்டிருந்த பெண். அன்பான அப்பா, அம்மா, மூன்று சகோ தரர்களுடன் மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் அதுவரை பார்த்திராமல் வளர்ந்த பணக்கார வீட்டுப்பெண். முதல் முறையாக ஒரு துக்கம் அன்று அவளுக்கு வந்திருந்தது. அன்றைக்குத்தான் அவளது தந்தையைத் தூக்கிலிடப் போகிறhர்கள் என்று கேள்விப்பட்டிருந்தாள். அவள் பேர் பெனசிர். அவளது அப்பாவின் பெயர் ஜுல்பிகர் அலி பூட்டோ. பாகிஸ்தானில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று பிரதமரான முதல் மனிதர். 1947-லேயே பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற போதும் அந்நாட்டில் உருப் படியான ஒரு தேர்தல் நடந்து, பிரதமர் என்றெhருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது 1973-ல்தான். 73-ல் பிரதமரான பூட்டோ, அடுத்த ஆறு வருஷ காலத்துக்கு அந்நாட்டின் தன்னிகாpல்லாத பெருந்தலைவராக விளங்கியவர். 1979-ம் வருடம் மீண்டுமொரு ராணுவப் புரட்சி நடந்து, ஜென்ரல் ஜpயா உல்ஹக், பூட்டோவைப் பதவி நீக்கமும், கைதும் செய்து சிறையில் அடைத்தார். என்னென்னவோ உப்புப் பெறhத காரணங் கள் சொல்லி, அவரைத் தூக்கிலிட்டார். அன்றைக்குக் காலை வெகு சீக்கிரமே பெனசிர் தன் தாயுடன் சிறைச்சாலையின் வாசலுக்குப் போய் நின்று விட்டாள். வெகுநேரம் கழித்து ஒரு சிறைக்காவலர் வெளியே வந்து பெனசிரை அழைத்தார். ஓடிச் சென்று விவரம் கேட்டவாpடம் ஒரு பார்சலை மட்டும் கொடுத்தார். பூட்டோ இறுதியாக அணிந்திருந்த பைஜhமா, குர்த்தா, அவர் சாப்பிட்ட தட்டு, தம்ளர், போர்த்திக் கொண்டிருந்த போர்வை அவ்வளவுதான். அதற்குமுன் பெனசிருக்கு அரசியல் தொpயாது. ஜpயா உல் ஹக் என்கிற நபர் எப்படிப்பட்டவர் என்பது தொpயாது. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதுகூட முழுசாத் தொpயாது. அவர் எங்கோ கண்காணாத தூரத்திலிருந்த ஹhர்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். தந்தை கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்த தும்தான் பாகிஸ்தானுக்கு வந்தார். தந்தையின் மரணம்தான் அவரது கண்களைத் திறந்தது. சொந்த நாட்டில் செய்ய வேண்டிய காhpயங்கள் எத்தனையோ இருக்க, வெளிநாட்டில் பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம் என்று நினைத்தார். தந்தையைக் கொன்ற ஜpயா என்கிற கொடுங்கோலனைப் பழி வாங்குவது ஒன்றுதான் தன் வாழ்நாள் லட்சியம் என்று முடிவு செய்துகொண்டார். அப்போது பாகிஸ்தானில் அடிக்க ஆரம்பித்தது தான் பெனசிர் புயல்* அந்த ஊருக்கு ஒரு புரட்சித் தலைவியாக பெனசிர் ஆகிப்போனார். கோடிக் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குhpய காவல் தெய்வமாகவும்* நம்புங்கள், அப்போது பெனசிhpன் வயது சாpயாக இருபத்திநாலு* ஜpயா உயிருடன் இருந்த காலம் வரை அவர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியெடுத்து விட்டார் பெனசிர். ஆனால் பெனசிhpன் வாழ்க்கை மிகவும் பாpதாபகரமானது. எந்தத் தாயாவது, தன் மகள் மக்கள் மத்தியில் புகழடைவதை விரும்பாதவராக இருப்பாரா? பெனசிhpன் அம்மா அப்படித்தான் இருந்தார். கட்சித் தலைவராகத் தான் இருக்க, எந்தப் பொறுப் பிலும் இல்லாமல் வெறும் பொதுக் கூட்டப் பேச்சாளராக மட்டும் இருக்கிற தன் மகள் எப்படி இப்படியொரு Nப்பர் ஸ்டார் ஆனாள் என்று பெனசிhpன் தாய் நுஸ்ரத்துப் பொறுக்கவே இல்லை* மகளின் வளர்ச்சிக்கு அவரே முட்டுக் கட்டை போடத் தொடங்கினார். இன்னொரு பக்கம், நுஸ்ரத்தின் ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட உறவுக்காரர்களெல்லாம் கட்சியை என்னவோ பிரை வேட் லிமிடெட் ப்ராபர்டி மாதிhp பாவித்து, ஆளுக்கு ஆள் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார்கள். வேறெhரு பக்கம், பெனசிர் விரும்பி மணந்துகொண்ட ஆசிஃப் சர்தாhp என்கிற சிந்திக்காரர் மிகப்பொpய லஞ்ச சிகாமணியாக இருந்தார். அவருக்குப் பாகிஸ்தானில் பட்டப் பேரே பத்து பர்சண்ட் சர்தாhp என்பதுதான்* இத்தனை தடைகளையும் பொறுமையாக சகித்துக் கொண்டு சுமார் பத்து வருஷ காலம் அதாவது ஜpயா உல் ஹக் ஒரு விமான விபத்தில் மரணமடையும் வரை-மௌனம் காத்து, அதன்பின் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அபாரமான வெற்றியடைந்து பாகிஸ்தானின் பிரதமரான பிறகும் பெனசிருக்கு ஏனோ நல்ல காலம் பிறக்கவில்லை. மேற்சொன்ன சொந்தக்காரர்களின் திருவிளையாடல்களால், அவர் பேர் தொடர்ந்து hpப்பேராகிக்கொண்டே இருந்தது. இத்தனைக்கும் பெனசிhpன் ஆட்சிக்காலம் முழுவதும் அவருக்கும் அப்போதைய பாக்.அதிபரான குலாம் இஷhக் கானுக்கும் மிக நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. ராணுவ மும் பிரதமரை மதித்தது. அதே காலக்கட்டத்தில்தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெhPப் ஒரு பொpய அரசியல் தாதாவாக வளர்ந்துகொண்டிருந்தார். அவரை வைத்து காய் நகர்த்தலாமா என்று ஐ.எஸ்.ஐ.யோசித்துக் கொண்டிருந்தபோது, பெனசிhpன் சகோதரரான தீவிரவாதி மிர் முர்தசா மர்மமான முறையில் இறந்து போனதும் சிந்திகளுக்கும் முஹhஜpர் எனப்படும் இன்னொரு இனக்குழுவினருக்கும் பொpய தகராறு வந்து மாபெரும் கலவரமானதும் இதுபோன்ற இன்னும் சில பிரச்சினைகளும் உண்டாகி, பெனசிரை செயல்படவிடாமல் அடித்து விட்டன. இந்த பிரதமர் வேஸ்ட், மருவாதியாக ஆட்சியைக் கலைத்து விடுங்கள் என்று அப் போது ராணுவத் தளபதியாக இருந்த மிர்ஸh அஸ்லம்பேக் என்பவர் ஜனாதிபதி குலாம் இஷhக்கானிடம் எச்சாpத்தார். ஐ.எஸ்.ஐக்குப் பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது* 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி பெனசிhpன் ஆட்சி கலைக்கப்பட்ட போது அவர் ஒன்றரை வருஷ காலப் பிரதமராக மட்டுமே இருந்தார். மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு எத்தனையோ பல சிறப்பான திட்டங்களை அவர் வகுத்தி ருந்தார். குறிப்பாக, நிலச்சீர் திருத்தங்களில் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்தது. பாகிஸ்தானில் கடத்தல் காரர்களின் நடமாட்டத்தைக் கணிசமாக அவர் குறைத்தி ருந்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப் படுத்தி யது. விவசாயத் துறைக்கு நிறைய மானியங்கள்; அளித் தது என இன்னும் கூடச் சொல்லலாம். ஆனால், சொந் தக்காரர்கள் செய்த சதியா லேயே அவரது முதல் பதவிக்காலம் அற்ப ஆயுளில் முடி வடைந்தது. அப்புறம் அங்கே நவாஸ் ஷெhPப் பிரதமரானது. அதற்கடுத்த எலெக்ஷனில் அவரை வீழ்த்திவிட்டு பெனசிர் மீண்டும் பிரதமரானதெல்லாம் ஒரு ஹிந்தி மசாலா சினிமாக் காட்சிகள் மாதிhp மிகுந்த பரபரப்பு மிக்கவை. ஜனநாய கம்தான் அப்போது அங்கே இருந்ததென்றhலும் நடந்த காhpயங்களெல்லாம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கக் கூடியவையாகவே இருந்தன. 1993-ல் பெனசிர் மீண்டும் பாகிஸ்தானின் பிரதமரான போது முன்னர் செய்த எந்தத் தவறும் மீண்டும் செய்யப்படக் கூடாது என்ப தில் மிக உறுதி யாகவே இருந் தார். ஆனால் இம்முறை அவரது சொந்தக்காரர்களால் அல்லƒ அமைச்சரவை சகாக்களால் அவருக்குப் பெருந்தொல்லை கள் உண்டாயின. மேலும் ஒரு பெண் வந்து நாட்டாமை செய்வதா என்று ஐ.எஸ்.ஐ. கங்கணம் கட்டிக்கொண்டு அவரைக் கவிழ்ப் பதற்கான சகல வேலைகளையும் தொடர்ந்து செய்து கொண் டிருந்தது. 1993-லிருந்து 96 வரையிலான தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதையுமே முள் கிhPடம் சுமந்துதான் கழித்தார் பெனசிர். பாகிஸ்தானில், ஒருத்தர் என்றhல் ஒருத் தர்கூட அவருக்கு ஆதரவாக இல்லை. அம்மா ஒரு பக்கம். புருஷன் ஒரு பக்கம். நவாஸ் ஷெhPப் எதிர்ப்பக்கம். ஐ.எஸ். ஐயோ எல்லா பக்கமும்* இடி, இடி என்று எல்லாரும் இடித்துக்கொண்டே இருந்தார்கள் அவரை. அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும் பெனசிர் செய்த ஒரு காhpயம்தான் அவரை சாpத்திரத்தின் பக்கங்களில் இடம்பெறச் செய்தது. அதற்கு முன் எந்த ஒரு பாகிஸ் தான் பிரதமரோ, அதிபரோ காட்டாத அளவுக்கு இந்திய உறவு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தி யவர் பெனசிர். அவரது ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் நமக்கு பாகிஸ்தானால் மண்டைக்குடைச்சல் இல்லாதிருந்தது. மேலும் எல்லை தாண்டிய பயங் கரவாதத்தைத் தூண்டிவிடும் சக்திகளை கூடியவரை கட்டுப் படுத்தி வைக்க அவர் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் தவறhமல் செய்தார். இதனை வைத்தே அவரை ஒரு தேச விரோதி யாகச் சித்தாpக்கும் வேலைகளில் இறங்கி விட்டது ஐ.எஸ்.ஐ. ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், கொலை வழக்குகள், கடத்தல் வழக்குகள், இனப்பிரச்சினை மோதல்கள் என்று பெனசிhpன் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நடந்த அட்டூழியங்களைக் காரணம் காட்டி 1996-ல் அதிபர் பரூக் லாஹிhp அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பிறகு மீண்டும் பென சிரால் இன்றுவரை பாக். அரசியலில் தலை எடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எந்தெந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவரது ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட் டதோ, அதே குற்றச்சாட்டுகள் பின்னால் மிகச் சாதாரண விஷயமாகி, மீண்டும் ராணுவ ஆட்சியே உண்டாகும் அளவுக்கு பாகிஸ்;தானின் அரசியல் நாறிவிட்டதை விவாpக்கவே வேண்டாம்* பலமுறை சிறைவாசம், குடும் பப் பிhpவு, மனக்கசப்புகள் என்று நிறைய அனுபவித்து விட்டே நாட்டைவிட்டு வெளியேறி, வளை குடா தேசங்களிலும் ஐரோப்பிய தேசங்களிலும் தங்கி, அங்கிருந்தபடிக்கு பாக்.கில் தம் கட்சியை வழி நடத்தி வருகிறhர் பெனசிர். அவரது அரசியல் எதிhpயான நவாஸ்; ஷெhPப் இன்றைக்கு அட்ரஸ் இல்லாமல் போய்விட் டார். ஆனபோதும் பெனசிர் திரும்ப இய லாதவாறு அங்கே முஷhரஃபின் ராணுவ ஆட்சி நடக்கிறது. பாகிஸ் தானில் மீண்டும் ஜனநாயகம் வரும் என்று அம்மக்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால் பெனசிருக்கு நம் பிக்கை இருக்கிறது. ஜpயா வுக்கு எதிராக அவர் நடத்திய பத்தாண்டு கால மௌன யுத்தம் இப்போது முஷhரப் புக்கு எதிராக மீண்டும் தொடங்கியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் ஆனாலும் பெனசிர் காத்தி ருப்பார். ஏனெனில் சாதனை யாளர்கள் தாமதங் களாலோ, தோல்வி களாலோ பாதிக்கப் படுவதே இல்லை*

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org